Pages

Monday, November 28, 2011

ஏன் இன்னும் உரை?


ஒரு இறை அடியார் ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தார். முதலில் அவரது உரையை கேட்க பெரிய கூட்டம் கூடியது. நாளாக ஆக கூட்டம் குறைந்து யாரும் வருவதே நின்று போயிற்று.

இருந்தாலும் அவர் தன் தினசரி பிரசங்கத்தை நிறுத்தவில்லை.

இதை கவனித்த ஒரு யாத்ரி அவரை கேட்டார். ஏன் இன்னும் உரை நிகழ்த்துகிறீர்கள்? யாரும் வருவதில்லையே? இறை அடியார் சொன்னார், “முதலில் நான் மக்களை மனம் மாற்ற உரை ஆற்றினேன். இப்போது அவர்கள் என்னை மனம் மாற்றாமலிருக்க உரை ஆற்றுகிறேன்!”

"யார் கூட இருக்கோம்ன்னு ஜாக்கிரதையா இருக்கணும்ப்பா!"

No comments: