Pages

Wednesday, August 8, 2012

கோளாறான எண்ணங்கள் -1



என் நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் சொல்வது “கடவுளோட கம்யூட்டர் டேடா பேஸ் ரொம்பி வழியுது; அதனால இப்பல்லாம் அடிக்கடி உடனேயே பலனை கொடுத்துடறார்.
நாட்டு நடப்பை பாத்தா எனக்கு அப்படித்தான் தோணுது.
யோசிச்சு பாத்தா ஒரு விஷயம் தோணியது.
பாபங்களோட விளைவு 2. முதலாவது நரக வாசம். ரெண்டாவது என்ன? ஊரை விட்டு தள்ளி வெச்சுடுவாங்க. அவங்களோட உறவுக்காரங்களோ ஊர் ஜனங்களோ எந்த தொடர்பும் வெச்சுக்கக்கூடாது.
 இப்ப என்ன நடக்குது? அவங்க என்ன தள்ளி வைக்கறது? நாமே தள்ளி வந்துட்டோம். நகர புறங்களை பாத்தா முக்காலே மூணு வீசம் 3 தலைமுறைக்குள்ள அங்கே குடி வந்தவங்கதான். பக்கத்துல இருக்கிற வீட்டுக்காரர் யாருன்னே தெரியாத நிலை கூட இருக்கு. அண்டை அசல்ல தெரிஞ்சவங்க யாருமே கிடையாது. அவங்களோட போக்கு வரத்தே கிடையாது. பேச்சு வார்த்தை கிடையாது. காலை எழுந்து பறந்து பறந்து வேலை முடிச்சு அலுவலகம் போய் மாலை லேட்டா திரும்பி சாப்பிட்டு தூங்கிஇப்படியே வாழ்கை போகிறது.
இப்படி ஒரு நூறு வருஷம் முன்னால நம் வாழ்கை இருந்தது? ஊரில் ஒத்தரை ஒத்தர் நல்லா தெரியும். அனேகமா உறவாவேக்கூட இருப்பாங்க. நல்லது கெட்டதுன்னா எல்லாரும் ஆஜராகிடுவாங்க; வேலை செய்வாங்க. கல்யாணம் கார்த்தின்னா நாலு நாள் நடக்கும். அப்பவே பல உறவுகள் ஒத்தரை ஒத்தர் பார்த்து குசலம் விசாரிச்சு, உறவுகள் பலப்படும். சில கல்யாணங்கள் கூட பிக்ஸ் ஆகும்.
இப்ப? கல்யாணமா? முந்தின நாளே ரிசப்ஷன். காலை சர சரன்னு எல்லாம் முடிச்சு, மதியம் 12 மணிக்குள்ள மண்டபம் காலி செய்துடணும். வருகிற உறவினர்களை, நினைச்சாக்கூட வீட்டுல தங்க வைக்கிற மாதிரி இல்லை. கொஞ்சம் வசதி உள்ளவங்க உள்ளூர் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்கி திரும்பிடுவாங்க. இந்த கல்யாணம் தவிர்த்த மங்கல காரியங்கள் முக்காவாசிக்கும் வாழ்த்து தந்திதான். பையன்/ பொண்ணு ஸ்கூல் போகணுமே! லீவு கிடையாது! அந்த பசங்களும் உறவுகள் யாருன்னே தெரியாம வளருவாங்க.
யாரும் ‘ஊரு’க்கு போய்ட்டா மொபைல் போன்ல கூப்டு சொல்லிட்டு இதோ ரெண்டு நாள்ல வந்துடறேன் ன்னு சொன்னதால ஐஸ்பெட்டில மூணு நாள் வெச்சு மெதுவா கர்மா நடக்கிறது!
இப்படியாக தனிமைப்படுத்துவது தானாகவே நடக்குது!
சரி... அடுத்து நரக வாசம்.
நகர வாசமே நரகவாசம்ன்னு சத்தியம் செய்யறவங்க பலர் இருக்காங்க! மேலே சொல்ல வேண்டாமில்லையா? :-) தண்ணீர் விலைக்கு விற்பாங்கன்னு நினைச்சுக் கூட பார்க்கலை 20, 30 வருஷம் முன்னே! தெருக் குழாயில தண்ணி பிடிச்சு குடிச்சுட்டு ஓடிகிட்டு இருந்தோம், சின்ன பசங்களா இருக்கும்போது! ஹும்!
வியாதிங்க அதிகமாயிட்டு வருது! மூக்கை உறிஞ்சிகிட்டு “எனக்கு சைனஸ்” என்கிறது வெகு சகஜமா போச்சு. இந்தியர்களில் சர்க்கரை வியாதி மூணில ஒத்தருக்கு இருக்காம்! உடம்பில் யாருக்கும் பலமே இல்லை. கால் மூட்டை அரிசி ஒரு பக்கம், காய்கறி பெரிய பையில் ஒரு பக்கம், தலையில வாழைத்தார் ன்னு தூக்கிட்டு வயல் வரப்புல நடந்து பத்து மைல் போய் பொண்னை பாத்து கொடுத்துட்டு வந்த கதை எல்லாம் கதையாவே இருக்கு! நம்பக்கூட முடியாது போல இருக்கு.
புதுசு புதுசா வியாதிங்க! ஏதோ ஒரு பெயரை கொடுத்து, போகவும் விடாம இழுத்து அடிச்சு கடைசி நேரத்தில நிம்மதியா போவோம்ன்னு யாரும் நினைக்கிறதில்லை. ஆஸ்பத்ரிக்கு அவசரமா கூட்டிப்போய் அரை மணி நேரத்தில அரை லட்சம் செலவழிச்சு மூக்கு வாய் ன்னு இருக்கிற துவாரங்கள் எல்லாத்திலேயும் ட்யூப் போட்டு நரக வேதனைக்கு ஒரு ட்ரெய்லர் காட்டிடறாங்க!
நாம் சுவாசிக்கிற காத்து, குடிக்கிற தண்ணீர் எல்லாமே விஷமா ஆகிட்டு இருக்கு. நாலு நாள் முன்னே ஒரு பத்திரிகையிலே ஒரு செய்தி. அனுபவஸ்தர் ஒத்தர், “ நீங்க சாப்பிடுகிற காய்கறியில எல்லாம் நிறைய நச்சுப்பொருட்கள் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில கலந்து இருக்கு. இது மூணு தலை முறையை பாதிக்கும்ன்னாராம். என்னடா தீர்வுன்னு யோசிக்கும் போது பூச்சி புழு இருக்கிற காய்கறிகளை வாங்கி சாப்பிடுங்க. அதில பூச்சிக்கொல்லி கலந்து இருக்காதுன்னு அட்வைஸ் பண்ணாராம்! நிலமைய பாருங்க!
சரீ, எப்ப பாத்தாலும் எல்லாம் ப்ராம்ஹணுக்கு கொடுக்கவே சொல்லி இருக்கே? அநியாயம் இல்லே? அவன் என்ன அப்படி உசத்தியா?
ஹும்! அப்படி எல்லாமில்லே!
 

2 comments:

Jayashree said...

ஹா ஹா ஹா ஏன் இன்னிக்கு புலம்பராயணமா ஆயிடுத்து!! உங்க ஊர்லதான் நேத்திக்கு மழை கொஞ்சம் பெய்தது ன்னு போட்டிருக்காளே !!!
சுற்றம் சுற்றுப்புறம் நரகமாகாம இருக்க அதிலுள்ள ஆசாமி தான் தன்னை மாத்திக்கணும்.

" யம தூதன் வந்து என்னைமட்டும் நீ செஞ்ச பாவத்துக்கு நீ நரகத்துக்கு போணும்னு நான் செத்தவுடன் சொல்லட்டும் அன்னிக்கு வச்சுக்கறேன் கச்சேரியை ! ஏண்டா பாவி இத்தனை நாள் நான் சொர்கத்துல இருந்தேன்னு உனக்கு நினைப்பான்னு" அப்படின்னு துளசி முன்னால சொல்லுவாங்க. சொல்லிட்டு நாங்க விழுந்து விழுந்து சிரிப்போம்:)) அது நினைவுக்கு வந்தது:))

திவாண்ணா said...

அதான் கோளாறான எண்ணங்கள் ன்னு தலைப்பு போட்டாச்சே அப்புறமென்ன? :-))