Pages

Tuesday, June 14, 2011

காயத்ரி-3



14.
இல்லை. அது தப்பு. எண்ணுகிற கைகளுக்கு மேலே துணியால மூடிகிட்டு செய்யணும். பூணூலை பிடிச்சுக்க கூடாது......


15. ஏன் மூடிக்கிட்டு?
விரல்கள் ஒன்றை ஒன்று தொடும்போது அது முத்திரையா ஆகும். சில முத்திரைகளை வெளியே காட்டக்கூடாது என்கிறதால அப்படி கட்டுப்பாடு.

16. சரி, வலது கையாலதானே எண்ணறோம். அந்த கையை எங்கே வெச்சுக்கணும்?
வலதால எண்ணினாலும் இரண்டும் பக்கத்து பக்கத்துல ஒண்ணாதான் வெச்சுக்கணும். உள்ளங்கைகள் நம்மை பார்க்க இருக்கணும். காலை ஜபத்திலே முகத்துக்கு எதிரேயும், மத்தியானம் இதயத்துக்கு எதிரேயும், மாலை தொப்புளுக்கு எதிரேயும் கைகளை வெச்சுக்கணும்.

17. ஏன் அப்படி?
கைகளை முகத்துக்கு எதிரே வைத்து ஜபம் செய்யும் போது புருவ மத்திக்கு சக்தி பாயரதை நாமே கூட உணரலாம். அந்த அந்த இடத்து சக்கரத்துக்கு சக்தி ஊட்டுகிறதாக இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்படி செய்யத்தான் பெரியவங்க சொல்லி இருக்காங்க.

18. எண்ணிக்கை பத்தி சொல்லிட்டீங்க. மேலே ஜபம் பத்தி சொல்லுங்க.
காயத்ரி மொத்தம் ஐந்து வரிகள். ஒவ்வொண்ணா நிறுத்தி சொல்லணும்.

19. இருங்க, இருங்க, மூணு வரிகள்தானே?
நீங்க நினைக்கிற 3 வரிகள் ஸாவித்ரி எனப்படும். மந்திரத்தில முதல்ல ப்ரணவம். அடுத்து மூன்று வ்யாஹ்ருதிகள் (பூர், புவ, ஸுவ) அடுத்து மூன்று வரிகள் ஸாவித்ரி.

20. சரி, அப்புறம்...
மந்திரத்தில் மனசு லயிக்கறது முக்கியம். அவசர அவசரமா 108 செய்யறத்துக்கு நிதானமா நிறுத்தி குறைச்சலா செய்யறதே பரவாயில்லை.

21. அப்புறம்...
அப்புறம் என்ன, ஒண்ணுமில்லை. ஜபம் செய்து உபஸ்தானம் செய்ய வேண்டியது.

22. பிரச்சினையே ஜபத்தில மனசு லயிக்கிறதுதானே? அதுக்கு ஒண்ணுமே சொல்லலையே?
ஏன்? முன்னேயே இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கேன். முதல்ல சரியா உக்காருவது. இரண்டாவது ப்ராணாயாமம்.
மனசு லயிக்கிறது என்பது ப்ரச்சினைதான். சாதாரணமா வேற ஒரு எண்ணமும் இல்லாம ஜபம் செய்யணும்ன்னுதான் உக்காருவோம். இப்படி நினைக்கிறதும் ஒரு படிதான். கடவுளே! வேற எண்ணங்கள் இல்லாம ஜபத்திலே ஈடுபட வைன்னு வேண்டிக்கவும் செய்யலாம். ஆரம்பத்திலே கொஞ்ச நேரம் வேற சிந்தனை இல்லாம செய்வோம். அப்புறம் மனசு அதோட இயல்பான ஓட்டத்திலே போயிடும். வேற எண்ணங்கள் கிளைக்கும்.

23. ஆமாமாம். அதுக்கு என்ன செய்யறது?
ஒண்ணும் செய்ய வேண்டாம். திருப்பி ஜபத்தை தொடர வேண்டியதுதான். விட்டுப்போச்சே என்கிற எண்ணம் இன்னும் டென்ஷனை உண்டாக்க விடக்கூடாது.

24. வேற ட்ரிக் ஒண்ணும் இல்லையா?....

2 comments:

Geetha Sambasivam said...

15. ஏன் மூடிக்கிட்டு?
விரல்கள் ஒன்றை ஒன்று தொடும்போது அது முத்திரையா ஆகும். சில முத்திரைகளை வெளியே காட்டக்கூடாது என்கிறதால அப்படி கட்டுப்பாடு.//

புது விஷயம்!

திவாண்ணா said...

:-)