Pages

Tuesday, July 31, 2012

Yajur Upakarma 2012



   

 Yajur Upakarma 2012
யஜுர் உபாகர்மா 2012

 As Yajur veda upakarmaa is coming up on First, Aug, 2012, i thought it is a good time to write about upakarma in general. A document on yajur veda upakarmaa sankalpam etc is here.
I have now changed the doc settings so that anyone with the link can view it. last night I had some interface problems and could not set it that way. sorry!

 The meaning of the sankalpam is given in tamil so that we at least get to know what we are promising to do! As to the list of sins I have been writing of late in my blog. Please go through them if you care for it! There are a few posts starting from http://anmikam4dumbme.blogspot.in/2012/07/blog-post_25.html

If you want to know more about upakarmaa read on....
Upakarma also popularly known as aavani avittam as it usually occurs in the 'aavani' month and 'avittaa' star occurs this year in 'aadi' itself. More over it is not even paurnami as usually is but on the 14th day of the paksham.
Such variations are usual but well thougth out. These occur with the interference with any of these: the begining of a month, occurence of eclipse, any of the planets guru, sukra or mars not being present in the sky during this time. The guidelines are fixed by sastras and discussed in a 'sadas' of well versed scholers before they are announced. Pancangas usually keep up with this tradition but not always -you might find some variations.

Usually yajur veda upakarmaa is on the pournami day of sravana month.
For rig veda it is the sravana star date of sravana month.
For sama veda it is pathrapatha month hastha star date.

The reason why it occurs on the 14 th day this time is that, pournami has to exist not only in the morning but also last at least 12 'nazigais' that is a bit less than quarter of a day, for upakarmaa to beheld on that day. If such a situation does not exist then the previous day is to be chosen. That is what has happened.
Upakarmaa is not for changing the holy thread. Changing the holy thread can be and is done at various times. It does not need a special occasion just for that. Whenever it becomes dirty, (people who take oilbath regularly can hardly keep it clean any length of time), is damaged, beccome s unclean having visited a cremation ground... there is quite a long list.
So the real importance of the karmaa lies in the start of veda adyayanam. We do tharpanam for the risis who 'saw' the vedic mantras and gave them to us. The guru does pooja to the risis and then starts veda adyayanam on that day afresh. The guru recites the first lines of the four vedas - if not the first paragraphs- and also the first lines from the sastras. We repeat them after him and thus start veda adyayana afresh.
The next day we do gayatri japam. What is really indicated here is gayatri homan but has been replaced by japam in due course. Those with sradhdha should try to do homam, there is no contra indication.
There is also no contra indication if there has been any death in the family – if it is not within the 13 days of death. This is not a festival that gets missed for an year or six months as the case may be – that is in sishtaacaram not a sastric indiction- after a daayathi's death.
I stop here for the fear of the length of the mail. Attaching the sankalpam for this year upakarmaa, as usual in three scripts!
Wishing you all a happy upakarmaa and gayatri japam.

பாபங்கள் - ப்ராயச்சித்தங்கள் -6



 பாபங்களை பார்த்தோம். பட்டியல் இன்னும் பெரியது. முழுமையாக எழுத சலிப்பு. அப்படியேத்தானே படிக்கவும் இருக்கும்? :-)

இப்போது ப்ராயச்சித்தங்களை பார்க்கலாம்.

ப்ராயச்சித்தத்துக்கு முக்கியமாக தேவையானது பச்சாதாபம். பச்சாத் தாபம். பின்னால் உண்டாகும் தவிப்பு. இப்படி செய்து விட்டோமே, தவறாயிற்றே என்ற நினைப்பு வர வேண்டும். மனம் நொந்து இனி இப்படி செய்வதில்லை என்ற உறுதியும் வர வேண்டும். இது இருந்தால்தான் முதலில் ப்ராயச்சித்தத்துக்கு அருகதையே வரும். அப்படி வந்தபின் ஊரில் பெரியோர் சபை கூடி ப்ராயச்சித்தத்தை முடிவு செய்ய வேண்டும். யாரும் இஷ்டத்துக்கு இதை செய்ய முடியாது. யாரெல்லாம் இந்த குழுவில் இருக்கலாம், எவ்வளவு பேர் இருக்கலாம், எங்கே கூட வேண்டும், என்ன விவாதிக்க வேண்டும் என்றெல்லாம் விதிகள் உண்டு. பல விஷயங்களுக்கு சாத்திரங்களில் இன்ன ப்ராயச்சித்தம் என்றும் விதித்து இருக்கிறது. அதில் இல்லாத குற்றம் என்றாலே சுயேச்சையாக முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

ப்ராயச்சித்தங்கள் விதிக்கப்பட்டபின் அவற்றை சிரத்தையுடன் அனுசரிக்க வேண்டும்.
மஹாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தம் இல்லை என்று பார்த்தோம். இது நகர வாசம் குறித்தது என்றூம் வியவகாரத்துக்கு ப்ராயச்சித்தம் உண்டு என்றும் சில மஹரிஷிகளின் அபிப்ராயம்.  கலியுகத்துக்கு இவற்றை இளக்கியும் கொடுத்து இருக்கிறது. இருந்தாலும் சிலவற்றுக்கு ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்கச்சொல்லுகிறார்கள்.

பாலஹத்தி (சிறுவர் சிறுமியரை கொல்வது) க்ருதக்னன், சரணாகதனை கொன்றவன் பெண்களை கொன்றவன் இப்படி. மேலும் ஸன்யாசியோ நைஷ்டிகனோ ஸ்திரீகளுடன் கலந்தால் ப்ராயச்சித்தம் செய்தாலும் ஒதுக்கியே வைக்க வேண்டும். இப்படி இன்னும் பல.
ப்ராயச்சித்தங்களில் பல விதங்கள் உண்டு. ப்ராஜாபத்யம் முதலான க்ருச்சிரங்கள் என்பது ஒன்று; சாந்த்ராயணம், உபவாசம் (கடவுளையே நினைத்துக்கொண்டு பட்டினியாக இருத்தல்), பஞ்சகவ்யம் அருந்துதல், கூச்மாண்ட ஹோமம், வேத பாராயணம், ப்ராணாயாமம், காயத்ரீ ஜபம் போன்ற பலவும் ப்ராயச்சித்தங்கள் ஆகும். பாபங்களில் குரு, லகு என்று பாகுபாடும் செய்து வைத்திருக்கிறது. ப்ராயச்சித்தங்களை விதிக்க தேசம், காலம், வயது, சக்தி ஆகியவற்றை உத்தேசித்தும் செய்யச்சொல்லி இருக்கிறது. இவை – உதாரணமாக உடல் பலஹீனமானவர், வறுமை- பலமான காரணங்களாக இருப்பின் தண்டனையை இளக்கி அடுத்த மட்ட தண்டனையாக கொடுக்க வேண்டும். இதை சபையே முடிவு செய்யணும்.

 

கங்கா ஸ்தோத்ரம் - 5



 (9)

रोगं शोकं तापं पापं हर मे भगवति कुमति-कलापम् ।
त्रिभुवन-सारे वसुधा-हारे त्वम् असि गतिर् मम खलु संसारे ॥

ரோக³ம்ʼ ஶோகம்ʼ தாபம்ʼ பாபம்ʼ
ஹர மே ப⁴க³வதி குமதி-கலாபம்
த்ரிபு⁴வன-ஸாரே வஸுதா⁴ஹாரே
த்வம் அஸி க³திர் மம க²லு ஸம்ʼஸாரே

பகவதீ! என் நோய்கள், சோகங்கள், கஷ்டங்கள், பாபங்கள், தவறான சிந்தனைகள் ஆகியவற்றை நீக்குவாயாக! மூவுலகங்களில் சிறப்புமிக்கவள் நீ! பூமியின் மேல் மாலை போல (வளைந்து அழகாக) விளங்குபவள். இந்த சம்சாரத்தில் எனக்கு நீயே கதி!

rogaṁ śokaṁ tāpaṁ pāpaṁ hara me bhagavati kumati-kalāpam
tribhuvana-sāre vasudhāhāre tvam asi gatir mama khalu saṁsāre



(10)

अलकानन्दे परमानन्दे कुरु करुणामयि कातर-वन्द्ये ।
तव तट-निकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः ॥

அலகானந்தே³ பரமானந்தே³
குரு கருணாமயி காதர-வந்த்³யே
தவ தட-நிகடே யஸ்ய நிவாஸ:
க²லு வைகுண்டே² தஸ்ய நிவாஸ:

அலகானந்தா என்ற பெயருடன் இமயத்தில் உத்பவிப்பவளே! ஆபத்தில் தவிப்பவர்களால் வணக்கப்படுபவளே! கருணைமிக்கவளே! (அவர்களை) பரமானந்தத்தில் சேர்ப்பிப்பாய்! உன் கரையின் அருகே வசிப்பவர்கள் (பிறகு) வைகுண்டத்தில் வாசத்தை அடைவார்கள்.

alakānande paramānande kuru karuṇāmayi kātara-vandye
tava taṭa-nikaṭe yasya nivāsaḥ khalu vaikuṇṭhe tasya nivāsaḥ

Monday, July 30, 2012

பாபங்கள்- ப்ராயச்சித்தங்கள் -5


உபபாதகங்கள்:
பசு வதை, காலத்தில் உபநயனம் செய்து கொள்ளாமை, பொன் வெள்ளி அல்லாத திருட்டு, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது, மூத்தவனுக்கு திருமணம் ஆகாமல் இளையவன் திருமணம் செய்து கொள்ளுதல் (இது மூத்தவன், இளையவன் இருவருக்குமே தோஷமாகும்) கூலி கொடுத்து வேதம் கற்றல், கூலி வாங்கிக்கொண்டு வேதம் சொல்லித்தருதல், பரதாரத்துடன் சேருதல், வட்டியால் ஜீவனம், உப்பு விளைவித்தல், ஸ்த்ரீ, க்ஷத்ரியன், வைச்யன், சூத்திரன் இவர்களை வதைத்தல், நாஸ்திகம், ப்ரம்ஹசர்ய வ்ரதலோபம், பிள்ளைகளை விற்பது, தான்யம், பொன், வெள்ளி, பசு திருடுதல், தகுதி இல்லாதவர்களுக்கு யாகம் செய்வித்தல்; வேத அத்யயனம், பிதா, மாதா, குரு, அக்னி, புத்திரன், பந்துக்கள் இவர்களை கைவிடுதல், வ்ரதங்களை அனுஷ்டிக்காமல் இருத்தல், வேட்டையாடுதல், மருந்தால் ஜீவனம், கெட்ட சாத்திரங்களை கற்றுக்கொள்ளுதல், குளம் தோட்டம் இவற்றை விற்றல், விறகுக்காக காயாத மரங்களை வெட்டுதல், சுய நலத்துக்காக ஒரு காரியத்தை ஆரம்பித்தல், நன்றி மறப்பது …. இப்படி இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது!

கழுதை, குதிரை, ஒட்டகம், மான், யானை, வெள்ளாடு, செம்மறியாடு இவற்றை வதைத்தல்;
மீன், எருமை, பாம்பு, புழு, பூச்சி, பறவை இவற்றை கொல்லுதல்.
இவை ஸங்கரீ கரணம்.
  மத்யத்துடன் (மது) கொண்டு வரப்பட்ட வஸ்துவை உண்ணுதல்;
பழம், விறகு, புஷ்பம் இவற்றை திருடுதல், தைரியமில்லாமை.
இவை மலினீகரணம்.
 ஸங்கரீகரணமாக நிந்திக்கப்பட்டவர்களிடமிருந்து தனத்தை பெறுதல், வியாபாரம், நிந்தித்த வட்டியால் பிழைத்தல், சூத்ரனை சேவித்தல், பொய் சொல்லுதல் - இவை அபாத்ரீகரணம்.
ப்ராஹ்மணனை தண்டம் போன்றவற்றால் அடித்தல், முகரக்கூடாததை முகருதல், வக்ரத்தன்மை;
பசுக்கள், யோனி அல்லாத இடங்கள், புருஷனிடம்.. இங்கெல்லாம் மைதுனம் செய்தல் - இவை ஜாதி ப்ரம்ஷகரணம்.
இப்படி பட்டியலில் வராத இதர குற்றங்கள் ப்ரகீர்ணம் எனப்படும்.

ப்ராயசித்தங்கள் விதிக்கப்படுகின்றன. இவற்றை ஏன் செய்ய வேண்டும்?
ப்ராயச்சித்தம் இல்லாவிடில் நரகங்களில் வசிக்க நேரிடும். அவை பயங்கரமானவை. துன்பம் கற்பனை செய்ய முடியாதவை. இந்த நரக வாசம் மரணத்துக்குப்பின் எம தர்ம ராஜனால் விதிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. அதன் வாசனையால்தான் (அரசல் புரசலான நினைப்பு) அனேகமாக நாம் எல்லோருமே மரணத்தை நினைத்தாலே பயன்படுகிறோம். இல்லாவிடில் ஏன் பயப்பட வேண்டும்?

இது வரும் காலத்தியது. ப்ராயச்சித்தம் செய்து கொள்ளாதவர் தள்ளிவைக்கப்பட வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஆகவே வாழ்வதே ஒரு பிரச்சினையாகிவிடும்.

அறிந்து செய்த மஹாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தங்கள் இல்லை. மலை மீதிருந்தோ, நெருப்பில் குதித்தோ உயிர் விட வேண்டியதுதான்.

கலியில் மரணத்தை தழுவும் பிராயச்சித்தங்கள் விலக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி செய்யும் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தங்கள் இல்லை. அஞ்ஞானத்தால் ஒரு பாபம் நிகழ்ந்தால் அதற்கு ப்ராயசித்தங்கள் சொல்லப்பட்டன. புத்தி பூர்வகமாக செய்யப்பட்டவற்றுக்கு ப்ராயசித்தங்கள் இல்லை என்றும்; உண்டு, ஆனால் உலக வ்யவகாரத்துக்கு மட்டுமே யோக்யன் ஆவான் என்றும் அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன. அதே போல அந்தணர் தவிர்த்த மூன்று வர்ணத்தாருக்கும் எல்லா பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

இந்த புத்தி பூர்வகமாக செய்யப்பட்டவற்றுக்கு ப்ராயச்சித்தம், அஞ்ஞானத்தால் செய்யப்பட்டதற்கானதை போல இரு மடங்கு ஆகும்.

கங்கா ஸ்தோத்ரம் - 4



(7)

तव चेन् मातः स्रोतः-स्नातः पुनर् अपि जठरे सोऽपि न जातः ।
नरक-निवारिणि जाह्नवि गङ्गे कलुष-विनाशिनि महिमोत्तुङ्गे ॥

தவ சேந் மாத: ஸ்ரோத: -ஸ்நாத:
புநர் அபி ஜட²ரே ஸோ'பி ந ஜாத:
நரக-நிவாரிணி ஜாஹ்நவி க³ங்கே³
கலுஷ-விநாஶிநி மஹிமோத்துங்கே³

அன்னையே! உன் நீரில் முழுகி எழுபவர்கள் மீண்டும் (தாயின்) வயிற்றில் பிறப்பதில்லை; உன் பக்தர்களின் பாபங்களை அழித்து அவர்களை நரகத்தில் இருந்து காக்கிறாய்! பெருமதிப்பு வாய்ந்தவள் நீ!

tava cen mātaḥ srotaḥ-snātaḥ punar api jaṭhare so’pi na jātaḥ
naraka-nivāriṇi jāhnavi gaṅge kaluṣa-vināśini mahimottuṅge


(8)
पुनर् असद्-अङ्गे पुण्य-तरङ्गे जय जय जाह्नवि करुणापाङ्गे ।
इन्द्र-मुकुट-मणि-राजित-चरणे सुखदे शुभदे भृत्य-शरण्ये ॥

புநர் அஸத்³-அங்கே³ புண்ய-தரங்கே³
ஜய ஜய ஜாஹ்நவி கருணாபாங்கே³
இந்த்³ர-முகுட-மணி-ராஜித-சரணே
ஸுக²தே³ ஶுப⁴தே³ ப்⁴ருʼத்ய-ஶரண்யே

ஜாஹ்நவி! உன் அலைகள் பவித்திரமானவை. உன் காலடியில் இந்திரனின் மகுடத்து மணிகள் ஒளிர்கின்றன (அதாவது இந்திரனும் உன்னை வணங்குகிறான்)! உன்னிடம் சரணமடைந்தவர்களை சுக மங்களங்களுடன் வைத்திருக்கிறாய்!

punar asad-aṅge puṇya-taraṅge jaya jaya jāhnavi karuṇāpāṅge
indra-mukuṭa-maṇi-rājita-caraṇe sukhade śubhade bhṛtya-śaraṇye

Saturday, July 28, 2012

பாபங்கள் -ப்ராயச்சித்தங்கள் -4


மேலே போகு முன் இந்த பாபங்கள், அவற்றுக்கான ப்ராயச்சித்தங்கள்  எல்லாம் சாத்திரங்களில் அந்தணர்களுக்கு சொல்லப்பட்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது ஏன் ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் குழப்பம் வராமல் இருக்கும். அந்தணர் அல்லாதவரைப் பற்றி யோசிக்க வேண்டி இருக்கிறது. வேட்டையாடுதல் வேட்டைக்காரனின் தர்மம் எனும் போது அது எப்படி பாபமாகும்? இருந்தாலும் ப்ராயச்சித்தங்கள் விதிக்கும் போது அந்தணர் அல்லாதவர்களுக்கு சற்று இளக்கிக்கொடுத்து வசனம் இருப்பதால் அவர்களுக்கும் உண்டு என தெரிகிறது. இதில் இன்னும் எனக்கு தெளிவு வர வேண்டி இருக்கிறது.
----
இதற்கு அடுத்த கீழ் லெவெல்…..

அதி பாதகம்: அறியப்படாத ப்ராம்ஹண கர்ப்பத்தை கொன்றாலும், யாகம் முதலானவற்றை செய்யும் க்ஷத்ரிய வைச்யர்களை கொன்றாலும்,  ஆத்ரேய கோத்ர ஸ்த்ரீயை கொன்றாலும், சாட்சி சொல்லும் போது பொய் சொன்னாலும், குருவை தடுத்தாலும், ப்ராம்ஹணனிடம் அடைக்கலமாக உள்ளதை அபகரித்தாலும், ஸ்த்ரீ, ஸுஹ்ருத் (நல்லது செய்ய விரும்பும் நண்பன்) ஆகியோரை கொன்றாலும்...

ஸ்த்ரீ என்னும் போது ஸபத்னீ மாதா, மாதாவுடன் பிறந்தவள், மாமியார், அம்மாமி, அத்தை, பிதாவின் கூடப்பிறந்தவனின் பத்னீ, சிஷ்யனின் ஸ்த்ரீ, கூடப்பிறந்தவள், அவளதுதோழி, நாட்டுப்பெண், பெண், சரணமடைந்தவள், ராஜ பத்னீ, ஸ்ந்யாஸினீ, ப்திவ்ரதை, உபமாதா (செவிலித்தாய்) தன்னை அண்டியவள், வித்வானின் பத்னீ, ஆஹிதாக்னியின் பத்னீ, யோகியின் பத்னீ, தன் பேத்தி என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது.

மேலும் அக்னிஹோத்திரத்துக்கான பசுவை கொல்லக்கூடாது; பெயர்ந்து இருந்தாலும் பெயராமல் இருந்தாலும் சிவலிங்கத்தை அசைக்கக்கூடாது, உயர்ந்த தேவர்களின் பிம்பங்களை சேதப்படுத்தலாகாது, இவை அதிபாதகங்கள்.

பெண்களுக்கு நீச புருஷனை சேர்வது, கர்ப்பத்தை அழிப்பது, கணவனை கொல்வது ஆகியவை குற்றங்கள்.

சமபாதகங்கள்:
ஐந்து மஹா பாதகங்கள் சொல்லப்பட்டன அல்லவா? இவை அவற்றுடன் ஒப்பிடக்கூடிய பாதகங்கள்.
பின் வருபவை ப்ரஹ்ம ஹத்யைக்கு சமமான பாதகங்கள்:
தன்னை சிறப்பித்துக் கொள்ள பொய் சொல்வது, மற்றவருக்கு ஹிம்சை ஏற்படும்படி அரசனிடத்தில் கோள் சொல்வது; குருவிடம் பொய்யாக தோஷம் சொல்வது, வேதத்தை நிந்திப்பது, மித்ரனை வதைப்பது, வேத அத்யயனம் செய்த பின் அதை மறப்பது.
யாகத்தில் இருக்கும் க்ஷத்ரிய வைச்யர்களை கொல்வது, ரஜஸ்வலா, (வீட்டுக்கு விலக்காக இருப்பவள்), கர்ப்பிணீ, அத்ரி கோத்திரத்தை சேர்ந்தவன், அறியப்படாத கர்ப்பம், சரணமடைந்தவள் இவர்களை கொல்வதும் சமபாதகம். இதில் ஒன்றிரண்டு முன்னேயே வந்துவிட்டதே? ஆமாம். ஆனால் இப்போது சொல்லப்படுபவை புத்தி பூர்வகமாக இல்லாமல் செய்வது பற்றியது. புத்தி பூர்வகமாக செய்தால் அதி பாதக வகையாகி விடும்.

சுராபானம் செய்வதற்கு சமமானவை பூண்டு முதலியவற்றை சாப்பிடுதல், கபடமாக பேசுதல், தன் மேன்மைக்காக பொய்யாக தன்னை புகழ்ந்து கொள்ளுதல், ரஜஸ்வலா ஸ்திரீயை சேருதல், வெண்கல பாத்திரத்தில் இளநீரைக் குடிப்பது, உப்புடன் பசுவின் பாலை குடிப்பது, வண்ணான் துறையில் ஸ்நானம் செய்வது, தாம்ர பாத்திரத்தில் பாலைக் குடிப்பது, நகநுனி பட்ட நீரை குடிப்பது எந்த நீரையுமே இடது கையால் குடிப்பது ஆகியன சுரா பானம் செய்ததற்கு சமமாகும்.

தங்கத்தை திருடியதற்கு சமமானவை: அடைக்கலத்தை அபகரிப்பது, மனிதன், குதிரை, வெள்ளி, பூமி, வஜ்ரம் (மணி)ஆகியவற்றை அபகரிப்பது பொன்னை திருடியதற்கு சமமாகும். இந்த பட்டியலில் ஸ்த்ரீ, பசுக்களையும் சேர்க்கிறார்கள்; நூறு பலம் தாம்ரம் திருடுவது தங்கம் திருடியதற்கு ஒப்பு என்றும் சொல்லப்படுகிறது.

கங்கா ஸ்தோத்ரம் -3




(5)

पतितोद्धारिणि जाह्नवि गङ्गे खण्डित-गिरि-वर-मण्डित-भङ्गे ।
भीष्म-जननि हे मुनि-वर-कन्ये पतित-निवारिणि त्रिभुवन-धन्ये ॥

பதிதோத்³தா⁴ரிணி ஜாஹ்நவி க³ங்கே³
க²ண்டி³த-கி³ரி-வர-மண்டி³த-ப⁴ங்கே³
பீ⁴ஷ்ம ஜநநி ஹே முநி-வர-கந்யே
பதித-நிவாரிணி த்ரிபு⁴வந-த⁴ந்யே

ஜஹ்னு முனிவரின் மகளே! பாதை தவறியவர்களை உயர்த்தி விடுபவளே! நீ எந்த பெரும் (இமய) மலையைப் பிளந்து கொண்டு வருகிறாயோ அதனால் (அதன் சிகரங்கள் உன்னிடம் பிரதிபலிப்பதனால்) உன் பிரவாஹம் அழகுபடுத்தப்படுகிறது. பீஷ்மனின் தாயே! மூவுலகையும் உய்வுறச்செய்பவளே!

patitoddhāriṇi jāhnavi gaṅge khaṇḍita-giri-vara-maṇḍita-bhaṅge
bhīṣma janani he muni-vara-kanye patita-nivāriṇi tribhuvana-dhanye


(6)

कल्प-लताम् इव फलदाम् लोके प्रणमति यस् त्वां न पतति शोके ।
पारावार-विहारिणि गङ्गे विमुख-युवति-कृत-तरलापाङ्गे ॥

கல்ப-லதாம் இவ ப²லதா³ம்' லோகே
ப்ரணமதி யஸ் த்வாம்ʼ ந பததி ஶோகே
பாராவார-விஹாரிணி க³ங்கே³
விமுக²-யுவதி-க்ருʼத-தரலாபாங்கே³

தாயே! கல்பவ்ருக்ஷத்தைப் போல் உன் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாய்! அத்தகைய உன்னைத் தொழுபவர்கள் (எதற்கும்) வருத்தப்படுவதில்லை.  புருஷனை அடையத்துடிக்கும் வனிதை போல் நீ கடலை அடையத்துடிக்கிறாய்!

kalpa-latām iva phaladām loke praṇamati yas tvāṁ na patati śoke
pārāvāra-vihāriṇi gaṅge vimukha-yuvati-kṛta-taralāpāṅge

Friday, July 27, 2012

பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 3


அது சரி, மஹாபாதகம், உபபாதகம்ன்னு எல்லாம் என்னமோ சொல்லறீங்களே அதெல்லாம் என்ன?
--
அதெல்லாம் ஒண்ணுமில்லை. பெரிய தப்பு சின்ன தப்புன்னு சொல்கிறோமே அது போல. பாபங்கள் ஒன்பது விதமாக சொல்கிறார்கள். அதுக்குத் தகுந்தாப்போலத்தான் தண்டனையும்.
லிஸ்ட் பார்க்கலாமா? மஹாபாதகம், அதி பாதகம், சம பாதகம், உபபாதகம், ஸங்கரீகரணம், மலிநீகரணம், அபாத்ரீகரணம், ஜாதி ப்ரம்சகரம், ப்ரகீர்ணம்.

 மஹாபாதகம்ன்னா ரொம்ப பெரிய பாபம். அது சின்ன லிஸ்ட்தான். மொத்தம் 5.
ப்ரஹ்ம ஹத்யை, ஸுராபானம், ஸ்வணஸ்தேயம், குருபத்னீ கமனம்; இந்த நான்கு பாபங்கள் செய்தவருடன் சேர்ந்திருப்பது. (இந்த 'சேர்ந்திருப்பது' என்கிற கடைசி பாபம் கலி யுகத்தில் இல்லை ன்னு ஒரு அமெண்ட்மென்ட் இருக்கிறது)

ப்ரம்ஹம் என்பது வேதம். வேதமே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதால் அது முக்கியம். வேதம் பயிலும் ப்ராம்ஹணன் இல்லாமல் அது இங்கே உலகில் இருக்காதாகையால் வேதம் பயின்ற ப்ராம்மணனை கொல்வது மஹா பாதகமாக சொல்லப்பட்டது. அடுத்து சுரா பானம். இது பொதுவாக ஆல்கஹாலைத்தான் குறிக்கிறது. ஒருவன் தன் சுய நிலையில் இல்லாமல் உள்ள போது மேலும்  பல பாபங்கள் செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.

ஸ்வர்ணம் என்பது தங்கம். இதை வெறும் உலோகமாக பார்க்கக்கூடாது. தங்கம் என்பது மஹா லக்ஷ்மி ஸ்வரூபம். அதற்கு தோஷமேற்படாது. அது வீட்டில் இருந்தாலே மங்களம் ஏற்படும் என்பதால்தான் இந்தியர்கள் வேறு எந்த நாட்டினரையும் விட தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கம் ஹெவி மெடல். ப்ரோட்டீனை அது சிதைக்கும். அதனால்தான் ராஜாக்கள் தங்கதட்டை பயன்படுத்தினார்கள் போலிருக்கிறது. ப்ரோட்டீன் விஷங்கள் பலனற்று போய்விடும் போலிருக்கிறது!இப்படிப்பட்ட தங்கத்தை திருடிவிட்டால் இழப்பு அதிகமாகவே இருக்கும்! அந்த காலத்தில் வாழ்வு ஆதாரமே கூட போய்விட்டிருக்கும்.

ஒருவனுக்கு வாழ்கையில் வேதக்கல்வியை கற்றுகொடுத்து அவன் வாழ்கையையே உருப்பட வைக்கும் குருவின் பத்னி தாய்க்கு சமம் ஆவாள். இவளுடன் போகம் செய்வது மஹாபாதகம்.

ஒரு கொலை நடந்தது என்றால் அதில் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களுமே அந்த கொலையை செய்தவர்களே. ஆனால் இவர்களுடைய இன்வால்வ்மென்டை பொருத்து பாபமும் தண்டனையும் ஏற்படுவதில் கொஞ்சம் நீக்குப்போக்கு இருக்கும்.


கொல்லுகிறவன், அனுமதிக்கிறவன், உபாயம் சொல்லுகிறவன், பிடித்துக்கொடுப்பவன், உத்ஸாஹம் செய்கிறவன், சஹாயம் செய்பவன், வழி சொல்பவன், இருப்பிடமாக இருப்பவன், ஆயுதம் கொடுப்பவன், கெடுதி செய்வோருக்கு அன்னம் கொடுத்தவன், சக்தி இருந்தும் அனாதரவாக இருந்தவன், சரிதான் என்று அனுமோதிக்கிறவன்இப்படி எல்லாருமே கொலை செய்தவர்கள் ஆவார்கள்.
இதுக்கும் எக்செப்ஷன் இருக்குமில்லே?

பரோபகாரத்துக்காக ஒரு வேலை செய்யப்போய் அதில சாவு ஏற்பட்டுப் போச்சுன்னா அதுக்கு தோஷம் இல்லையாம். “ பசு, ப்ராம்ஹணன் முதலியவர்களுக்கு மருந்து, எண்ணை முதலியது, ஆகாரம் இவற்றை கொடுத்து அவற்றால் வ்யாதி உள்ளவன் இறந்து போனால் பாபத்தை அடைய மாட்டான்.” இது குறிப்பாக வைத்தியர்களுக்கு சொல்லி இருக்கிறது. (போகிற போக்கில்- மிக வயதானவர்களுக்கு மாத்திரையாக கொடுக்கக்கூடாது. சிரப் போலவே மருந்து கொடுக்க வேண்டும். மாத்திரையை முழுங்கப்போய் அது பாட்டு வழி தவறி மூச்சுக்குழாய்க்குள் போய் மூச்சு திணறி இறந்தவரை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்து இருக்கிறேன்.)

இதற்கு அடுத்த கீழ் லெவெல்…..
அதி பாதகம்:
 

கங்கா ஸ்தோத்ரம் -2


 

(3)
हरि-पद-पाद्य-तरङ्गिणि गङ्गे हिम-विधु-मुक्ता-धवल-तरङ्गे ।
दूरीकुरु मम दुष्कृति-भारं कुरु कृपया भव-सागर-पारम् ॥

ஹரி-பத³-பாத்³ய-தரங்கி³ணி க³ங்கே³
ஹிம-விது⁴-முக்தா-த⁴வல-தரங்கே³
தூ³ரீகுரு மம து³ஷ்க்ருʼதி-பா⁴ரம்'
குரு க்ருʼபயா ப⁴வ-ஸாக³ர-பாரம்

ஹரியின் திருவடி அலம்பிய நீரே நதி வடிவமாக வரும் கங்கையே! பனி, சந்திரன், முத்து போல் வெண்மையானவை உன் அலைகள்! என் பாபமெனும் பாரத்தை தூர விரட்டி ஸம்ஸார ஸாகரத்தைக் கடக்க கருணையுடன் அருள்வாய்!

hari-pada-pādya-taraṅgiṇi gaṅge hima-vidhu-muktā-dhavala-taraṅge
dūrīkuru mama duṣkṛti-bhāraṁ kuru kṛpayā bhava-sāgara-pāram


(4)

तव जलम् अमलं येन निपीतं परम-पदं खलु तेन गृहीतम् ।
मातर् गङ्गे त्वयि यो भक्तः किल तं द्रष्टुं न यमः शक्तः ॥

தவ ஜலம் அமலம்' யேந நிபீதம்'
பரம-பத³ம்' க²லு தேந க்³ருʼஹீதம்
மாதர் க³ங்கே³ த்வயி யோ பக்த³:
கில தம்ʼ த்³ரஷ்டும்ʼ ந யம: ஶக்த:

அன்னை கங்கையே! குற்றமற்ற உன் ஜலத்தை யார் அருந்துகிறார்களோ அவர்கள் பரம பதத்தை அடைகிறார்கள். உன் மீது பக்தி கொண்டவர்களை யமன் காணக்கூட இயலாது அல்லவா!

tava jalam amalaṁ yena nipītaṁ parama-padaṁ khalu tena gṛhītam
mātar gaṅge tvayi yo bhaktaḥ kila taṁ draṣṭuṁ na yamaḥ śaktaḥ


பாடல் தரவிறக்கத்துக்கு : 



Thursday, July 26, 2012

கங்காஸ்தோத்ரம்-1


 श्रीमच्छङ्करभगवत्पादविरचितं गङ्गास्तोत्रम्
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் இயற்றிய கங்காஸ்தோத்ரம்
Ganga Stotram by Shri Shankara Bhagavatpada

(1)
देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवन-तारिणि तरल-तरङ्गे
शङ्कर-मौलि-विहारिणि विमले मम मतिर् आस्तां तव पद-कमले

தே³வி ஸுரேஶ்வரி ப⁴க³வதி க³ங்கே³
த்ரிபு⁴வந-தாரிணி தரல-தரங்கே³
ஶங்கர-மௌலி-விஹாரிணி விமலே
மம மதிர் ஆஸ்தாம்' தவ பத³-கமலே


கங்கா தேவியே! தேவர்களுள் முக்கியமானவளே! பெருமை மிக்கவளே! நீ மூன்று உலகங்களையும் காப்பாற்றுகிறாய். உனது அலைகள் என்றும் நகர்கின்றன. நீ தூய்மையானவள், சங்கரனின் முடிமேல் இருப்பவள்! உனது பாத கமலங்களில் என் மனது நிலைக்கட்டும்!

devi sureśvari bhagavati gaṅge tribhuvana-tāriṇi tarala taraṅge
śaṅkara-mauli-vihāriṇi vimale mama matir āstāṁ tava pada-kamale



(2)
भागिरथि सुख-दायिनि मातस् तव जल-महिमा निगमे ख्यातः ।
नाहं जाने तव महिमानं पाहि कृपामयि माम् अज्ञानम् ॥

பா⁴கீ³ரதி² ஸுக²-தா³யிநி மாதஸ்
தவ ஜல-மஹிமா நிக³மே க்²யாத:
நாஹம்ʼ ஜாநே தவ மஹிமாநம்ʼ
பாஹி க்ருʼபாமயி மாம் அஜ்ஞாநம்


அன்னை பாகீரதீ! (எல்லோருக்கும்) சுகம் தருபவளே! உன் நீரின் சிறப்பு வேதங்களிலும் பாடப்படுகிறது! (ஆனால்) நானோ உன் மஹிமையை அறியேன்! என் அஞ்ஞானத்தைப் பொறுத்துக் காத்தருள்வாய்!

bhāgirathi sukha-dāyini mātas tava jala-mahimā nigame khyātaḥ
nāhaṁ jāne tava mahimānaṁ pāhi kṛpāmayi mām ajnānam

இந்த பாடலை முழு வடிவில் இங்கே தரவிறக்கி கேட்கலாம்.


Wednesday, July 25, 2012

பாபங்கள், ப்ராயச்சித்தங்கள் - 2


இனி வருவன இறந்த பின் ஒரு வாழ்வு இருக்கிறது, மறு பிறப்பு, அவற்றில் இப்படி இப்படி இருக்கிறது என்று எல்லாம் நம்புவோருக்கானது. உங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை எனில் காலத்தை இங்கே விரயம் செய்ய வேண்டாம். இதெல்லாம் உண்டு/ இல்லை என்ற வாதங்களுக்கு நான் தயாரில்லை.

