Pages

Thursday, August 18, 2011

நடக்க வேண்டி இருந்தா அது நடந்தே தீரும்...



ஏன்?

எதிர் பாராம இங்கே ஒரு கமா போட்டுட்டேன். பதிவு நீளம் அதிகமா போச்சுன்னு வெட்டின
துல இங்கே நின்னு போச்சு. இது ஒரு எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும்ன்னு யோசனை பண்ணலை. இருந்தாலும்....

இது இப்படின்னு எந்த சாஸ்திரத்திலேயும் இல்லை. உரத்த சிந்தனையில் இது ஒரு பகுதி; அவ்வளவே. குழந்தையா இருந்தப்பவே திருமணம் செய்து வெச்சது ஒரு காலம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தள்ளி போக ஆரம்பிச்சது. காலேஜ் படிக்கும் போது திருமணம்ன்னு ஆச்சு. அப்புறம் பெண்களும் படிக்கணும், அப்புறம் கல்யாணம்ன்னு ஆச்சு. அப்புறம் பெண்கள் படிச்சு மேல் படிப்பும் படிச்சு.. அப்புறம் படிச்சு வேலைக்கும் போய்... அப்புறம் வேலைக்கு போய் கொஞ்சம் கையில சம்பாதிச்சும் வெச்சு கொண்டு... இப்படியாகவே போய் இப்பல்லாம் கல்யாணம் ஆகிற போது அரை கிழவன் அரை கிழவி ஆகிறதாக போச்சு.

இதோட விஷயம் -நல்லதா கெட்டதா எல்லாம் - இப்ப விவாதிக்கலை. விஷயம் என்னன்னா கல்யாணம் ஆவதற்கான / குழந்தை பெறுவதற்கான கிரக நிலை வந்து போயிடுது. (அதாவது அதற்கான சூழ்நிலை வந்து போயிடுது. அதை கிரக நிலை காட்டுது.) அப்புறம் வருந்தி இல்லாத வைத்தியம், பிராயச்சித்தம் ன்னு அலையறதுல என்ன விஷயம் இருக்கு? பஸ்ஸை கோட்டை விட்டவங்க அடுத்த பஸ் வர வரை காத்து இருக்க வேண்டியதுதான். சிலர் பஸ்ஸை காணமேன்னு இன்னொரு பஸ்ஸை பிடிச்சு சில மாசங்களுக்குள்ள "இன்கம்பாடபில்" ன்னு சொல்லி இறங்கற சமாசாரமும் அதிகமாயிட்டு வருது. சமூகத்தில பாரம்பரிய சிந்தனை உள்ளவங்க பலருக்கும் இது வருத்தம் தரக்கூடியதா இருக்கு.


ஜோதிடத்தை பத்தி எழுதினதுல சில பின்னூட்டங்கள். எனக்கு மிகவும் சரியாவே இருந்தது என்பது முதல் எனக்கு முழுக்க முழுக்க தப்பா சொன்னாங்க, அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வரை. என் அனுபவமும் முழுக்க முழுக்க இந்த ஸ்பெக்ட்ரம்ல இருக்கு. சிலர் சொல்வது பலிக்குது. அந்த சிலரே வேறு நபர்களுக்கு சொல்லி பலிக்கலை. எல்லாத்துக்கு நேரம் காலம் சரியா இருக்கணும் போல இருக்கு. அதான் முன்னேயே சொன்னேனே - ஆனானப்பட்ட வசிஷ்டர் சொன்னதே வொர்க் அவௌட் ஆகலைன்னு. ஒரு விஷயம் சர்வ நிச்சயமா நடக்க வேண்டி இருந்தா அது நடந்தே தீரும். பெரிய ஜோதிஷ சக்ரவர்த்தின்னு பட்டம் வாங்கி இருந்தாலும் அப்போதைக்கு கண்ணை மறைச்சுடும். திருப்பி ஒரு நாள் ஜாதகத்தை பாக்கிற அதே ஆசாமி " அடடா! நான் அப்படியா சொன்னேன்? இதை எப்படி பார்க்காம விட்டேன்?” ன்னு வருத்தப்படறதையும் கேள்விப்பட்டு இருக்கேன்.

வரதை அப்படியே ஏத்துக்கவும் ஏத்துக்கலாம். இது மிக அரிதுன்னு சொன்னேன். தலை வலி வந்தா அப்படியே அனுபவிக்கவும் அனுபவிக்கலாம். இல்லை ஒரு வலி நிவாரண மாத்திரை சாப்பிடவும் சாப்பிடலாம். இல்லை டாக்டர்கிட்டே போகவும் போகலாம். சாய்ஸ் நம்மகிட்டே இருக்கு. மாத்திரை சாப்பிடறது இல்லை டாக்டர்கிட்டே போகிறது என்பது இன்னொரு செயல். செயல்தானே கர்மா? இந்த கர்மாவும் பலன் தரனுமே? எதிர்பார்க்கிற பலன் வலி நிவாரணம். இதுவும் நடக்கலாம். இல்லை இன்னிக்கு அவஸ்தை பட்டுத்தான் தீரணும்ன்னு இருந்தா தலைவலி போய் வயத்து வலி வரலாம். பலமான கர்மா எப்படியும் ஒரு பலனை கொடுத்துவிட்டே போகும்.

வெகு நாட்கள் மைக்ரேன் தலைவலியால கஷ்டப்பட்டு இருக்கேன். எங்க அப்பா ஹோமியோபதி மருந்து கொடுப்பதுண்டு. பலருக்கும் நிவாரணம் கிடைச்சு இருக்கு. அலோபதி மருந்துகள் சரி வரலைன்னு அப்பாகிட்டே மருந்து கேட்டேன். அவரும் விலாவரியா விசாரிச்சுட்டு மருந்து கொடுத்தார். அப்புறம்தான் இந்த தமாஷை அனுபவிக்க ஆரம்பிச்சேன்! தலைவலி வரது நின்னு போய் வயித்து வலி வர ஆரம்பிச்சது. அதுக்கு மருந்து கொடுத்தார். வாய்ப்புண் வந்து அவஸ்தை. அதுக்கு மருந்து கொடுத்தார். திருப்பி தலைவலி. இப்படி ஒண்ணு மாத்தி ஒண்ணு வர கடைசியில ஹோமியோபதி மருத்துவத்தை கை விட வேண்டி வந்தது.

இதுக்காக ஹோமியோபதி மருத்துவத்தை சரி இல்லைன்னும் சொல்ல முடியாது. அல்லது எங்க அப்பா நல்ல ஹோமியோபதி மருத்துவர் இல்லைன்னும் சொல்ல முடியாது. சின்ன குழந்தைகளுக்கு அவர் கொடுக்கிற மருந்துகள் நல்லாவே கேக்கும். ஹெர்பீஸ் சீக்கிரம் குணமாகும். குறிப்பா வயசானவங்களுக்கு … இந்த மருந்துல 'போஸ்ட் ஹெர்பிடிக் ந்யூரால்ஜியா' என்கிற அக்கி வந்து போன பிறகு வருகிற வலி வராது. ஆக அனுபவிக்க வேண்டிய கர்மா பலமாக இருக்க அனுபவிச்சே தீர வேண்டியது. உரத்த சிந்தனையா இருக்கறதால கொஞ்சம் டைக்ரஸ் ஆகிவிட்டோம். அடுத்து தேவர்களை பார்க்க திருப்பியும் போகலாம்.

12 comments:

Kavinaya said...

சில விஷயங்கள் நடக்கற போது, இதை அவன் விருப்பம்னு நினைச்சு ஏத்துக்கறதா, இல்லை ஏதாச்சும் செய்யணுமான்னு குழப்பமா இருக்கும். இப்போ ஏதோ கொஞ்சூண்டு புரிஞ்ச மாதிரி இருக்கு! நன்றி திவாஜி.

Geetha Sambasivam said...

இதுக்குக் கொடுத்த கமெண்டைக் காணோம். :( போகட்டும், வருவதை ஏத்துக்கறது என்பதற்கும் மனப்பக்குவம் வேண்டும் இல்லையா? எல்லாராலும் அப்படி முடியாது. அப்படிப் பட்டவங்க தான் ஜோசியம், மாந்திரீகம், தாந்திரீகம்னு அலையறாங்கன்னு தோணும்.

எங்களுக்கெல்லாம் எழுதியே கொடுத்தாங்க, இப்படித் தான் நடக்கும்னு. அவ்வளவு ஏன்? நான் வேலையிலே சேர்ந்ததும் கூட எங்க ஜோசியர் ஒரு குழந்தைக்குப் பின்னர் வேலைக்கே போகமாட்டானும் சொன்னார். அப்போ இருந்த சூழ்நிலையிலே இதை நிச்சயமா நாங்க யாருமே நம்பவும் இல்லை. ஆனால் அதுதான் நடந்தது. அவருடைய கடைசிக் காலம் கூட இப்படித் தான் முடியும்னு எழுதி வைச்சிருந்தார். அவர் சொன்னாப்போலவே அவரின் அந்திமம் நடந்தது. ஆனால் அவர் அனுபவிச்சது பணமோ, பதவியோ, சொத்தோ, சுகமோ இல்லை; சாப்பாட்டுக்குக் கூடக் கஷ்டம். ஜோசியத்துக்குப் பணம் வாங்க மாட்டார்.

எங்க அப்பா தானாக மனமுவந்து அரிசி, பருப்புனு வீட்டிலே கொண்டு கொடுப்பார். சில சமயம் எங்க வீட்டுக்குச் சாப்பிடனு வருவார்; அன்னிக்குனு அசந்தர்ப்பமாய் இருக்கும். அப்போவும் சொல்லுவார். இன்னிக்கு ஏகாதசினு மனசிலே பட்டது; இருந்தாலும் கேட்க வந்தேன் என்பார்.

Geetha Sambasivam said...

பொதுவா ஜோசியர் இளமையாக இருக்கணும்னு சொல்வாங்க. வைத்தியம் அனுபவஸ்தர்கள் கொடுக்கணும்னும் சொல்வாங்க.

பால ஜோசியம், விருத்த வைத்தியம்னு சொலவடை. இவர் வயசானவர் தான் ஆனாலும் எல்லாமும் நடந்தது.

sury siva said...

ஒரு சமாசாரம் சொல்லணும் கதையில்லை. நடந்துதான்.

1994 லே அப்படின்னு நினைக்கிறேன். என்கிட்டே தன்னோட பையன் ஜாதகத்தைக் கொண்டு வந்து
" நீங்க பாத்து சொல்லுங்கோ !! இந்த பையனுக்கு ஏதாச்சும் வேலை கிடைச்சு, அம்மா அப்பாவை
அவா கடைசி காலத்துலே காப்பாத்துவானான்னு " அப்படின்னு கேட்கறா ஒரு லோயர் மிடில் க்ளாஸ்
அம்மா.

பையன் எம்.எஸ்.ஸி. ஃபிஸிக்ஸ் படிச்சு அதக்கப்புறம் ஒரு பி.ஜி.டி.ஸி.ஏ. மாதிரி ஒரு கம்ப்யூடர்
கோர்ஸ் வேற பண்ணிருக்கான். வேலை ஏன் கிடைக்கல்ல அப்படின்னு ப்ராக்டிகலா பார்த்தா
பையன் எந்த ஒரு கேள்விக்கும் ஆங்கிலத்திலோ தமிழிலோ பதில் அளிக்க இயலவில்லை.
நீ எம்.எஸ்.ஸி படிச்சதுல்லே உனக்கு நன்னா தெரிஞ்ச பாடத்துலே ஒரு இரண்டு நிமிஷம் பேசேன்
அப்படின்னு சொன்னேன். அப்படியும் வாய திறக்க காணோம்.

அவனுக்கு யாரும் உத்யோகம் கொடுக்க ரெடியா இல்ல. பையன் எல்லா இன்டர்வ்யூவிலேயும்
மிசரபிள் ஃபைல்யூர்.
சுப்பு ரத்தினம். (contd.)

sury siva said...

அதே சமயம் அவன் ஜாதகத்தைப் பாத்தா, ஓஹோன்னு இருக்கு. குரு சந்திர யோகம் , குரு மங்கள்
யோகம், ஒன்பதுக்குடையவன் பத்திலும் பத்துக்குடையவன் பதினொன்றிலும் இருக்கான். என்ன !
அந்த ராசிக்குடையவர்கள் தசைகள் இன்னும் வரவில்லை.

நான் சொன்னேன். மாமி !! இன்னிக்குத் தேதிலே உங்க பையன் இருக்கற திண்டாட்டத்துக்கும், அவனுடைய‌
ஜாதகத்துக்கும் சம்பந்தம் இருக்கறதா தோணல்ல.அதனாலே ஏமாற்றம், ஆக வேண்டாம். கொஞ்சம் என்ன நிறையாவே பொறுமையாவே இருங்கோ!. இன்னும் பத்து பதினிரண்டு வருசத்துலே கூரைலே உங்க பையன்
உக்காந்துருப்பான்.
கொடுக்கறவன் தசை வந்துடுத்துன்னா, கூரைய பிச்சுண்டு கொடுப்பான் அப்படின்னேன்.
சுப்பு ரத்தினம். (contd.)

sury siva said...

உங்களுக்கு ஒய்.டு.கே அத்தோட சேர்ந்த கம்புயுடர் குழப்பங்கள் ஞாபகம் இருக்கா !! அப்ப ஆயிரக்கணக்கானவா அமெரிக்கா போனா. ஏதோ ஒரு கும்பலோட இவனும் அமெரிக்கா போனான். 1999 லே.

அவன் சேர்ந்த கம்பெனி பெரிசா போச்சு. அவன் அங்கேயே இருந்து க்ரீன் கார்டு வாங்கினான்.2001 லே கலியாணம். மனைவியைஉம் கூட்டிண்டு போனான். 2006 லே சிடிஸன் ஆனான். அங்கேயே வீடு வாங்கிட்டான்.
ஆகிவிட்டான்.

எதுக்கு இத்தனையும் சொல்றேன்னு சொன்னா, எத்தனை தான் உசத்தி ஜாதகமா இருந்தாலும், க்ரஹங்கள் அவாவாளோட தசா புக்தி காலம் வரும்போது தான் பலனைக்கொடுக்கும். அதை சூட்சுமமா முன்னமேயே
அறிஞ்சுன்டு சொல்றவா தான் ஜோஸ்யா. இன்னிக்கு நடக்கறத வச்சுண்டு இதச்செய், அதச்செய் சொல்றதுல்லே
எனக்கு அவ்வளவா ஒத்துப்போக முடியல்ல.

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...

@ கவிநயா. :-)))

திவாண்ணா said...

@கீதா அக்கா:
கமென்ட் ஏதும் பென்டிங்கில் இல்லை.
சுப்பு சார் மெய்ல் ஐ இன்னைக்கு காலை பார்த்து பென்டிங் இருந்ததெல்லாம் பப்ளிஷ் பண்ணியாச்சு. அற்புதமான காரெக்டர் உங்க ஜோசியர்!

திவாண்ணா said...

//பால ஜோசியம், விருத்த வைத்தியம்னு சொலவடை. இவர் வயசானவர் தான் ஆனாலும் எல்லாமும் நடந்தது.//
ஆமாம். ப்ரம்மச்சர்யம் இருக்கும் போது சொல்லுவது இன்னும் சரியாவே இருக்க வாய்ப்பு உண்டு.

திவாண்ணா said...

சூரி சார், சுவாரசியமான நிகழ்வு! வரப்போகிறது வந்தே தீரும். அதை ஜாதகத்தில் கிரக நிலை காட்டுது என்கிற என் கான்செப்ட் இதோட ஒத்து போகிறது!

vijayaragavan said...

Sorry a right question in a wrong place though. Why homeopathy works sometimes and sometimes it's not?
I still wonder that it works very well for me but technically I can not understand that the medicine which is almost equal to the water, never proved 'medically', encouraging the placebo effect, which I have seen ,experienced working immediately for me (depends on the Doctor?!) ?
Any thoughts?

Ang!! Nice post Sir! :)

- Sou. Vijayaragavan

திவாண்ணா said...

:-)
yes, you are right. homeopathy is not like allopathy or for that matter maths. it needs some understanding analysis and inspiration to work. so in essence it depends on the Dr a lot lot and also as mentioned in this post other factors.