Pages

Tuesday, May 14, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 8

 
61 .கே: எதை விட்டால் வருந்தாமல் இருக்கலாம்?
: கோபத்தை விட்டால் வருந்தாமல் இருக்கலாம்.

62. கே: எதை விட்டால் பணக்காரன் ஆகலாம்?
: காமத்தை விட்டால் பணக்காரன் ஆகலாம்.

63. கே: எதை ஒழித்தால் சுகத்தை அடையலாம்?
: லோபத்தை எதை ஒழித்தால் சுகத்தை அடையலாம்.
காமம் என்பது பொருள் இன்னும் வேண்டும் என்ற ஆசை. லோபம் என்பது கிடைத்த பொருளை எக்காரணம் கொண்டும் செலவு செய்ய மனமில்லாமை.

64. கே: ப்ராம்ஹணனுக்கு தானம் செய்தால் அதனால் உண்டாகும் பயன் யாது?
: தர்மம்.

65. கே: நடிகர்களுக்கு செய்யப்படும் தானத்துக்கு பயன் யாது?
: புகழ்.

66. கே: சேவகர்களுக்கு தானம் செய்வது எதற்காக?
: அவர்களை ரக்ஷிப்பதற்காக.

67. கே: அரசர்களுக்கு தானம் செய்வது (வரி கொடுப்பது) எதற்காக?
: பயமில்லாமல் இருக்க.
வரி கொடுக்காது போனால் தண்டனை கிடைக்குமே என்ற பயம் ஏற்படுவதால்.

68. கே: ஆத்ம ஸ்வரூபம் எதனால் மறைக்கப்பட்டிருக்கிறது?
: அஞ்ஞானத்தாலும் அதனால் தோன்றும் பிரபஞ்சத்தாலும் மறைக்கப்பட்டிருக்கிறது.

69. கே:சுஷுப்தி காலத்தில் ஆத்மா ஏன் பிரகாசிப்பதில்லை?
:அப்போது அஞ்ஞான காரியமான பிரபஞ்சம் தோன்றாது போனாலும் அஞ்ஞானம் அழியாமலே இருக்கிற படியால் ஆத்ம ஸ்வரூபம் பிரகாசிப்பதில்லை.

70. கே: சினேகிதர்களை எதனால் இழக்கிறான்?
: பேராசையால்.

No comments: