Pages

Tuesday, May 31, 2011

சந்த்யாவந்தனம் -9



64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு.
கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.

65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உட்காராத போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.
முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது.

66. சரி, உட்கார்ந்தாச்சு. ப்ராணாயாமம் செய்தாச்சு. அப்புறம்?

ஆயாது என்கிற மந்த்ரத்தாலே காயத்ரி ஆவாஹனம் செய்யணும்.

67. அதென்னது ஆவாஹனம்?
பகவான் எல்லா இடத்திலேயும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்டதேவதையா த்யானம் செய்யும் முன் அந்த தேவதையை எதிலாவது நிலை நிறுத்தி மேற்கொண்டு ஆராதிக்கணும். சரஸ்வதி பூஜையில புத்தகங்கள், விநாயகர்ன்னா மஞ்சள்ள பிடிச்ச பிள்ளையார் இப்படி...

68. காயத்ரியை எதில செய்யணும்?
நமக்குள்ளேயே ஆவாஹனம்.

69.அதென்ன உச்சந்தலை, மூக்கு, மார்பை தொடச்சொல்லறாங்க?
ஒவ்வொரு வேத மந்திரமும் இறைவனோட மூச்சுக்காற்று. ப்ரபஞ்சத்தில் பரவிக்கிடக்கிற இவற்றை சில ரிஷிகள் க்ரஹித்து நமக்கு கொடுத்தாங்க. அப்ப அந்த மந்திரத்துக்கு அவரே ரிஷியா சொல்லப்படுகிறார். ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு சந்தஸ்ல இருக்கும். இது உச்சரிப்பு சம்பந்தமானதால வாயை தொடணும். வாய் எச்சில் என்பதால மூக்கை தொடறோம். மந்த்ரம் சம்பந்தமான தேவதையை இதயத்தில் இருத்துகிறோம். அதனால மார்பு.

4 comments:

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பகிர்வு.

திவாண்ணா said...

நன்றி!

Geetha Sambasivam said...

வரேன் மறுபடி. சாப்பிடப் போறேன்.

Geetha Sambasivam said...

உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல..//

யோகமுத்ரா!