Pages

Thursday, April 11, 2013

கோளாறான எண்ணங்கள் - திடீர் ஞானம் (எனக்குத்தான்!)


திடீர் ஞானம் (எனக்குத்தான்!)
சாதகன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறான். ஏதோ ஒரு ஸ்டேஜில் அவனுக்கு சில விஷயங்கள் கைகூடுகிறது. சிலது செய்ய முடிகிறது.
சமுதாயத்தில் பலரும் இவனை ஆஹா ஆஹா என்று கொண்டாடுகின்றனர். “கவலைப்படாதே, நல்லா முடிஞ்சுடும்னார். முடிஞ்சுடுத்தே!” , “பையன் பாஸ் பண்ணட்டும்ன்னு ஆசீர்வாதம் பண்ணார். பாஸ் ஆயிடுத்து”, “பொண்ணுக்கு கல்யாணமே ஆகலை; ஆசீர்வாதம் பண்ணார். சட்டுன்னு பிக்ஸ் ஆயிடுத்துன்னா பாத்துக்கோங்களேன்” ... இப்படி பல வேரியண்ட்ஸ் இருக்கலாம். அப்போது சாதகனுக்கே தன் மீது ஒரு அசட்டு நம்பிக்கை வந்துவிடுகிறது. தன்னால் பல விஷயங்கள் முடியும் என்று தோன்றுகிறது.

இப்படியே தொடருமானால் சாதனை கெட்டுப்போய் விடுகிறது. சக்திகளும் காணாமல் போய் விடுகின்றன. ஆனால் ஒரு பேர் வாங்கியாச்சே! இன்னும் பாலோயர்கள் அதிகமாகிக்கொண்டுதான் இருப்பார்கள்! காரியம் நடக்காதவர் மத்தவங்ககிட்ட சொல்ல மாட்டாங்க. காரியம் ஆகிவிட்டவர்கள் - அது தற்செயலோ, அவரவர் முயற்சியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் - தம்பட்டம் அடிப்பார்கள். இன்னாருடைய கருணை தனக்கு இருக்கிறதுன்னு சொல்லிக்கணுமே! அதுல ஒரு கெத்து இருக்கு! இதை தன்னால்தான் முடிந்தது என்று அந்த 'சாதகனும்' நம்ப ஆரம்பித்துவிடுகிறான். மமதை ஏறிக்கொண்டே போகிறது. தான் ஈஶ்வரன் என்றே நம்பி அப்படியே தன் 'அடியார்கள்' அழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பும் வந்துவிடுகிறது!

அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பது வேத வாக்கியம். மஹா வாக்கியம் என்பார்கள். இந்த மஹாவாக்கியங்கள் நான்கு. நாலும் ஒரே விஷயத்தைத்தான் வேறு வேறு வழியில் சொல்லுகின்றன. இவை நான்கு வேதங்களின் உபநிஷத்துகளில் ஒவ்வொன்றாக இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்றை குரு சிஷ்யனுக்கு தகுந்த நேரத்தில் உபதேசம் செய்து இதையே மனனம் செய்து வரச்சொல்லுவார். அதனால்தான் இவற்றூக்கு மஹாவாக்கியங்கள் என்று பெயர்.
இந்த அஹம் ப்ரஹ்மாஸ்மி ஐ சிலர் டேக் (tag) ஆகக்கூடப்போட்டுக்கொள்கிறார்கள்.
ஒருவன் தானே ஈஶ்வரன் என்று சொல்லிக்கொள்வதற்கும் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று சொல்லிக்கொள்வதற்கும் என்ன வித்தியாசம்? இது இன்னும் அரொகென்ட் ஆக தெரியவில்லை?
மேம்போக்காக பார்த்தால் அரொகென்ட்தான். ஆனால் விளைவை பாருங்கள்!
தான் ஈஶ்வரன் என்று சொல்லிக்கொள்வதால் ஒருவன் ஈஶ்வரன் ஆகிவிடுவதில்லை. ஈஶ்வரனுக்காக டெபெனெஷன் ஐ பார்த்தால் ஒரு ஜீவன் ஈஶ்வரன் ஆகவே முடியாது!


அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஶ்வரன்.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு காலத்தில் சாதாரணமாக இருந்த ஜீவன், பிற்காலத்தில் ரொம்ப முன்னேறி ஈஶ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஶ்வரனாக முடியாது!

ஒரு உயர்வு நவிற்சியாக அப்படி சிலரை சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையாகாது.
ஆனால் மமதையால அப்படி தன்னை நினைக்கிறவங்களுக்கு மத்தவங்க தன்னிடம் இப்படி இப்படி நடந்துக்கணும் என்று எதிர்பார்ப்பும் வந்து விடுகிறது! அதுக்கு அப்புறம் அதுக்கு தகுந்தபடி நடந்துக்கவும் செய்யறாங்க!

மாறா அஹம் ப்ரஹ்மாஸ்மி ன்னு சொல்லிக்கறவங்களை பார்க்கலாம். இப்படி நினைக்க நினைக்கவே அந்த திசையில் அவங்க முன்னேறுவாங்க!
ப்ரஹ்மம் எப்படி இருக்கும்?


"நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானம் சாந்தம் சத்தியம் கேவலம் துரியம் சமம் திருக்கு கூடஸ்தன் சாட்சி போதம் சுத்தம் இலக்கியம் சநாதனம் சீவன் தத்துவம் விண் சோதி ஆன்மா முத்தம் விபு சூக்குமம் என்று இவ்வண்ணம் விதிகுணங்கள் மொழியும் வேதம்.”
"அசலம் நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் அநுபாதேயம் அசடம் அநாமயம் அசங்கம் அதுல நிரந்தரம் அகோசரம் அகண்டம் அசமநந்தம் அவிநாசி நிர்குண நிட் கள நிரவயவம் அநாதி அசரீரம் அவிகாரம் அத்துவிதம் என விலக்காம் அநேகம் உண்டே.”

ப்ரம்மம் பூரணமானது, சாந்தமானது, சத்தியமானது, நிச்சலனமானது, அமிர்தமானது, அகண்டமானது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இப்படி இருக்க ஒருவர் நினைத்தால் அவர் முன்னேறுவது நிச்சயமே!

ஆக நான் ப்ரம்மம் ன்னு ஒருத்தர் தாராளமா சொல்லிக்கலாம். ஆனா தான் ஈஶ்வரன்னு நினைக்ககூட கூடாது!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒருவர் முன்னேறுவதற்கு சொல்லப்பட்டவை 100% உண்மை...

ஸ்ரீராம். said...

புரிஞ்சு "போச்சு"

திவாண்ணா said...

:-))

திவாண்ணா said...

நல்வரவு தனபாலன். அதெப்படி உங்க பின்னூட்டம் தாமதமா வருது?