Pages

Monday, May 9, 2011

சந்த்யாவந்தனம் -3



17.ஜுரம் அடிக்கிறது, முடியவில்லை எனக்கோ சந்த்யா தவறக்கூடாது என்று ஆசை! என்ன செய்வது?
உங்களுக்கு பதில் யாரேனும் செய்து, சிறிது நீரை உங்கள் கையில் விட்டால நீங்கள் செய்தது போல் ஆகும்.

18. பஸ்ஸில் போய் கொண்டு இருக்கிறேன். சந்த்யா வேளை வந்துவிட்டது என்ன செய்வது?
வாய்ப்பு கிடைக்கும்போது அர்க்யம் சரியான நேரத்துக்கு விட்டுவிட்டு பின்னால் ஜபம் செய்து கொள்ளலாம். அவரவர் மனசுக்கு ஏற்ப இரண்டு வழிகள்.
ஆசமனம் முதல் அனைத்தும் மனசாலேயே செய்யலாம். சுலபமாக தோன்றினாலும் வெகு கடினம். பயணம் முடிந்த பிறகு செய்யலாம். காலம் தாண்டியதற்கு ப்ராயசித்த அர்க்கியம் இருக்கிறதல்லவா?

19. சந்த்யா என்கிறதுக்கு அர்த்தம் என்ன?
சந்தி நேரத்தில் செய்கிற கர்மா; நன்றாக த்யானம் செய்ய வேண்டிய கர்மா; ஜீவனையும் பரப்பிரம்மத்தையும் சேர்த்து வைக்கிற கர்மா - இப்படி பலவிதமாக பொருள் கொள்ளலாம்.
சந்தியா நேரத்தில் சந்த்யா என்ற தேவதையை வணங்கும் கர்மா என்று பொதுவாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

20. எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சொல்லும் மந்திரங்களுக்கு பலன் உண்டா?
உண்டு. பொருள் தெரிந்து மந்திரம் சொல்லுவதே சிறந்தது என்றாலும் பொருள் தெரியாவிட்டாலும் பலன் உண்டு.

21. அது எப்படி?
பரிட்சை இருக்கிறது. சிக்கலான சப்ஜெக்ட். கேள்வி கேட்கிறார்கள். நமக்கு அவ்வளவு சரியா விளங்காவிட்டாலும் 'கடம்' அடித்து வைத்த விடையை சரியாக எழுதிவிட்டால் மதிப்பெண் போட்டுவிடுவார்கள். அது போல. பொருள் தெரியாவிட்டாலும் மந்திரம் ஜபம் செய்து வந்து கொண்டு, பின் அதன் பொருளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

22. ம்ம்ம்ம்... நம்பிக்கை வரவில்லையே?
அடுப்பில் ஒரு வாணலி வைத்து இருக்கிறது. அது இதுவரை யாரோ தீயில் வைத்து இருந்ததால் சூடாக இருக்கிறது; தெரியாமல் அதை எடுக்கபோகிறோம். அது நம் கையை சுட்டுவிடுகிறது. எனக்கு இது சூடாக இருக்கிறது என்று தெரியாது. எப்படி என் கையை சுடலாம் என்று கேட்க முடியுமா? சுடும் என்று தெரியாமல் நெருப்பில் கையை வைத்தாலும் அது சுடும். அது போல சில கர்மாக்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்கை ஒன்றே ஆதாரமாக கொண்டு பலனைத்தரும்.

23. நான் இன்ன வேத கிளையை சார்ந்தவன். எனக்கு என்ன காயத்ரி?
காயத்ரியில் வேத பிரிவை ஒட்டிய வேறுபாடு இல்லை. எல்லோருக்கும் ஒரே காயத்ரிதான்.

24. அப்போது சந்தியாவந்தனமும் ஒன்றுதானா?
இல்லை. அது வேறுபடும். ஒரே வேதத்திலேயே இடம் (ஆந்திரம், தமிழ்நாடு) இனம் (வைஷ்ணவர், ஸ்மார்த்தர்), சூத்திரம் (ஆபஸ்தம்பர், போதாயனர்) பொருத்து வழக்கத்தில் வேறுபாடுகள் உள்ளன.

2 comments:

Geetha Sambasivam said...

மிச்சம் அப்புறம்.

திவாண்ணா said...

நல்லது!