Pages

Thursday, March 22, 2012

உரத்த சிந்தனை -புண்ணியம் பாபம் -3


போன பதிவிலே "ஒத்தர் ரொம்ப சுலபமா சொல்லிட்டார்: புண்ணியம் பாபம் ஏதுன்னு கேக்கறீயா? ” ன்னு எழுதி இருந்தேன். அது மஹாபாரதத்தில வருகிறது. ரந்தி தேவர் சொன்னதா சாந்தி பர்வத்திலே வ்யாஸர் எழுதி இருக்கிறதா நினைவு.
"ஸ்லோகார்த்தேன ப்ரவக்ஷ்யாமி யதுக்தம் க்ரந்த கோடிபி: பரோபகாராய புண்யாய பாபாய பரபீடணம்.”
--
சரி, நிறைய பாபம் பண்ண ஆசாமி கோவில் கோவிலா போய் பூஜை அபிஷேகம் எல்லாம் செஞ்சா செய்த பாபம் எல்லாம் போயிடுமா ன்னு கேட்டா...
நல்ல கேள்விதான்! நிறைய அரசியல்வியாதிங்க அப்படித்தானே செய்து கொண்டு இருக்காங்க?
இது அடிப்படையில கர்மா பலன் கொடுக்கிறது பத்திய சமாசாரம். சில ப்ராயசித்தங்கள் செய்தா கர்மாவோட பலனை அது கொஞ்சம் பாதிச்சு தற்காலிக நிவாரணமோ அல்லது தாக்கத்தை கம்மியாக்குவதோ நடக்கக்கூடியதுதான். ஆனா பலனை எப்படியுமே அனுபவிச்சே ஆகணும். இது கூட்டல் கழித்தல் கணக்கு மாதிரி புண்ணியம் 2 கிலோ பண்ணேன், பாபம் 2 கிலோ பண்ணேன்; தானிக்கி தீனி சரி போயிந்தி ன்னு சொல்ல முடியாது. இந்த இரண்டு கணக்கு புத்தகங்களும் வேற வேற. புண்ணியம் பண்ணியா, பிடி சுகம். பாபம் பண்ணியா, பிடி கஷ்டம்!
இந்த சுகமும் கஷ்டமும் எப்போ வரும் எப்ப அனுபவிக்கணும்ன்னு பிறக்கும்போதே தீர்மானம் ஆயிடும். அதுக்கு தகுந்தாப்போல வாழ்கையில சூழ்நிலைகள் அமையும். நல்ல ஜோதிடர்கள் இதை அடையாளம் கண்டு இன்ன இன்ன காலகட்டத்தில இப்படி இப்படி அமையும்ன்னு சொல்லுவாங்க. நமக்கு காரணமே இல்லாம சில நாட்கள் சோறு கிடைக்க மாட்டேங்குது. என்னதான் வசதி இருந்தாலும், ஹோட்டல்ல போய் சாப்பிட த்ராணி இருந்தாலும் எங்கேயாது மாட்டிக்கிட்டு சோறு கிடைக்காம திண்டாடுவோம்! அது கர்மாவோட பலன்தான். மத்த நாட்களில கிடைக்கறதும் கர்மாவோட பலன்தான். அது ஒரு கர்மாவோட பலன்; இது இன்னொரு கர்மாவோட பலன்!
அதனால நாம ஒழுங்கா நடந்துக்கற வழியை பார்க்கணும். உடனடியா அதோட பலன் இல்லைன்னாலும் பின்னால் கஷ்ட படாம இருக்க அது உதவலாம். செய்யற பாபத்தை செய்துகிட்டு உடனடி தண்டனைதான் இல்லையே என்கிற தைரியத்துல மேலே மேலே தப்பு செய்து கர்ம மூட்டை பளுவை அதிகமாக்கிக்கறதுல அர்த்தமே இல்லை.
அடிப்படையில உலகத்தைப்பத்திய நம்மோட ஆட்டியூட் மாறணும். மாறலைன்னா எந்த ஆன்மீக சாதனையும் கொஞ்சம் கூட முன்னேறலைன்னு அர்த்தம். எந்த பூஜை புனஸ்காரமும் பலிக்கலைன்னு அர்த்தம். அதுல நம்ம மனசு சரியா ஈடுபடலைன்னு அர்த்தம்.
யோசிப்போம்!
 

No comments: