Pages

Wednesday, September 28, 2011

அன்பு...


முன் ஒரு காலத்தில் ஒரு சிறுமி ஒரு நோயால் இறந்து கொண்டு இருந்தாள். மருந்துகள் மாத்திரைகள் என்று பிரபலமாகாத காலம். வைத்தியர் என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அவளது சகோதரன் கொஞ்ச நாள் முன்தான் இதே நோய் தாக்கி பிழைத்து இருந்தான். அப்போது அவன் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும்.

டாக்டர் பையனை கேட்டார். "உன் சகோதரி பிழைக்க வேண்டுமானால் உன் ரத்தத்தை அவளுக்கு கொடுக்க வேண்டும். சம்மதமா? "

பையனுக்கு தூக்கி வாரி போட்டது. பயந்து போனான். அரை நிமிடம் சென்றபின் "சரி, எடுத்துக்கொள்ளுங்கள்" என்றான்.
தேவையான அளவு மட்டும் ரத்தம் எடுக்கப்பட்டு சிறுமிக்கு செலுத்தப்பட்டது. ஒரு மணி சென்றது. சிறுமி நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது. இனி பிழைத்துவிடுவாள் என்றார் வைத்தியர்.

சிறுவன் சிறிது தயங்கிவிட்டு கேட்டான். நல்லது டாக்டர், நான் எப்போது செத்து போவேன்? அப்போதுதான் டாக்டருக்கு புரிந்தது. சிறுவன் தன் ரத்தத்தை கொடுப்பதால் தன் உயிரையே கொடுப்பதாக நினைத்தான் என்று!

No comments: