Pages

Monday, October 15, 2012

மாளய அமாவாசை -2


இதில் முக்கிய விஷயம் ஒன்றை இன்னும் சரியாக சொல்லி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

தேவர்கள் எப்படியும் 33 கோடி. யாரேனும் பூஜை ஹோமம் செய்வர். இவர்தான் செய்ய வேண்டும் என்றில்லை. மேலும் அவர்கள் இருப்புக்கு காரணம் அவர்களே முன்னே செய்த புண்ணியங்களும் சில கர்மாக்களும் ஆகும். ஆகவே அவர்கள் இருப்பு அவை பலன் கொடுக்கும் காலம் ஆகும். பின் மீண்டும் மனித பிறவி எடுத்து விடுவர்.

பித்ருக்கள் விஷயம் அப்படி இல்லை. மனிதராக பிறந்த அனைவருமே இறக்கும் போது பித்ரு ஆகிவிடுவர். அவர்களது சந்ததி மட்டுமே அவர்களுக்கு ஆராதனம் செய்ய முடியும். (ஆத்ம பிண்டம், காருண்ய பித்ரு சமாசாரம் தவிர.) வேறு யாரும் செய்ய இயலாது. வாழ்ந்த வரை இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையானாலும் இறந்த பின் நிலமை தெரிய வருமாததால் ஜீவித்திருந்த போது சுத்த நாத்திக வாதியாக இருந்திருந்தாலும் இறந்த பின் அவருடைய சந்ததியினருக்கும் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் தர்பணம் முதலிய செய்தே ஆக வேண்டும். “என் தகப்பனாருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையே கிடையாதே" என்பதற்கு இடமில்லை. இறந்தவருக்கு நம்பிக்கை இல்லாததால் சரியாக இறுதி கர்மா செய்யவில்லை, மாதா மாதம் தர்பணம் முதலியன் செய்யவில்லை, இப்போது பிரச்சினைகளுக்கு ஜோதிடர்கள் பித்ரு சாபம் என்கின்றனர், என்ன செய்வது என்றால்..... இந்த மாதிரி இப்போது அதிக அளவில் கேள்விகள் எழுகின்றன. ராமேஸ்வரம் சென்று அங்கே இப்படி அதிகம் பேர் வருவதால் என்ன செய்ய வேண்டும் என்று அறிந்துள்ளதால் இவற்றுக்கு சரியாக பிராயச்சித்தங்கள் செய்து வைக்கின்றனர். வேண்டுவோர் பயன் பெறுங்கள்.

No comments: