Pages

Saturday, May 11, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 5



31. கே: வேகத்தால் விருத்தி அடைவது எது?
: நதீ.

32. கே: வேறு தேசத்துக்குச் செல்லுகிறவனுக்கு துணைவர் யார்?
: தன்னுடன் கூட வரும் கூட்டத்தினரே துணைவர்களாம்.

33. கே:வீட்டில் இருக்கின்றவனுக்கு உதவி புரிகின்றவர் யார்?
: மனைவி.

34.கே: வியாதியால் பீடிக்கப்பட்டவனுக்கு துணைவன் யார்?
: வைத்தியன்.

35. கே: இறக்கின்றவனுக்கு எது துணை புரிகின்றது?
: தானம்.

36. கே: அனைவருக்கும் அதிதி யார்?
: ஆஹவனீயம் முதலிய அக்னி. (அனைவரும் அக்னி உபாசனம் செய்ய வேண்டும் என்பது கருத்து.)

37. கே: எந்த தர்மம் வெகு நாளாக உள்ளது?
: மோக்ஷத்திற்கு சாதகமான யாகம் முதலியவை வெகு நாட்களாக உள்ளன.

38.கே: அமிருதம் என்பது எது?
: மோக்ஷத்திற்கு சாதகமான ஹோமத்திற்கு உபயோகப்படுவதால் பசுவின் பாலே அம்ருதம் எனப்படும்.

39. கே: உலகம் முழுதும் வியாபித்து இருப்பது எது?
: வாயு.

மேற்கண்ட 4 கேள்வி-பதில்களால் கோக்ஷீரத்தால் ஹோமம் முதலியவற்றை செய்து வாயு ஸ்வரூபமாகி பிறகு மோக்ஷத்தை அடையலாம் என்று கூறப்பட்டதாகிறது.

40. கே: ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பான், யார்?
: சூரியன்.
.கே: உலகம் முழுதும் வியாபித்து இருக்கும் வாயு அழியும் காலத்திலும் எஞ்சி நிற்பவன் யார்?
.: சூரியன் போல ஒளி மயமான ஆத்மாதான் எஞ்சி நிற்பவன்.
.
 

No comments: