Pages

Thursday, July 21, 2011

நம்பிக்கை!



முல்லா நாசருதின் வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.
தப்பிக்க மாடிக்கு ஓடினார். அங்கும் தீ வந்துவிட்டது.கூரை மீது ஏறினார். கீழே அவரது நண்பர்கள் எல்லாரும் ஒரு ஜமுக்காளத்தை இழுத்து பிடித்துக்கொண்டு " நாசருதீன் குதி, சீக்கிரம்" என்றார்கள்.
"போடா பசங்களா, உங்களை தெரியாதா? குதிச்ச பிறகு ஜமுக்காளத்த இழுத்துடுவீங்க. நான் முட்டாளாயிடுவேன்."
"ஓ முல்லா! இது சீரியஸ்! சத்தியம் பண்ணறோம்; இழுக்க மாட்டோம்! குதி!"
"உஹும்! மாட்டேன். ஜமுக்காளத்த கீழ வெச்சுட்டு நகந்து போங்க! அது மேலே குதிக்கிறேன்!"

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

முல்லாவா கொக்கா.
நம்பிக்கைகள் எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம்...

திவாண்ணா said...

:-))

Geetha Sambasivam said...

என்னை மாதிரியான புத்திசாலி முல்லாவும். :P