Pages

Wednesday, January 9, 2013

அத்ருஷ்டம்





திடீரென்று ஒருவருக்கு லாட்டரியில் கோடி ரூபாய் பரிசு விழுகிறது. நாம் அவரை அத்ருஷ்டக்காரர் என்கிறோம். ஒருவருக்கு வீட்டில நாள் முழுசும் கரண்ட் இருக்கு. அவர ரொம்ப  ரொம்ப அத்ருஷ்டக்காரர்ன்னு சொல்லறோம்.

இந்த அத்ருஷ்டம்ன்னா என்ன?

த்ருஷ்டம் ன்னா பார்க்க முடிவது. அத்ருஷ்டம் பார்க்க முடியாதது.

பலமான காத்து அடிக்கறது; மரக்கிளை முறிஞ்சு  கீழே விழுகிறது. இது பார்க்க முடிகிறது. இது த்ருஷ்டம். காத்து அடிச்சது; அதனால் மரகிளை முறிஞ்சதுன்னு சொல்லிடலாம்.
மேலே ஒரு பந்தை விட்டு எறிகிறோம். அது மேலே ஓரளவு போய் அப்புறம் கீழே விழுகிறது. ஏன் கீழே விழுந்தது? எந்த சக்தி அதை கீழே விழப்பண்ணியது? புவி ஈர்ப்பு விசைன்னு சொல்வாங்க. இதை பார்க்க முடியுமா? முடியலை. சில சோதனைகள் எல்லாம் செய்து அப்படி ஒரு விசை இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவாங்க. நாமும் ஒத்துக்கிறோம்.

ஆக பார்க்க முடியாத ஒண்ணு இல்லைன்னு இல்லை. அது இருக்கலாம். அதை நேரடியாக பார்க்க முடியாது போகலாம். நிரூபணம் செய்யவும் அறிவியலால முடியாமல் போகலாம்.
இப்ப, இந்த கால கட்டத்தில அறிவியலால நிரூபிக்க முடியாததை ஒப்புக்கொள்ள முடியாதுன்னு சொல்ல முடியாது. கொஞ்சம் யோசிச்சாலே தெரிஞ்சுடும். தினசரி புதுசு புதுசா ஏதோ அறிவியல் கண்டு பிடிப்புகள் வந்து கொண்டே இருக்கு. நேத்து இல்லைன்னது இன்னைக்கு, ஆமாம் இருக்கு ன்னு சொல்கிறாங்க. ஒரு விஷயம் இருக்குன்னு சொல்லறது சுலபம்; இல்லைன்னு சொல்லறது கஷ்டம்.

ரொம்ப சாதாரணமா பலரும் கேட்கிற கேள்வி, ஏன் இப்படி எனக்கு  நடக்குது? நான் நல்ல பையனாத்தானே இருக்கேன், இருந்தேன்? இப்படி கஷ்டம் ஏன் வரணும்?
அல்லது ஒரு சின்ன குழந்தை ஏதோ வியாதியால கஷ்டப்படுது. ஏன் இந்த குழந்தை கஷ்டப்படணும்? அது என்ன தப்பு செஞ்சது? பிறந்து கொஞ்ச நாள் கூட ஆகலையே? அதுக்குள்ள எப்படி தப்பு செய்ய முடியும் ஏன்  இப்படி கஷ்டம் அனுபவிக்கணும்?
அல்லது, இப்பல்லாம் மீடியாக்கள் தேடி தேடி இருக்கிற இல்லாத பால்வன்முறைகளை எல்லாம் எழுதறாங்க இல்லையா? இதெல்லாம் ஏன் நடக்குது?

இதையெல்லாம் மேற்கோள் காட்டியே சில நாத்திகவாதிகள் ஒரு வாதத்தை வைக்கறாங்க! “கடவுள் கருணை வடிவானவர்ன்னா ஏன் ஜனங்க இவ்வளோ கஷ்டப்படுறாங்க?”
உப்பு சாப்பிட்டவன் தாகம் எடுத்து தண்ணி குடிப்பான் என்கிறது போல , நான் செய்கிற எல்லா செயல்களுக்கும் பலனை அனுபவிச்சுத்தானே ஆகணும்? 

ஆனா நாம் இந்த ஜன்மத்துல செய்கிற விஷயங்களை மட்டுமே தெரியுது என்கிறதால கணக்குல எடுத்துக்கிறோம். ஆன்மீகம் என்ன சொல்லுதுன்னா  ஒரு ஜீவனுக்கு ஜன்மங்கள் பலது உண்டு. இறப்பு பிறப்பு என்பது சட்டையை மாத்தற மாதிரிதான்.  ஆகவே செயல்களுக்கு ஒரு தொடர்வு – கன்ட்யூனுடி – இருக்கு. அதே போல எதிர்வினை – செயல்களின் பலன்களுக்கும் ஒரு தொடர்வு இருக்கு.

ஒரு வேலையை திரும்பத்திரும்ப செய்கிறோம். இதுக்கு டெக்னிகலா வ்ருத்தி என்கிறாங்க. ஒரு விஷயத்தை தொடர்ந்து எண்ணுகிற போது அதை சித்த விருத்தி ன்னு சொல்கிறோம் இல்லையா அது போல. அடிக்கடி செய்யும் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமா மெருகேற்றப்படும். பாடப்பாட பாட்டு என்கிறோமே. பாடப்பாட இன்னும் சுளுவாக பாட முடிகிறது. இது போல அடிக்கடி செய்ய அது உள்ளே பதிந்துவிடுகிறது. இப்படி பதிந்ததை பண்புப்பதிவு என்கிறார்கள். சம்ஸ்காரம் என்றும் சொல்வர்.

 இது அடுத்த ஜன்மத்திலும் பிரதி பலிக்கும். இப்படிப்பட்டவர்கள் இசை கற்கப்போக வெகு சுலபமாக கற்றுக்கொண்டு விடுவர். பார்ன் ஆர்டிஸ்ட், ஜீனியஸ் என்றெல்லாம் சொல்கிறோம் இல்லையா? அதே!
எதை திருப்பித்திருப்பி செய்கிறோமோ அது நல்லதோ கெட்டதோ எப்படி இருந்தாலும் தொடர்கிறது. பிறவி குணம் என்று கூட சொல்வார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட மாறு பட்டு இருக்கிறார்கள். சிலருக்கு சின்ன வயசிலிருதே திருட்டு குணம் வருகிறது. எப்படி இது வந்தது என்று குடும்பத்தினர் ஆச்சரியப்படுவர். இப்படி இருக்கிறதை வாசனை என்கிறார்கள். முன்னே சொன்ன விருத்திதான் பலப்பட்டு வாசனை ஆகிறது.
இந்த வாசனைதான் நம்மை சில விஷயங்களை சில வழிகளில் செய்ய வைக்கிறது. இது நல்லதாவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். நல்லதென்றால் அப்படி வைத்துக்கொள்ளலாம், இல்லையா? கெட்டதென்றால் முயற்சி செய்து மாற்றிக்கொள்ளலாம்.
அதெப்படி மாற்றுவது? 

புத்தி பூர்வகமாக சரியான வழியில் செயல்பட வேன்டும். வாசனை நம்மை பழக்கமான வழிக்கு கொண்டு செல்லவே முயலும். நாம் வலுக்கட்டாயமாக மாற்று வழியில் அதை செலுத்த வேண்டும். முன்னே பழகி பழகி ஒரு வழியில் சென்றது இப்போது மெல்ல மெல்ல வேற்று வழியில் பழக ஆரம்பிக்கும்.....
 
 

No comments: