Pages

Thursday, May 16, 2013

யக்ஷப்ப்ரச்னம் - 10

 
81. கே: தவத்தின் இலக்ஷணம் என்ன?
:அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை விடாமல் அனுஷ்டிப்பதே தவமாம்.

82. கே: தமம் என்பதென்ன?
: மனம் போன படியெல்லாம் விடாது அடக்குவதே தமமாம்.

83. கே: க்ஷமா என்றால் என்ன?
: " த்வந்தவம்" [இருமை] எனக்கூறப்படும் பசி, தாகம், ராகம், த்வேஷம் முதலியவற்றை பொறுத்துக்கொள்ளுதலே க்ஷமா எனப்படும்.

84. கே:ஹ்ரீ: என்றால் என்ன?
: கெட்டக்காரியங்களை செய்ய வெட்கப்பட்டு அவற்றை செய்யாமல் இருத்தலே ஹ்ரீ: எனப்படும்.

85. கே: ஞானம் என்றாலென்ன?
:உண்மையான பொருளை அறிந்து கொள்ளுதலே ஞானம்.

86. கே: சமம் என்றாலென்ன?
: மனம் அடங்கி இருத்தலே சமமாம்.

87. கே: தயை என்றாலென்ன?
: அனைவரும் சுகமாக வாழவேண்டும் என விரும்புதல்.

88. கே: ஆர்ஜவம் என்றாலென்ன?
: அனைவரிடமும் சமமான எண்ணத்துடன் கூடியிருத்தல்.

89. கே: ஜெயிக்க முடியாத விரோதி யார்?
: கோபம்.

90. கே: தீராத வியாதி எது?
: பேராசை.

No comments: