Pages

Tuesday, February 7, 2012

உரத்த சிந்தனை -வைராக்யம்



உரத்த சிந்தனை:
காமம் பத்திப் பார்த்தோம். இந்த காமத்தைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்து சாதிக்கணும்ன்னு பார்த்தோம். அதுக்குத் துணையா நிற்பது வைராக்கியம். 
வைராக்கியம் என்கிற வார்த்தை அர்த்தம் மாறிப்போய் புழங்குகிற வார்த்தைகளில ஒண்ணு. பலரும் இதை திடச்சித்தம்-  டிடர்மினேஷன் என்கிற ஆங்கில வார்த்தை- பொருளில பயன்படுத்தறாங்க.  உண்மையில் பொருள் அப்படி இல்லை. வைராக்யம் என்கிற சம்ஸ்க்ருத சொல்லுக்கு அர்த்தம் பற்றின்மை.
பின்ன ஏன் இப்படி அர்த்தம் மாறிப்போச்சுன்னா..
பற்றில்லாம இருக்க திடச்சித்தம் நிறையவே வேணும். எனக்கு இனிமே இனிப்பே வேணாம் ன்னு முடிவு செய்தா யாராவது அருமையான இனிப்பைக் கொண்டு வந்து இந்தான்னு கொடுப்பாங்க. மனைவி மக்கள் கிட்டே பற்று இருக்கக்கூடாதுன்னு நினைச்சா பேத்தியோ பேரனோ - ஒரு குழந்தை வந்து கட்டிக்கொண்டு சிரிக்கும். மனசு நெகிழ்ந்து போயிடும்!
என்ன இது பற்றில்லாம இருக்க முடியுமா?
முடியும்.
அதுக்கு ஒரு மனப் பக்குவம் வரணும்.
காமம் போச்சுன்னா இந்தப் பக்குவம் வர வாய்ப்பு அதிகமாகவே இருக்கு.
காமம் ன்னு கூட சொல்ல வேண்டாம். ராகம் போனாலும் கூடப் போதும்.
சங்கீத ரசிகர்கள் அடிக்க வராதீங்க!
சாதாரண ஆசைக்கு அடுத்த படி ராகம். இது எனக்கு வேணவே வேணும். அது இல்லாம இருக்க முடியாது என்கிறது. 
இந்த ராகத்துக்கு ஆப்போஸிட் விராகம்.
விராகத்தோட இருக்கிற தன்மைதான் வைராக்யம். 
அப்ப வைராக்கியம் வந்த ஆசாமி நாட்டை விட்டுக் காட்டுக்குப் போயிடணுமா? அவனால இந்த உலகத்துக்கு என்ன ப்ரயோஜனம்? அவன் இருந்தா என்ன இல்லாட்டா என்ன?

அப்படி இல்லை. வைராக்யம் வந்த ஆசாமி இதே உலகில் இருக்கலாம். வாழலாம். மத்தவங்களுக்கு ப்ரயோஜனமாகவே.

ஒரு காட்டில துறவி ஒத்தர் ஒரு சின்னக் குடிசையைப் போட்டுக்கொண்டு துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தார். தலை நகரத்துலேந்து வெகு தூரம் வேட்டையாட வந்த ராஜா இவரைப் பார்த்தான். அவரை அணுகி வணங்கி உபதேசம் செய்யக்கேட்டான். ராஜாவாச்சே! சரின்னு துறவியும் பல விஷயங்கள் பத்தி பேசினார்.
ராஜாவுக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு.
அடிக்கடி வந்து உபதேசம் கேட்டான். ராஜ்யம் நடத்துகிற விஷயம் மட்டும் இல்லாம அத்வைதமும் விசாரணை விஷயமாச்சு. இப்படியே போய்கிட்டு இருக்கிறப்ப மந்திரிகள் முதலானவர்கள் ஆக்ஷேபணை தெரிவிச்சாங்க. நீங்க பாட்டுக்கு நாள் கணக்கா காட்டுக்குப் போயிட்டா எப்படி நிர்வாகம் நடக்கிறது ன்னு கேட்டாங்க. அதுவும் சரிதான். ஆனா அத்வைத விசாரணையோ காலம் பிடிக்கற சமாசாரம். என்ன செய்யலாம்?
ராஜா யோசிச்சு துறவிகிட்டே போய் உங்ககிட்ட  பாடம் கேட்ட ஆசையா இருந்தாலும் நடைமுறைச் சிக்கல் இருக்கு. நீங்க பேசாம என் கூட அரண்மனைக்கு வந்துடுங்களேன் ன்னு கேட்டான். துறவி "அப்பா நீ ஒண்ணு ராஜ்யத்தைப்பத்திக் கவலைப்படணும். இல்லை அத்வைத விசாரணையை முழு நேரமா எடுத்துக்கணும். ரெண்டும் இல்லாம அவஸ்தைப் படாதே. என்னை மாதிரி துறவிங்களுக்கு அரண்மனை வாழ்க்கை எல்லாம் சரிப்படாது" ன்னு சொன்னார். ராஜாவோ அதைக் கேட்கலை. திருப்பித் திருப்பி வற்புறுத்தினான்.
சரின்னு துறவியும் ராஜாவோட அரண்மனைக்கு வந்துட்டார்.
ராஜா வேலைக்காரர்களைக் கூப்பிட்டு இவரை நல்லா கவனிச்சுக்குங்கன்னு உத்திரவு போட்டு விட்டு அரசியலைக் கவனிக்கப் போயிட்டான்.- தொடரும்

3 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இங்கயும் தொடருமா...;)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... இங்கயும் தொடருமா...;)

திவாண்ணா said...

ஏடிஎம், இங்கே எப்பவுமே தொடரும்!