Pages

Wednesday, May 15, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 9

 

74. கே: எந்த சிராத்தம் நஷ்டமானதாக கருதப்படும்
: அத்யயனம் செய்த ப்ராம்ஹணன் இல்லாத சிராத்தம் நஷ்டமானதாக கருதப்படும். [எந்த சிராத்தத்தில் அத்யயனம் செய்த ப்ராம்ஹணன் வரிக்கப்படவில்லையோ அந்த சிராத்தம் நஷ்டமாம்.]

75. கே: எந்த யாகம் பயனற்றது?
: எதில் வேதத்தில் கூறியபடி தக்ஷிணை கொடுக்கப்படவில்லையோ அந்த யாகம் பயனற்றது'
லோபத்தை ஒழிக்காத மனிதன் இறந்தவனுக்கு சமம் என்று 72 ஆம் கேள்விக்கு சொல்லப்பட்டது. 73-75 வது கேள்விகளும் பதில்களும் அதை ஒட்டியவையே.

76. கே: திக் என்றால் எது? [அதாவது உபதேசம் செய்யக்கூடியவர் யாவர்?]
: வேதங்களை நன்கு கற்று அறிந்தவர்.

77. கே: ஜீவனுடைய ஸ்வரூபம் எது?
: ப்ருஹ்ம ஸ்வரூபமே ஜீவனின் ஸ்வரூபம்.

78. கே: எது அன்னம்?
.கே: எது அன்னத்தை உண்டு கரைப்பதைப்போல கரைக்கப்பட வேண்டியது?
: இந்திரியங்களும் அவற்றால் அறியப்படும் இப்பிரபஞ்சமும்.
.: இவை மித்யை என்று அறிந்து இவற்றை தள்ளிவிட வேண்டும்.

79. கே: எது விஷம்?
: காமமே விஷம்.
.: ஜனனம் மரணம் ஆகிய சம்சாரத்தை தருவதால் காமமே விஷம்.

76-79 காமத்தை ஒழித்து குரு உபதேசத்தால் பிரபஞ்சம் மித்யை என உணர்ந்து அதைத்தள்ளிவிட்டு ஜீவ பிரும்ஹ ஐக்கியத்தை அறிய வேண்டும் என்பது கருத்து.

80. கே: சிராத்தத்துக்கு காலம் எது?
: நல்ல பிராம்ஹணன் கிடைக்கும் காலமே சிராத்தத்துக்கு காலம்.
.: ஸத் பாத்திரம் கிடைக்கும் பொழுதே தானம் முதலியவற்றை செய்துவிட வேண்டும். நல்ல ஆசார்யன் கிடைக்கும் பொழுதே தத்துவத்தை அவரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும்.

No comments: