Pages

Friday, November 11, 2011

அவரவர் பார்வை.....


அவரவர்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது. அதை பொறுத்துப்போவதே நல்லது...

ஒரு ரயில் நிலையத்தில் ஒரு கொலை நடந்தது. ரயில் பெட்டியில் ஏறிய ஒருவரை பின்னாலேயே ஒருவன் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான். போலீஸார் விசாரித்தனர். கொலையை நேரில் பார்த்தவர் யாரும் இல்லை -ஸ்டேஷன் மாஸ்டரைத்தவிர. ஆகையால் அவரை ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதித்தர சொன்னார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் எழுதினார்: ரயில் வண்டி நம்பர் 556, 2 ஆம் ப்ளாட்பாரத்தில் 5 நிமிஷம் தாமதமாக வந்து சேர்ந்தது. நான் ப்ளாட்பாரத்தில் நின்று கொண்டு கண்காணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது 5566 நம்பர் கோச்சில் சிவப்பு சட்டை அணிந்த ஒரு நபர் ஏறினார். அவரைத்தொடர்ந்து கருப்பு டீஷர்ட் அணிந்த நபர் ஒருவர் ஏறினார். இவர் தன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து சிவப்பு சட்டை நபரை பல முறை குத்தினார். பின் ரயில்வே விதிகளுக்கு புறம்பாக அடுத்த பக்கம் தண்டவாளத்தில் இறங்கி சென்று இவ்வாறு சட்டத்தை மீறியவராக நடந்து கொண்டார்...
---
சர்சை தீயிட்டு கொளுத்தியதாக ஒரு கனவான் மீது வழக்கு போடப்பட்டது. பத்திரிகைகளூக்கு அவர் பேட்டி கொடுத்தார். சர்ச் எரிந்து போனதுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அப்படி செய்வது என் நோக்கமல்ல. யாரோ அதில் கார்டினல் இருப்பதாக தவறான செய்தி கொடுத்தார்கள்.....

No comments: