Pages

Wednesday, July 13, 2011

இஷ்டி



இன்னிக்கு இஷ்டி.
இஷ்டி? எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கா?
ஆமாம். அனேகமா ராமாயணம் தெரிஞ்ச எல்லாரும் தசரதர் புத்ர காம இஷ்டி செஞ்சுதான் பிள்ளைகளை பெற்றார்ன்னு தெரிஞ்சு இருப்போம்.
அக்னி ஹோத்ரம் செய்யறவங்க இந்த இஷ்டியை மாசம் ரெண்டு தரம் செய்வோம். தசரதரும் செஞ்சு இருக்கார். அப்ப க்ஷத்திரியர்களுக்கும் இதில் அதிகாரம் உண்டுன்னு தெரியுது இல்லையா?
வழக்கமா இஷ்டி செய்வது அமாவாசைக்கு அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு. பௌர்ணமி அடுத்து வர ப்ரதமை அன்னிக்கு ஒண்ணு.
முதலாவது தர்சேஷ்டி. ரெண்டாவது பௌர்ணமாசேஷ்டி. இந்த இஷ்டிகள்தான் பலரும் செய்கிற ஹோமங்களுக்கு முன்னோடி.
இஷ்டி மிகவும் விரிவா இருக்கும். அதை சுருக்கி ஹோமத்துக்கான செயல் முறையை வகுத்து வெச்சு இருக்காங்க.
அமாவாசைக்கு செய்யும் இஷ்டிதான் மற்ற எல்லா இஷ்டிகளுக்கும் முன்னோடி. தசரதர் செய்த புத்ரகாமேஷ்டி உட்பட.

ஒரு ஹோமம்ன்னா ஒரு தேவதையை திருப்தி செய்ய பண்ணுவது. இங்கே தேவதை யார்ன்னா அக்னி, மஹேந்திரன்.
எதை ஹோமம் செய்யறோம்?
அக்னிக்கு புரோடாசம்; மஹேந்திரனுக்கு தயிர், பால்.
புரோடாசம்? அரிசி குத்தி, மாவாக்கி, வறுத்து கொஞ்சம் நெய், தண்ணீர் விட்டு கிளரி அதை உருண்டையா ஆமை போல பிடிச்சா அது புரோடாசம். அதை தயார் செய்யறப்ப பொரி மாவு மாதிரி நல்ல வாசனையா வரும்!
மஹேந்திரன் யாரு? இந்திரனேதான். அவனோட இன்னொரு ரூபம்.

ரொம்ப சுலபமா இப்படி ஹோமம்ன்னு சொன்னாலும் இதை செய்து முடிக்க 3-4 மணி நேரம் ஆகும். தயிர் ன்னா மாட்டையும் கன்னுக்குட்டியையும் மேய்வதற்கு புங்கிளையால ஓட்டி ன்னு ஆரம்பிச்சு விலாவரியா போகும். ஒவ்வொரு செயலுக்கும் மந்திரமுண்டு. மாட்டையும் கன்னுக்குட்டியையும் கட்டிப்போட்டு பால கறந்து மீதி பாலை கன்னுக்குட்டி குடிக்க விட்டு, பாலை காய்ச்சி உறை குத்தி... ப்லா ப்லா ப்லா.... அப்புறம் தர்ப்பை அறுக்க வாய்க்காலுக்கு போய் மந்திரம் சொல்லி அறுத்து வந்து... நெல் மூட்டையோட வண்டியை ஓட்டி வந்து இறக்கி, நெல்லை குத்தி..... புரியுது இல்லை?
இது எல்லாம் நீங்க செய்யறிங்களான்னா...

இப்ப இதெல்லாம் பாவனையாதான் நடக்குது. தர்ப்பை விளையற வாய்க்காலையும் காணலை; புரசங்கிளை ஒடிக்க மரங்களும் இல்லை; கன்னுக்குட்டி, மாடு விரட்ட புல்காடும் இல்லை. எல்லாம் கான்க்ரீட் காடாயாச்சு! என்னிக்காவது ஒரு நாள் முழுசா செய்ய எனக்கும் என் பையனுக்கும் ஆசை. பார்க்கலாம். நாராயணன் விட்ட வழி!

அமாவாசை இஷ்டிக்கு முன் தினமே (-அமாவாசை அன்னிக்கு) இஷ்டி ஆரம்பிச்சுடும். பால் காய்ச்சி தயிர் ரெடி பண்ணனுமே! அந்த மாலை வேளை அரிசி கஞ்சியால அக்னி ஹோத்திர ஹோமம். அக்னி ஹோத்திரம் முடிச்சு இஷ்டி ஆரம்பிச்சு தயிர் உறை குத்தி மூடி வெச்சுட்டு அன்னைய வேலை ஓவர். அடுத்த நாள் காலை அக்னி ஹோத்திரம் முடித்து இஷ்டியை தொடர்ந்து நடத்துவோம். காலை பால் கறந்து காய்ச்சி; நெய் காய்ச்சி, புரோடாசம் எல்லாம் தயார் செய்து ஹோமங்கள் நடக்கும்.

இந்த இஷ்டி செய்ய நாலு பேர் வேணும். ஒத்தர் போஸ்ட் பேர் ஹோதா. ஹிஹிஹி... கேள்வி பட்டு இருக்கோம் இல்லை? ஹோதாவோட வேலை தேவதைகளை மந்திரம் சொல்லி கூப்பிட்டறது. அத்வர்யு என்கிறவர்தான் ஹோமங்களை செய்து கொண்டு போகிறவர். ஆக்னீதரர் ன்னு ஒத்தர்; ஈட்டிக்காரன் மாதிரி ஒரு ஈட்டியை பிடிச்சுகிட்டு நிப்பார். இந்த ஈட்டி வழியாதான் தேவதைகள் கீழிறங்கி கொடுக்கிற ஹவிஸை வாங்கிக்கொண்டு போவாங்க.

சாதரணமா ஹோமங்களை செய்கிறவங்க செய்கிற ஐயர்கிட்டே பவர் ஆப் அடார்னி கொடுத்துட்டு வரவங்களை பாத்து வரவேத்து அரட்டை அடிச்சு கொண்டு இருப்பார் இல்லையா? அதெல்லாம் இங்கே நடக்காது. முழு ஹோமத்துக்கும் அக்னி பக்கத்தில இவரும் உக்காரணும். மந்திரங்கள் பலது உண்டு. சரியான இடத்தில அதெல்லாம் சொல்லணும். வேதம் படிக்காம இதெல்லாம் செய்ய முடியாது. அவருக்குன்னு வேலைகளும் உண்டு.

இவருக்கு எஜமானன் ன்னு பெயர். இவருடைய பத்னிக்கும் வேலை உண்டு. நெல் குத்தி அரிசி ஆக்குகிறது; அதை மாவு ஆக்குகிறது எல்லாம் இவங்க வேலை. (ப்லூரல் இல்லைங்க, ஒரு மரியாதைக்கு இவங்கன்னு சொன்னேன்!)
ஹோமம் செய்கிற பொருட்கள் எல்லாம் சுத்தமா இருக்கணும் இல்லையா? அது எப்படி சுத்தமாகும்ன்னா யக்ஞ பத்னி கண்ணால நெய்யை பார்க்கிறதால சுத்தமாகும். இப்ப சொல்லுங்க பெண்களுக்கு வைதிக மதங்கள் முக்கியத்துவம் கொடுக்காம ஒடுக்குதுன்னு.
சாதாரணமா பெண்கள் வேத மந்திரங்கள் சொல்வதில்லை, ஹோமங்கள் செய்வதில்லை என்றாலும் இங்கே அவங்க வேத மந்திரங்கள் சொல்லணும். ஹோமங்கள் செய்யவும் செய்யணும்.

பதிவு நீண்டு போச்சு; இன்னொரு சமயம் தொடரலாம்.


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிரத்தையான பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, ஏற்கெனவே படிச்சுட்டேன் போலிருக்கே!! அ.வ.சி.