ப்ராயஹ என்பது தபஸ் என பொருள் படும். சித்தம் என்பது நிச்சயம் என பொருள் படும் ஆக ப்ராயச்சித்தம் என்பது 12 வருஷம் அனுஷ்டிக்கப்படும் கர்மத்தால் நிச்சயம் பாபத்தை நீக்கும் என்ற நம்பிகையுடனும் விரத அனுஷ்டான ரூபமாகவும் உள்ளது எனப்படுகிறது.

விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாததாலும் செய்யக்கூடாததை செய்வதாலும், இந்திரியங்களை அடக்காததாலும் மனிதன் கீழானவன் ஆகிறான். ஆகையால் அவன் சுத்தமடைய  ப்ராயஶ்சித்தங்கள் செய்ய வேண்டும். செய்தால் இவனது ‘அந்தராத்மாவும்’ உலகமும் சுத்தமடைகிறது என்று யாக்ஞவல்கியர் சொல்லுகிறார்.

சரிதான், ஒரு வேளை செய்யாவிட்டால் என்ன இப்போது என்றால்…

ப்ராயஶ்சித்தம் செய்யாதவர்களும், பாபங்களை செய்பவர்களும், அதற்கு வருந்தாதவர்களும் கஷ்டமான பயங்கரமான நரகங்களை அடைகின்றனர் எனப்படுகிறது. 

அதெல்லாம் என்ன?

21 நரகங்கள் இருக்கிறதாம்.

தாமிஸ்ரம், லோஹசங்கு, மஹாநிரயம், சால்மலீ, ரௌரவம், கும்பளம், பூதிம்ருத்திகம், காலஸூத்ரம், ஸங்காதம், லோஹிதோதம், ஸவிஷம், ஸம்ப்ரதாபனம், மஹாநரகம், காகோலம், ஸஞ்ஜீவனம், மஹாபதம், அவீசி, அந்ததாமிஸ்ரம், கும்பீபாகம், அஸிபத்ரவனம், தபனம் ஆகிய இந்த 21 ஐயும் மஹாபாதகங்கள், உபபாதகங்கள் செய்தவர்கள் ப்ராயஶ்சித்தம் செய்யவில்லை என்றால் அடைவதாக சொல்கிறார்கள். இந்த 21 முக்கியமான நரகங்கள்தானாம்! இதில்லாமல் கொடிய நரகம்ன்னு எடுத்துக்கொண்டால் 28 கோடி இருக்காம்.
{பிற்சேர்கை: நண்பர் ஸ்ரீ இது குறித்த ஒரு லிங்க் கொடுத்து இருக்கிறார். இங்கே பொருத்தமாக இருக்கும். http://temple.dinamalar.com/news_detail.php?id=10977}

பாபங்கள் செய்தவர்கள் இங்கேயெல்லாம் இருந்து வேதனை அனுபவிக்கணும். எவ்வளவு நாள்?
மஹாபாதகம் செய்தால் சந்திரனும் நக்‌ஷத்திரங்களும் இருக்கும் வரை.
அதிபாதகமானால் முக்கால் ப்ரம்ம கல்பம் வரை. சமபாதகமானால் பாதி கல்பம் வரை. உபபாதகமானால் கால் கல்பம் வரை. மற்ற பாபங்களுக்கு அரைக்கால் கல்பம் வரை.
ஒரு கல்பம் என்பது சுமார்  435,37,20,000 ஆண்டுகள்! இது ப்ரம்மாவுக்கு ஒரு நாள். கணக்கு போட்டுக்கலாம்!

சரி, இப்படி வேதனை அனுபவித்த பிறகு? திருப்பி மனிதனாக பிறக்கணும்தானே?
அப்படி இல்லை. மனித பிறவி என்கிறது அரிதான விஷயமாம்!
அதெப்படி,  ஒரு தப்புக்கு ஒரு தண்டனைதானே இருக்கலாம்? தன்டனை அனுபவிச்சுட்டா பின்ன பழைய நிலமைக்குத்தானே போகணும்?

வாதம் சரிதான். ஆனால் கர்மா முழுக்க தீருகிறதில்லை. கொஞ்சம் மீதி இருக்கும் போதே போனால் போகிறது என்று நரகத்தில் இருந்து விடுதலையாக்கி விட்டுவிடுவார்கள். ஆயுள் தண்டனை என்றாலும் நன்நடத்தை, தலைவர் பிறந்த நாள். தேர்தல் பொருட்டு அவசரம் என்கிற மாதிரி முன்னாலேயே அரசு உத்தரவாலே ரிலீஸ் செய்கிறார்கள் இல்லையா? J அந்த மாதிரி அநியாயமா இல்லாட்டாலும் முழு கர்மா தீருமுன் அடுத்து மிருகங்கள், புழு, பூச்சி, புல், புதர், செடி கொடின்னு  பிறவி கொடுக்கப்படும். அதில் பெரும்பாலும் துன்பம்  அனுபவிக்கிற பிறவியா இருந்து அதையும் அனுபவிச்சு தீர்த்தபின் மனித பிறவிக்கு க்யூவில சேர்த்துடுவாங்க!
அது சரி, மஹாபாதகம், உபபாதகம்ன்னு எல்லாம் என்னமோ சொல்லறீங்களே அதெல்லாம் என்ன?



பாபங்கள்- ப்ராயச்சித்தங்கள்


ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அதன் சட்ட திட்டங்களிலும் அதை அமுல் படுத்துவதிலும் இருக்கிறது.செய்யப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்று ஒன்று இல்லாத பக்ஷத்தில் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்சர்வ சாதாரணமாக இப்போது குற்றங்கள் செய்வதும் பல காரணங்களால் அவற்றுக்கு தண்டனை கிடைக்காமல் போவதும் நடந்து கொண்டிருக்கிறதுஇதற்கு சாதிஅரசியல்பணம் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஒன்று இருக்கிறதுபாபம் செய்தவன் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்இது இப்போதெல்லாம் உடனடியாக நடை பெறுவதில்லை என்பதால் மக்கள் மனதில் நம்பிக்கை போய்க்கொண்டே இருக்கிறது.

குற்றங்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லைதண்டனைப்பற்றி பயமில்லாத சமூகம் உருப்படாதுசின்னதோ பெரிதோ அதற்கு தகுந்தபடி தண்டனை இருந்தே ஆக வேண்டும்தன் நீதியை ப்ரயோகிக்காவிட்டால் ராஜ்யம் விவஸ்தையற்று (order இல்லாமல்அழிந்துவிடும் என்கிறார் மனுசாதாரணமாக மனித ஸ்வபாவம் மலினமானதுஉள்ளுக்குள் இருக்கும் ஆசாபாசங்கள் அவனை எப்போதுமே தவறை செய்ய தூண்டுகின்றனஅதனால் அநியாய வழியில் இருப்பவன் மீது தண்டத்தை ப்ரயோகிக்க வேண்டும் என்றும் இந்த பயத்தால் ப்ரஜைகள் தர்மத்தின் படி நடப்பர் என்றும் மனு சொல்கிறார்.

சாலையில் காகிதம் போட்டாலே அபராதம் என சட்ட திட்டங்களை அமுல் படுத்தும் சிங்கப்பூரில் ஒழுங்காக இருக்கும் இந்திய நபர் இந்தியா வந்தால் அப்படி இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்ஏனென்றால் இங்கே சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை ஒழுங்காக அமுல் படுத்தப்படுவதில்லைகாவல் நிலையத்துக்கு குற்றவாளி போகு முன் உள்ளூர் கட்சிக்காரரிடமிருந்து போன் போகிறதுசரி என்று கிடைத்ததை வாங்கிக்கொண்டு விட்டுவிடும் பழக்கமும் வந்துவிட்டது.

என்டமுரி வீரேந்திரநாத் ஒரு கதையில் எழுதினார். "ஒரு கொலை செய்யப்பட்டால் அதற்கு வழக்கு பதிவாகி தண்டனை கொடுப்பதற்குள் ஏழு முக்கிய படிகள் இருக்கின்றனஅவற்றில் ஒரு படியை கவனிக்கும் ஆசாமியை கவனித்துவிட்டால் கூட தண்டனையில் இருந்து தப்பி விடலாம்.”

தப்பித்தவறி சமுதாய கவனிப்பு பெற்று விடும் வழக்குகளுக்கும் இப்போது ஒரு வேறு வித வழி வைத்து இருக்கிறார்கள்மீடியாக்கள் லபோ திபோ என்று அடித்துக்கொள்ளும் காலகட்டமான ஆரம்ப கட்டத்தில் குற்றவாளியை பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள்மெதுவாக அவர் பெயிலில் வெளியே வந்துவிடுகிறார்வழக்கு சில பல மாதங்கள் நடக்கிறதுகீழ் கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பாகி தண்டனையும் கொடுக்கப்படுகிறதுஇத்ற்குள் சமுதாய கொந்தளிப்பு அடங்கத்தொடங்கி விடுகிறதுஇன்னும் ஒரு வருடம் போனால் எல்லோரும் அதை மறந்தே போவார்கள்இந்த சமயத்தில் பெயிலில் இருக்கும் குற்றவாளி மேல்கோர்ட்டில் செய்த அப்பீலில் தவறான தகவல் அடிப்படையில் தண்டனை தரப்பட்டதாகவும்சட்டத்தை கீழ் கோர்ட் சரியாக கவனிக்கவில்லை என்றும் அது தவறு என்றும் சொல்லி ஆசாமி விடுதலை செய்யப்படுவார்இது எப்படி நிகழ்கிறதுஇது முழுவதும் ஒரு செட் அப்தான்வழக்காடப்படும்போதே ஓட்டை வாதங்களே முன் வைக்கப்படும்நடை முறைகள் சரியாக கடை பிடிக்கப்பட மாட்டாது.இருந்தாலும் குற்றவாளி என்பார்கள்மேல் கோர்டில் இந்த வாதங்களை ஒட்டியே வழக்கு நடக்கும்;நடை முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படும்சாட்சிகள் புதிதாக விசாரிக்கப்படுவதில்லைஓட்டை வாதங்கள் எடுபடாமல் போவதில் என்ன வியப்பு இருக்கிறது?இது போன்ற ஆசாமி எங்கள் ஊரிலேயே இருக்கிறார்.

இந்த குற்றங்களில் இருந்து இப்போதைக்கு தப்பி விட்டாலும் இயற்கையான தர்மம் அதற்கான தண்டனையை கொடுத்தே தீரும்டாக்டர்கள் சிலர் அவர்களிடம் அடிக்கடி தீராத பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகள் யார் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்த போது இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

குற்றங்கள் ஏராளமானவையாக இருந்தாலும் அவற்றுக்கான தண்டனையை சாத்திரங்கள் சொல்லியே வைத்து இருக்கின்றனதற்கால சட்ட திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்சாத்திரங்கள் சொன்னவற்றை சற்றே பார்க்கலாம்எவ்வளவு விஸ்தாரமான சிந்தனை இருந்திருக்கிறது என்பதும் விளங்கும்.
அவற்றை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

Sunday, July 22, 2012

ஜீவ காருண்யம்.




எங்க வீட்டில பொழுது சாயற வேளைக்கு இருந்தீங்கன்னா பட் பட் ன்னு ஒரு வினோதமான சத்தத்தை கேட்கலாம். அது வேற ஒண்ணுமில்லை. பக்கத்துல வீட்டில இருக்கிற மாமி கொசு கொல்லி பேட்டால கைங்கரியம் செய்கிற சத்தம்தான் அது. கொசுக்கள் எலக்ட்ரோக்யூட் ஆகி செத்து விழற சத்தம்.


கொசு மேலே உக்காந்து கடிக்குது. ஒரு ரிப்லக்ஸ்ல அதை அடிக்கிறோம். அது தப்பிக்கலாம் அல்லது அடிபட்டு செத்துப்போகலாம். அதோட தலைவிதியை பொறுத்து அது இருக்கு. இது கொஞ்சம் புரிஞ்சுக் கொள்ளக்கூடியதே! கவனியுங்க, புரிஞ்சுக்கொள்ளக் கூடியது. ஒத்துக்கொள்ளக்கூடியது இல்லே.

ஆனா வேணும்ன்னு இப்படி வெளியே போய் உட்கார்ந்துகிட்டு பேட்டாலே கொசுக்களை கொல்லறதை எதில சேர்க்கிறது? இது செல்ப் டிபன்ஸ் இல்லே! எதிர்வினையும் இல்லே. இவங்க என்ன நினைச்சு இப்படி செய்கிறாங்கன்னு தெரியலை! இப்படி தினம் நூறு கொசுக்களை கொன்னா அது இல்லாம போயிடுமா? அது ஆயிரக்கணக்கில இருக்கு. சீக்கிரமா உற்பத்தியும் ஆயிடும். இரண்டு வாரங்களிலே உற்பத்தி ஆகுதாம். அதுவும் வாழ சரியான சூழ்நிலை இல்லை- உறைபனி, வறட்சி ன்னா சரியான தருணத்துக்கு காத்திருக்குமாம்! ஆக கொசுக்களை மொத்தமா ஒழிக்க முடியாது.

மத்த ஜீவ ராசிகளுக்கு வாழ இல்லாத ரைட்ஸ் நமக்கு மட்டும் என்ன இருக்கு? சின்னதோ பெரிசோ அதுவும் ஒரு ஜீவன், நாமும் ஒரு ஜீவன்தான். பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. பின்னே ஏன் அதை அனாவசியமா கொன்னு நம் கர்மா மூட்டையை இன்னும் பெரிசாக்கிக்கணும்?

பின்னே என்ன செய்கிறது? கொசு கடிச்சா வியாதி வருமே ன்னா..
எல்லா கொசுக்களும் மனுஷனை கடிக்கிறதும் இல்லை.
கொசு கடிச்சா வியாதி வர வாய்ப்பு இருக்கே தவிர எப்பவுமே வரும்ன்னும் இல்லை.

சரியான வழி நாம் வாழுகிற பகுதிகளிலே இவை பல்கி பெருகாம பாத்துக்கிறதுதான். தண்ணீர் தேங்காத சாக்கடை, டயர் மாதிரி பொருட்களை சரியா வெச்சுக்கிறது தேவையில்லாம குழிகளை வெட்டுறது- இப்படி தண்ணீர் தேங்காம இருக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யலாம். இது சமூகத்தில செய்ய வேண்டியது. நம்மை பொருத்த வரைக்கும் கொசுக்கள் அதிகமா நடமாடுகிற நேரங்களில உள்ளே வராம கதவு, ஜன்னல்களை மூடி வைக்கலாம். நல்ல தற்காப்பு கொசு வலைதான். ரசாயன கொசு விரட்டிகள் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஆனவை. (அதைப்பத்தி இன்னைக்கு வந்த பதிவுதான் இதை எழுத வெச்சது.) நைலான் கொசு வலைக்குள்ள கொஞ்சம் சூடு அதிகம் இருக்கும். சேலத்து பக்கம் பருத்தி கொசு வலை விக்கிறாங்கன்னு சமீபத்தில பத்திரிகையில் படிச்சேன். அதில இப்படி சூடு அதிகமாகிறது இல்லையாம்.

மேட்ரிக்ஸ் படத்தில வர ஒரு வசனம்தான் நினைவுக்கு வருது. மனுஷன்தான் இருக்கிற உயிரினங்களிலேயே மோசமானவன். வைரஸ் மாதிரி.  எங்கே போனாலும் அங்கே இருக்கிற மற்ற உயிரினங்களை ஒழிக்கறதிலேயே இருக்கான். அப்புறம் பல்கி பெருகி வேற இடங்களுக்கு பரவி…. அங்கேயும் நாசம்தான்.

கொஞ்சம் யோசிப்போம்.

Friday, July 20, 2012

நடந்து கொள்ள வை.....

ஜென் மாஸ்டர் பாங்கி பேசப்போகிறார் என்றால் பெரிய கூட்டமே சேரும். அவருடைய சீடர்கள் என்று மட்டுமில்லை. பலருக்கும் அவருடைய உரைகள் பிடித்து இருந்தது. அவர் பெரிதாக எந்த புத்தகத்தையும் மேற்கோள் காட்டுவது போன்றவற்றை செய்ய மாட்டார். இதயத்தில் இருந்து பேசுவார். அது கேட்போர் உள்ளத்தை தொடும். இது நிச்சிரன் என்ற கோஷ்டியை சேர்ந்த ஒருவருக்கு பொறாமையை கொடுத்தது. ஒரு நாள் அவர் பாங்கியுடன் வம்பு வளர்க்க முடிவு செய்து அவரது உரை நடத்துமிடத்துக்கு போனார். "ஓய் பாங்கி, உமக்கு பெரிய கூட்டம் சேரலாம். அவர்கள் உன் மீது மதிப்பு வைத்திருக்கலாம். நீ சொல்லும்படி நடக்கலாம். ஆனால் எனக்கு உன் மீது மதிப்பு இல்லை. நீ சொல்வது போல நான் நடந்து கொள்ள மாட்டேன். உன்னால் என்னை அப்படி நடந்து கொள்ள வைக்க முடியுமா?" பாங்கி அமைதியாக சொன்னார். "ஓ நடந்து கொள்ள வைக்கலாமே! இப்படி வாருங்கள்" இவரும் போனார். "இங்கே இடது பக்கம் உட்காருங்கள்." உட்கார்ந்தார். "அங்கே வேண்டாம், இங்கே வலது பக்கம் உட்கார்ந்தால் இன்னும் நன்றாக பேச முடியும் போல் இருக்கிறது. வலது பக்கம் வாருங்கள்." இடம் மாறினார். "பரவாயில்லை! நீங்கள் எவ்வளவு நல்லவர்! நான் சொன்ன படி எல்லாம் நடந்து கொள்கிறீர்களே! இப்போது உட்கார்ந்து என் உரையை கேளுங்கள்!" மூலம்: http://www.ashidakim.com/zenkoans/4obedience.html

Sunday, July 15, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை 7


19.
घटकुड्यादिकं सर्वं मृत्तिकामात्रम् एव
तद्वद् ब्रह्म जगत् सर्वम् इति वेदान्तडिण्डिमः
ghaṭakuḍyādikaṁ sarvaṁ mṛttikāmātram eva ca |
tadvad brahma jagat sarvam iti vedāntaḍiṇḍimaḥ ||
¹கு¹ட்³யாதி³¹ம்ʼ ஸர்வம்ʼ ம்ருʼத்¹தி¹கா¹மாத்¹ரம் ஏவ ச¹ |
¹த்³வத்³ ப்³ரஹ்ம ஜக³த்¹ ஸர்வம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³: ||
குடம், சுவர் எல்லாம் மண்ணே, வேறில்லை. அது போல ப்ரம்மமே உலகெல்லாம்; வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.


20.
ब्रह्म सत्यं जगन्मिथ्या जीवो ब्रह्मैव नापरः
अनेन वेद्यं सच्छास्त्रम् इति वेदान्तडिण्डिमः
brahma satyaṁ jaganmithyā jīvo brahmaiva nāparaḥ |
anena vedyaṁ sacchāstram iti vedāntaḍiṇḍimaḥ ||
ப்³ரஹ்ம ஸத்¹யம்ʼ ஜக³ந்மித்²யா ஜீவோ ப்³ரஹ்மைவ நாப¹: |
அநேந வேத்³யம்ʼ ஸச்¹சா²ஸ்த்¹ரம் இதி¹ வேதா³ந்த¹டி³ண்டி³: ||
ப்ரம்மமே ஸத்யம்; ப்ரபஞ்சம் மித்யை (உண்மை என்றோ பொய் என்றோ சொல்ல முடியாதது.) ஜீவன் ப்ரம்மமே, வேறொன்றுமில்லை. இவ்வாறே சாத்திரத்தின் பொருளைச் புரிந்துகொள்ளவேண்டும். வேதாந்தங்கள் இதையே பறைசாற்றுகின்றன.


21.
अन्तर्ज्योतिर् बहिर्ज्योतिः प्रत्यग्ज्योतिः परात् परः
ज्योतिर्ज्योतिः स्वयंज्योतिः आत्मज्योतिः शिवोऽस्म्यहम्
antarjyotir bahirjyotiḥ pratyagjyotiḥ parāt paraḥ |
jyotirjyotiḥ svayaṁjyotiḥ ātmajyotiḥ śivo'smyaham || 

அந்த¹ர்ஜ்யோதி¹ர் ப³ஹிர்ஜ்யோதி¹: ப்¹ரத்¹யக்³ஜ்யோதி¹: ¹ராத்¹ ¹: |
ஜ்யோதி¹ர்ஜ்யோதி¹: ஸ்வயம்ʼஜ்யோதி¹: ஆத்¹மஜ்யோதி¹: ஶிவோ`ஸ்ம்யஹம் ||
உள்ளும் புறமும் ஜ்யோதியாய் இருப்பவன் நானே! மனதில் ஒளிரும் ஜ்யோதியும் நானே! எந்த ஜ்யோதியுக்கும் உயர்ந்ததாய், ஜ்யோதிக்கும் ஜ்யோதியாய், சுயம் ஜ்யோதியாய் ஆத்ம ஜ்யோதியாய் மங்களமாய் இருப்பவன் நானே!



அத்வைதம் மங்களம்