Pages

Monday, November 19, 2012

விதியா மனித முயற்சியா? -2-

 
ஸ்வாமிகள்: மாற்றாக நீங்கள் முழுக்க முழுக்க மனித முயற்சியில் ஈடு பட வேண்டும்.

சீடன்: அதெப்படி?

நான் சொன்னபடி, ஊழ் வினை என்பது உங்களுடைய முன் ஜன்மங்களில் மனித யத்னத்தால் செய்தவற்றின் விளைவு. உங்கள் மனித முயற்சியை பயன்படுத்தியதால் அதன் விளைவாக சிலது ஏற்பட்டது. அது இப்போது தொடர்கிறது. இப்போது உங்கள் முயற்சியை செய்தால் முன் ஜன்ம வினை கெடுத்க இருந்தால் குறைத்துக்கொள்ளலாம். முன் ஜன்ம வினை நல்லதாக இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். எப்படி இருந்தாலும் முன் ஜன்ம வினையின் கெடுதலை குறைக்கவோ அல்லது சந்தோஷத்தை அதிகப்படுத்திக்கொள்ளவோ உங்கள் சுய முயற்சியை இப்போது செயலாக்க வேண்டும்.

ஆனால் அப்படி சுய முயற்சி எவ்வளவுதான் நன்கு செய்யப்பட்டாலும் அடிக்கடி தோல்வியில் முடிகிறதே? ஊழ் வினை விளையாடி முயற்சியின் விளைவை தோற்கடித்துவிடுகிறது.

ஊழ் வினை என்பதன் அர்த்தத்தை மறந்துவிட்டு இப்படி பேசுகிறீர்கள். அது ஏதோ வெளியிலிருந்து புதிதாக உள்ளே வந்து செயலாற்றுவதல்ல. மாறாக அது உங்கள் உள்ளேயே இருக்கிறது.

இருக்கலாம். ஆனால் அதன் இருப்பு நம் முயற்சிக்கு அது தடை போடும்போதுதான் தெரிகிறது. அது என்ன என்று தெரியாத போது எப்படி நம் முந்தைய செயலை ஒழித்துக்கட்டுவது?

ஆன்மீகத்தில் மிகவும் முன்னேறிய சிலரைத்தவிர முன் ஜன்மம் என்பது ரகசியமாகவே இருந்து வருகிறது. ஆனால் அது தெரியாமல் இருப்பதே பல சமயம் நல்லதாக இருக்கிறது. ஏனென்றால் இந்த ஜன்மாவிலும் கடந்த எண்ணற்ற ஜன்மாக்களிலும் நாம் செய்தனவும் அவற்றின் செயல்பட காத்திருக்கும் விளைவுகளையும் நாம் அறிந்தோமானால் நாம் அசந்து போய் அவற்றை நீக்கவோ, அவற்றை தாண்டி எதையும் சாதிக்கவோ உற்சாகம் இல்லாமல் போய் விடுவோம். ஏன், இந்த ஜன்மத்திலேயே பலவற்றையும் நாம் மறந்துபோகிறோம். இந்த மறதி கடந்த காலத்தில் நாம் செய்ததையே நினைத்துக்கொண்டு இராமல் இருக்க இறைவன் உவந்து நமக்கு அளித்த நன்கொடை. அதே போல நம் உள்ளிருக்கும் தெய்வீக சக்தியே நம்பிக்கையுடன் ஒளிர்கிறது; நாம் நம்பிக்கையுடன் நம் மனித யத்னத்தை செய்ய உதவுகிறது. கடந்த காலத்தை மறப்பது, எதிர் காலத்துக்கு நம்பிக்கையுடன் இருப்பது என்னும் இந்த இரண்டு வரங்களையும் நாம் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது.

கடந்த காலத்தை நாம் அறியாதது மனித முயற்சிக்கு சோர்வூட்டாமல் செயலை ஊக்குவிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் பல சமயம் அந்த செயல்களுக்கு ஊழ் வினை என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை மறுக்க முடியாது.

ஊழ் வினை மனித முயற்சிக்கு தடைகளை ஏற்படுத்துவதாக சொல்வது அவ்வளவு சரியில்லை. மாறாக அது நம் முயற்சிகளை எதிர்ப்பதன் மூலம் குறித்த பலனைப் பெற இப்போது மனித முயற்சி எவ்வளவு தேவை என்பதை தெரிவிக்கிறது. சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட பலனுக்கு ஒரு குறிப்பிட்ட செயல் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால அதை எவ்வளவு தீவிரமாக எந்த அளவு எவ்வளவு முறை செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. முதல் முறை அது வெற்றி அடையவில்லை என்றால் நாம் முன் ஜன்மத்தில் அதற்கு எதிராக வேலை செய்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ளலாம். அதை முதலில் சரி செய்து விட்டு அதற்கு எதிராக ஈடாக இப்போது நாம் செயலாற்ற வேன்டும் என்று தெரிகிறது. ஆகவே நாம் தடையாக நினைப்பது இப்போது செய்ய வேண்டிய செயலின் அளவையும் தரத்தையும் நிர்ணயிக்க உதவுகிறது.

இது மனித முயற்சியை செய்த பிறகுதானே தெரிகிறது? துவக்கத்திலேயே நம் செயலை சரியாக நடத்த எப்படி உதவும்?

அது துவக்கத்தில் நம்மை வழி காட்ட வேண்டாம். துவக்கத்தில் தடை எதுவும் இருக்கும் என்று நீங்கள் அனுமானித்துக்கொண்டு மனத்தடையை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை.
நம் மனித முயற்சிக்கு தடை ஏதும் இல்லை என்ற மனப்பாங்குடன் அளவற்ற நம்பிக்கை, உற்சாகத்துடன் துவங்குங்கள். ஒரு வேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் முன் ஜன்மத்தில் நாம் இப்போது செய்ய முயற்சித்த வேலைக்கு எதிராக வேலை செய்து இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளுங்கள். ஆகவே இப்போது முன்னிலும் அதிகமாக இரட்டிப்பு உற்சாகத்துடன் விடாப்பிடியாக முயற்சியை செய்ய வேண்டும். தடையாக இருப்பது முன்னே நாமே செய்த செயலே என்பதால் அதை சரி செய்வதும் நம்மால் இயலும். அப்படியும் தோல்வியே கிட்டியது என்றாலும் நாம் நிராசைப்பட தேவையில்லை. ஏனெனில் நம் முயற்சியின் விளைவே ஊழ் வினை என்பதால் அது நம் முயற்சியை விட பலமாக இருக்கவே முடியாது. தோல்வி என்பது தற்போதைய முயற்சி முந்தைய ஜன்ம முயற்சிக்கு எதிராக வேலை செய்ய போதுமானதாக இல்லை என்பதயே காட்டுகிறது. வேறு வழியில் சொல்லப்போக இரண்டு தனித்தனி விஷயங்களாக ஊழ் வினைக்கும் மனித முயற்சிக்கு போராட்டம் என்பது இல்லை. நமது முந்தைய செயல்களின் தீவிரத்துக்கும் தற்போதைய செயல்களின் தீவிரத்துக்கும் இடையேதான் பிரச்சினை.

அப்படியே இருந்தாலும் ஒரு திசையில் நாம் செய்யும் நடப்பு செயலுக்கு பின்தானே அது தெரிய வருகிறது


கண்ணுக்கு புலனாகாத அத்ருஷ்டம் என்று சொல்லப்படும் விஷயம் எல்லாவற்றிலும் அப்படித்தான் இருக்கும். உதாரணமாக ஒரு மரத்தூணில் ஒரு ஆணி அடிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதை பார்க்கும் போது ஒரு இன்ச் மட்டுமே அது வெளியே தெரிகிறது, மற்றது மரத்துக்குள் போய்விட்டது. எவ்வளவு அது உள்ளே போயிருக்கிறது என்பது நமக்கு புலப்படாத விஷயம். அது அத்ருஷ்டம். தூணை நன்கு வார்னிஷ் போட்டு சாயம் ஏற்றியிருந்தால் அது எத்தகைய மரம் என்றூம் கூட நமக்குத்தெரியாது. அதுவும் அத்ருஷ்டமே. சரி, இப்போது நீங்கள் அந்த ஆணியை பிடுங்க வேண்டும் என்றால் எத்தனை முறை அதை இழுக்க வேண்டும், எவ்வளவு சக்தியுடன் இழுக்க வேண்டும் என்று நீங்கள் சொல்ல முடியுமா?

அதை எப்படி நிர்ணயிக்க முடியும்? ஆணி எவ்வளவு உள்ளே போயிருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போலத்தான் இழுக்க வேண்டிய எண்ணிக்கையும் சக்தியும் இருக்கும்.

உண்மைதான். அது எவ்வளவு உள்ளே போயிருக்கிறது என்பது முன்னே அது எத்தனை முறை அறையப்பட்டது, ஒவ்வொரு முறையும் எவ்வளவு பலத்தை பயன்படுத்தி அறையப்பட்டது என்பதை பொருத்தது. மேலும் மரம் அதை எப்படி தாங்கியது என்பதையும் பொருத்தது.

உண்மைதான்.

அதை பிடுங்க வேண்டி இழுப்பது எவ்வளவு முறை என்பது அது உள்ளே செல்ல எவ்வளவு முறை அறையப்பட்டது ,என்ன பலத்துடன் அறையப்பட்டது என்பதை பொருத்தது.

ஆமாம்.

இப்போது நாம் பார்க்கும் போது இது எதுவும் எவ்வளவு என்று தெரியவில்லை. ஆகவே அது கடந்த காலத்துடையது; அத்ருஷ்டமானது.

ஆமாம்.

இது தெரியாது என்பதனால் நாம் ஆணியை பிடுங்க முயற்சி செய்யாமல் இருக்கிறோமா? அல்லது முயற்சி செய்து தேவையான அளவு பலத்துடன் இழுப்புக்களை அதிகரித்து பிடுங்கப்பார்க்கிறோமா

No comments: