Pages

Tuesday, May 31, 2011

சிப்பி



சிப்பி ஒன்று கல்லிடுக்கில் முத்தை பார்த்தது. இன்னும் சற்று நேரத்தில் மனிதன் முத்து குளிக்க வருவான் என்று அதற்குத்தெரியும். கஷ்டப்பட்டு முத்தை கல்லிடுக்கில் இருந்து எடுத்து ஒரு இலை மீது வைத்தது. முத்தை பார்த்து ஆசைப்பட்டு அதை எடுத்துக்கொண்டு தன்னை விட்டு விட்டு போவானல்லவா?
முத்தெடுக்க மனிதன் வந்தான். அவன் பார்வை சிப்பிகள் மீதே இருந்தது. பக்கத்தில் இருந்த முத்தை பார்க்கக்கூட இல்லை. சிப்பியை எடுத்துப்போனான்.
முத்து மீண்டும் நழுவி பாறை இடுக்கில் மறைந்தது.

நமக்கு என்ன பார்க்க வேண்டும் என்று சரியாகவே தெரியும். அதனால்தான் நாம் கடவுளை பார்ப்பதில்லை.

சந்த்யாவந்தனம் -9



64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு.
கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.

65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உட்காராத போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.
முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது.

66. சரி, உட்கார்ந்தாச்சு. ப்ராணாயாமம் செய்தாச்சு. அப்புறம்?

ஆயாது என்கிற மந்த்ரத்தாலே காயத்ரி ஆவாஹனம் செய்யணும்.

67. அதென்னது ஆவாஹனம்?
பகவான் எல்லா இடத்திலேயும் இருந்தாலும் ஒரு குறிப்பிட்டதேவதையா த்யானம் செய்யும் முன் அந்த தேவதையை எதிலாவது நிலை நிறுத்தி மேற்கொண்டு ஆராதிக்கணும். சரஸ்வதி பூஜையில புத்தகங்கள், விநாயகர்ன்னா மஞ்சள்ள பிடிச்ச பிள்ளையார் இப்படி...

68. காயத்ரியை எதில செய்யணும்?
நமக்குள்ளேயே ஆவாஹனம்.

69.அதென்ன உச்சந்தலை, மூக்கு, மார்பை தொடச்சொல்லறாங்க?
ஒவ்வொரு வேத மந்திரமும் இறைவனோட மூச்சுக்காற்று. ப்ரபஞ்சத்தில் பரவிக்கிடக்கிற இவற்றை சில ரிஷிகள் க்ரஹித்து நமக்கு கொடுத்தாங்க. அப்ப அந்த மந்திரத்துக்கு அவரே ரிஷியா சொல்லப்படுகிறார். ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு சந்தஸ்ல இருக்கும். இது உச்சரிப்பு சம்பந்தமானதால வாயை தொடணும். வாய் எச்சில் என்பதால மூக்கை தொடறோம். மந்த்ரம் சம்பந்தமான தேவதையை இதயத்தில் இருத்துகிறோம். அதனால மார்பு.

Friday, May 27, 2011

உண்மையா?



எனக்கு இது வெட்ட வெளிச்சமா தெரியுது. ஆனா அது உண்மையா?

ஒரு ஆசாமி பஸ்ஸில் ஏறினார்.
பக்கத்து இருக்கையில் ஒரு ஹிப்பி மாதிரியான ஆசாமி. ஒரே ஒரு காலில் செருப்பு அணிந்து இருந்தார்.
“ஒரு செருப்பு காணலை போலிருக்கே?”
" இல்லீங்க, ஒரு செருப்புதான் கண்டு புடிச்சேன்!”

Thursday, May 26, 2011

சந்த்யாவந்தனம் -8



60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.

61. சரி போகட்டும். எங்கே இருந்து கொண்டு ஜபம் செய்யணும்?
சந்த்யா கர்மா ஆரம்பிச்ச இடத்துக்கு 40 அடி தூரத்துக்குள் ஒரு இடத்தில செய்யணும். வீடுன்னா வசதியான இடம், பூஜை அறை, அக்னி உபாசனை செய்துகொண்டு இருந்தா அந்த இடம். இவை நல்லது.

62. வேற?
நதி தீரத்தில செய்தால் 2 மடங்கு பலன் கிடைக்கும். பசுக்கள் கட்டின இடமானா 10 மடங்கு. அக்னி சாலை 100 மடங்கு; புண்ய க்ஷேத்திரமானால் 1000 மடங்கு; நல்ல புராதனமான பூஜைகள் வெகு காலம் நடந்த சகோவிலானால் கோடி மடங்கு.
இடத்தை சுத்தி செய்து கொண்டு நீரால் ப்ரோக்ஷணம் செய்து ஆசனத்தில் உட்கார வேண்டும்.

63. ஆசனம்ன்னா நாம் எது மேலே உட்காருகிறோமோ அதுவா இல்லை உட்காருகிற விதமா? எந்த ஆசனம் நல்லது?
இரண்டுக்குமே ஆசனம்ன்னுதான் பெயர்.
ஆசனம் இல்லாமல் பூமியில் உட்காரக்கூடாது. அப்படி செய்தால் ஜப பலன் நம்மில் தங்காமல் பூமிக்கு போய்விடும். மரப்பலகை (இரும்பு ஆணி இல்லாதது) தர்பங்களால செய்த பாய், கம்பளி,பட்டு ஆகியவை நல்லன. மடியான எந்த துணியும் கூட உபயோகிக்கலாம்.
உட்காருகிற விதத்தை பொருத்து பழக்கமான ஆசனமே சிறந்தது. பத்மாசனம் போன்றவை பழக்கமாக இருந்தால் அவை நல்லன. இல்லாவிட்டால் நாம் சாதாரணமாக தரையில் உட்காரும் ஸ்வஸ்திகாசனமே நல்லது.

64. தரையில் ரொம்ப நேரம் நிமிர்ந்து உட்கார முடியலை. என்ன செய்வது?
இந்த பிரச்ச்சினை நிறைய பேருக்கு இருக்கு. உட்காரும் பழக்கமும் இல்லை. ஒரு வழி இருக்கு.
கீழே உட்கார்ந்து கொண்டு முன் பக்கம் அப்படியே வளையணும்... நெத்தி தரையை தொடுகிறது போல... அதுக்குன்னு வீணா முதுகை கஷ்டப்படுத்தக்கூடாது. :-) அப்புறம் நிமிர்ந்தா சரியா இருக்கும்.

65. அட ஏன் அப்படி?
கீழே நாம உட்காரும்போது தொடை, ப்ருஷ்டம் ஆகியவற்றில் தசைகள் வேலை செய்து கொண்டு இருக்கும். நாம சரியா உடகாராது போது இவை அந்த டென்ஷனிலேயே இருக்கும். அதனால் சீக்கிரம் வலி ஏற்பட்டு சரியாக நிமிர்ந்து உட்கார முடியாமல் உடம்பை வளைக்கிறோம்.
முன்னால் நன்றாக சாயும்போது இந்த தசைகள் ரிலீஸ் ஆகி தளர்வாகிடும். அப்போ வலிக்காது. மேலே இங்கே பாருங்க.

Monday, May 23, 2011

சந்த்யாவந்தனம் -7



53. ஒஹோ! அது சரி, ப்ரணவம் தெரியும், அது ஓங்காரம். வ்யாஹ்ருதி என்கிறதென்ன?
பூர், புவ, ஸுவ: என்கிறதுதான் முதல் மூன்று வ்யாஹ்ருதிகள்.

54. அடுத்த செயல் என்ன?
ப்ராணாயாமம் செய்து மார்பில் கைகளை வைத்துகொண்டு 'அஸாவாதித்யோ ப்ரஹ்ம' என்ற த்யானமே அடுத்த படி. சும்மா கடனுக்கு செய்யாமல் சற்றே கவனத்துடன் சில நொடிகளாவது இதை செய்வது மோக்ஷ சாதனமாகும்.

55. அதெப்படி மோக்ஷ சாதனம்?
தினசரி கொஞ்ச நேரம் செய்ய இது நம்மை ப்ரஹ்ம நிஷ்டையில் அமர்த்தும். இந்த ஜன்மத்திலேயே நம் குருவை கண்டு பிடித்து உபதேசம் பெறுவோம். ஞானமும் நிஷ்டையும் முக்தியும் கைகூடும். மனித பிறவி எடுப்பதே இதற்காகத்தான். இதை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் உணவிருந்தும் உண்ணாமல் பட்டினி கிடப்பவன் போலாவோம்.

56. ம்ம்ம்ம்ம்.. அப்புறம்?
நவ க்ரஹங்களுக்கும் கேசவன் முதலான 12 நாமங்களை சொல்லியும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

57. தர்ப்பணமா? அது அப்பா அம்மா இல்லாதவங்கதானே செய்வாங்க?
அப்படி இல்லை. தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வது என்றே பொருள். இப்படி சொல்ல பிடிக்கவில்லையானால் அர்க்யம் என்றும் சொல்லலாம்.

58. எதுக்கு இவங்களை திருப்தி செய்யணும்? பரமாத்மாவை உபாசிக்கிற போது இவங்க எதுக்கு?
என்னதான் அரசு உத்திரவு இருந்தாலும் அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களை திருப்தி செய்தால் வேலை சீக்கிரம் நடப்பது போல நடைமுறையில் தினசரி செயல்களுக்கு உதவறவங்களை திருப்தி செய்கிறோம். ஏன் விஷ்ணு என்றால் அவரே மோக்ஷத்தை தருகிறவராம்.

59. சரி அடுத்து?
காயத்ரி ஜபம் செய்கிறேன் என்று சங்கல்பம் செய்து ஜபம் செய்ய வேண்டும். ஜபத்தில் மனசு ஊன்ற ப்ராணாயாமம் செய்ய வேண்டும்.

60. ப்ராணாயாமம் பத்தி சொல்லுங்க.
அதை தனியா விரிவாகவே பார்க்கலாம். இப்போதைக்கு மனசை ஒரு முகப்படுத்த அது உதவுதுன்னு தெரிஞ்சா போதும்.

Sunday, May 22, 2011

உண்மை....



உண்மை என்பது உண்மையில் இல்லை. அது நாம் செய்கிற முடிவில் இருக்கிறது.

ஒரு யூத மூதாட்டி விமானத்தில் அமர்ந்திருந்தாள். ஒரு ஸ்வீடன் நாட்டுக்காரர் அருகில் உட்கார்ந்தார். அவரையே மூதாட்டி முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தாள். சற்று நேரம் கழித்து " நீ யூதன்தானே?” என்று கேட்டாள்.
“இல்லை அம்மா, நான் யூதன் இல்லை"
இன்னும் சற்று நேரம் சென்றது. மீண்டும் " நீ யூதன்தானே?” என்று கேட்டாள்.
“இல்லவே இல்லை அம்மா, நான் நிச்சயம் யூதன் இல்லை"
இன்னும் கொஞ்ச நேரம் அவரையே முறைத்தபின் மூன்றாம் முறையாக அதே கேள்வியை கேட்டாள்.
அலுப்பு தட்டிய ஸ்வீடன் நாட்டுக்காரர், "ஆமாம் அம்மா, நான் யூதன்தான்" என்றார்.
அவரை மீண்டும் ஏறிட்டு பார்த்துவிட்டு மூதாட்டி சொன்னாள், “ ஆனால் பார்க்க நீ அப்படி தோன்றவே இல்லை!"

முதலில் ஏதேனும் முடிவு செய்து விடுகிறோம். அப்புறம் அந்த முடிவு கிடைக்க ஏதோ ஒரு வழியை கண்டு பிடிக்கிறோம்.

Friday, May 20, 2011

புனிதர்



தேவர்களும் பார்த்து மகிழக்கூடிய புனிதர் ஒருவர் இருந்தார். அவர் புனிதர் என்பதே அவருக்கு தெரியவில்லை. அவரது வேலைகளை அலட்டிக்கொள்ளமல் செய்து வந்தார். ஒரு தெருவிளக்கு எரிந்து தன் கடமையை செய்வது போல... தான் செய்வதாக நினைக்காமல் மலர்கள் தம் வாசனையை பரப்புவது போல..

அவர் யாரை பார்த்தாலும் அவரை உள்ளபடி பார்ப்பார். "இவர்களது காமும் குரோதமுமே இவர்களை பிடித்து ஆட்டிகிறது. பாவம்!” இதனால் அவர் எல்லோரிடமும் அன்பு செலுத்தினார். அவரது பார்வை வித்தியாசமாக இருப்பதாக அவருக்கு தெரியவே தெரியாது!

கடவுளிடம் இருந்து ஒரு தேவதை வந்தது. என்னை கடவுள் அனுப்பினார். நீ ரொம்பவும் நல்லவனாக இருக்கிறாய். ஏதாவது வரம் வாங்கிக்கொள்!
ஒரு வரமும் வேண்டாம் என்றார் புனிதர்.
"ஏதாவது வாங்கிக்கொள்ள வேண்டுமே! இல்லாவிட்டால் கடவுள் கொடுத்த வேலையில் இருந்து நான் தவறிவிடுவேனே! எல்லா நோயையும் குணமாக்கும் சக்தி கொடுக்கட்டுமா?”
"வேண்டாம். அதை கடவுளே செய்து கொள்ளட்டும்!”
"பாபம் செய்வோரை நல்வழி திருப்பும் சக்தி?"
"வேண்டாம், அதை தேவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்!"
"உன்னை எல்லோரும் ஒரு ஆதர்ச மனிதனாக பார்த்து அதைபோல நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க வைக்கும் சக்தி?"
"வேண்டவே வேண்டாம். அப்புறம் எல்லோரும் என்னை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்துவிடுவர்!"
"பின்னே என்னதான் கொடுக்கட்டும். ஏதாவது கேட்டு வாங்கிக்கொண்டு என்னை காப்பாற்று!"
"ம்ம்ம்ம்ம்... சரி, என் நிழல் என் பின்னால் விழும்போது எதன் மீது விழுகிறதோ அந்த இடத்தில் உள்ள தோஷங்கள் அகல வேண்டும்."

அன்றிலிருந்து புனிதரின் நிழல் பின்னால் விழுந்த இடத்தில் இருந்தவர் நோய்கள் நீங்கின. நிலம் செழுமையானது. தாவரங்கள் நன்கு வளர்ந்தன.

எல்லோரும் புனிதரைவிட்டு அவரது நிழலையே பார்த்துக்கொண்டு இருந்ததால் அவருக்கும் ஒரு பிரச்சினையும் வரவில்லை.

சந்த்யாவந்தனம் -6




43. கட்டை விரலை மற்ற விரல்களுடன் சேர்க்கூடாது என்று கேள்விப்பட்டேன்.
சரிதான். அது ராக்ஷஸர்களுக்கு உகந்தது ஆகும். அதனால் கட்டை விரல்களை நீக்கியே அர்க்கியம் தர வேண்டும். இடது கட்டைவிரல் சுட்டு விரல்களுக்கு இடையில் ஜல பாத்திரத்தை பிடித்துக்கொண்டு செய்வது சுலபமாக இருக்கும்.

44. எவ்வளவு அர்க்கியம்?
காலை மாலை மும்மூன்றும் மதியம் இரண்டும். கூடவே சரியான காலத்தில் அர்க்கியம் தரவில்லை என்பதற்கு ப்ராயச்சித்தமாக ஒன்று.

45. நான் ஐந்து மணிக்கே அர்க்கியம் கொடுக்கிறேன். ப்ராயச்சித்தம் தேவையில்லைதானே?
சந்த்யா நேரமே அர்க்கியம் கொடுக்க சரியான நேரம். இது மிகவும் சூக்ஷ்மமானது. அதனால் எப்படியும் ப்ராயச்சித்த அர்க்கியம் தர வேண்டும்.

46. எதற்காக இந்த அர்க்கியம்?
இது குறித்து ஒரு கதை இருக்கிறது. சில ராக்ஷஸர்கள் ப்ரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தனர். கடுந்தவம் செய்தால் வரம் கொடுத்தே ஆக வேண்டும். ப்ரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்க ராக்ஷஸர்கள் தினமும் சூரியனுடன் சண்டையிடும் பெருமை வேண்டும் என்று வேண்டினர். வரமும் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் தினசரி சண்டையிடுகிறார்கள். அந்த சமயத்தில் ஸாதுக்கள் காயத்ரி கூறி அர்க்கியம் அளிக்க இந்த ராக்ஷஸர்கள் மந்தே ஹாருணம் என்ற தீவில் தூக்கி எறியப்படுகிறார்கள். இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்.

47 சரி, சரி, ராக்ஷஸர்கள் வரம் வாங்கித்தானே சண்டை போடறாங்க? அதை நாம் போய் தடுத்தா அது பாவமில்லையா?
பாபம்தான். இப்படி தூக்கி எறிந்த பாபம் அடுத்து தன்னைத்தானே ப்ரதக்ஷிணம் செய்வதால் அழிகிறது.

48. கதையானா இருக்கு?
கதையானாலும் இல்லையானாலும் அதில் பெரிய தத்துவம் இருக்கு.

49. என்ன தத்துவம்?
சூரியன் என்பது நம் அறிவு. இந்த அறிவை ராக்ஷஸ ரஜோ, தமோ குண வெளிப்பாடுகளான காமம், கோபம் முதலான அசுர சக்திகள் பீடிக்கின்றன. காயத்ரி இவற்றை தற்காலிகமாக அழிக்கிறது. அவை மீண்டும் பீடிக்கின்றன.

50. சரி, 'இதனால் சூரியன் மகிழ்ந்து எல்லா நன்மைகளையும் செய்கிறார்' என்கிறதுக்கு என்ன ஆதாரம்?
க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இது மிகத்தெளிவாக ஆருணம் இரண்டாம் ப்ரச்னத்தில் சொல்லப்பட்டு இருக்கு. 'ஸகலம் பத்ரமச்னுதே'

51. சரி அப்புறம்?
ப்ரணவமும் வ்யாஹ்ருதிகளையும் சொல்லி ஜலத்தால் பரிசேஷணம் போல தன்னைத்தானே சுற்றிக்கொண்டு கீழே ஜலத்தை விட வேண்டும்.

52. கோவில்ல சுத்தரவங்க சுத்திக்கிறாங்களே அந்த மாதிரியா?
அந்த மாதிரிதான். ஆனா அங்கே அப்படி செய்யறது தப்பு. அது பூர்வ ஜன்ம புண்ணியத்தை காலி செய்துவிடும். இங்கே அப்படி விதிச்சு இருக்கிறதாலே செய்யணும்.

Wednesday, May 18, 2011

காலை ப்ரார்த்தனை...



ஐசாக் ஆப் ஜெர் ஒரு யூத ராபி.
ஒரு நாள் ஒரு சக்கிலி அவரிடம் வந்தான்.
" ஐயா என் காலை ப்ரார்த்தனைகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.”
“என்ன பிரச்சினை அப்பா?”
என் தொழில் ஏழை தொழிலாளர் சம்பந்தப்பட்டது. தினசரி இரவு என் இடத்துக்கு வரிசையாக பல தொழிலாளர்கள் வருவர். அவர்களுக்கு இருப்பதோ ஒரே ஒரு ஜோடி காலணிகள். அவற்றை பழுது நீக்கி கொடுத்தால்தான் அவர்கள் அடுத்த நாள் வேலைக்கு போக முடியும். ஏறக்குறைய இரவு முழுவதும் வேலை செய்கிறேன். பல நாட்கள் காலையில் அவர்கள் வரும் வரைக் கூட வேலை நிறைவு பெறாமல் இருக்கிறது. என் காலை ப்ரார்த்தனையை என்ன செய்வது?”
“இது வரை என்ன செய்தாய்?”
"சில சமயம் அவசர அவசரமாக ப்ரார்த்தனையை முடித்துவிட்டு வேலையை தொடருவேன். ஆனால் அப்புறம் இப்படி செய்துவிடோமே என்று வருந்துவேன். சில நாட்கள் ப்ரார்த்தனையை விட்டுவிட்டு வேலை செய்வேன். ஆனால் அப்படி வேலை செய்யும்போது என் இதயம் இபப்டிச் சொல்லி பெருமூச்சுவிடும்: நான் எவ்வளவு துரத்ருஷ்டசாலி! காலை ப்ரார்த்தனையை கூட செய்ய முடியவில்லையே!”
ராபி சொன்னார்: " நான் கடவுளாக இருந்தால் ப்ரார்த்தனையை விட இந்த பெருமூச்சை பெரிதும் மதிப்பேன்"

Tuesday, May 17, 2011

சந்த்யாவந்தனம் -5






34. ப்ராணாயாமம் பத்தி சொல்லலையே!
பின்னால் விவரமாக பார்க்கலாம். இப்போதைக்கு இடது மூக்கு துவாரத்தால் இழுத்து நிறுத்தி பின் வலது பக்கத்தால் விட வேண்டும் என்று தெரிந்தால் போதும். ஒவ்வொரு கர்மாவுக்கும் முன்னால் அதை செய்ய ஒரு சக்தியை சேர்த்துக்கொள்ளவே இதை செய்கிறோம்.

35. ம்ம்ம் அப்புறம் தலையில தண்ணி தெளிச்சுக்கணும்.
ஆமாம். உத்தரணியில நீர் எடுத்து மந்திரம் சொல்லி ... இதுக்கு மார்ஜனம் ன்னு பேர். ஒன்பது வாக்கியங்கள் இந்த ஆபோஹிஷ்டா என்கிற மந்திரத்துல. எட்டாவது மந்திரத்தால் கால்களில தெளிக்கணும். மற்றது தலையில. மந்திரம் சொல்லி இப்படி செய்தால் அந்த தண்ணீர் திவலைகள் நம் உடலையும் மனசையும் சுத்தம் செய்யும்.

36. இந்த மந்திரத்துக்கு என்ன பொருள்? ஏன் செய்யணும்?
இது ஜல தேவதையை உத்தேசித்து சொல்லப்படுகிறது. ஜலம்தான் உலகத்துக்கு சுகத்தை தர வேண்டி முதலில் படைக்கப்பட்டது. நமக்கு குளிக்கவும், குடிக்கவும் பயனாகிறது. பயிர்களை வளரச்செய்து நமக்கு உணவு அளிக்கிறது. குழந்தைகள் என்ன தப்பு செய்தாலும் அன்னை மன்னித்து தனக்குக் கூட இல்லாமல் சத்தான உணவை அவர்களுக்கு கொடுப்பார்கள் இல்லையா? அது போல ஜல தேவதையும் நமக்கு அன்னம் முதலியவற்றை கொடுத்து காப்பாற்றட்டும். ஸ்தூலமான உடம்புக்கு அன்னம் தருவது போல சூக்குமமான உடலுக்கும் ஞானமாகிய உணவை கொடுக்கட்டும். உங்களது அருளால் நான் பேரின்பத்தை அடைய வேண்டும். இந்த மண்ணுலக வாழ்கைக்கு ஜலம் அவசியம். அதே போல மறு உலக வாழ்க்கைக்கும் ரஸத்தை கொடுக்கட்டும்.

37. சரி அப்புறம் உள்ளங்கையில் நீர் எடுத்து மந்திரம் சொல்லி குடிக்கணும். கரெக்டா?
சரிதான். ஸூர்யச்ச, ஆப: புனந்து, அக்னிச்ச ஆகியவை இந்த மந்திரங்கள். ஸுர்யன், ஜலம், அக்னி, கோபமும் கோபத்துக்கான தேவதைகளும் - இவற்றை வேண்டி நம் பாபங்களை தொலைக்கிறோம். ஒவ்வொரு நாளும் நம் உடல் உறுப்புகளால் தெரிந்தும் தெரியாமலும் பல பாப செயல்களை செய்கிறோம். இவை நம் மனசை கெடுத்து பகவானை த்யானம் செய்ய முடியாமலோ அல்லது முக்திக்கான செயல்களில ஈடுபட முடியாமலோ செய்கின்றன. ஆகவே இவற்றை நீக்கிக்கொள்கிறோம்.

மத்தியானத்தில் ஆப: புனந்து என்ற மந்திரத்தால் உண்ணக்கூடாததை உண்டது, சேரக்கூடாதவருடன் சேர்ந்தது, அசத்துக்களிடம் பணம் வாங்கியது ஆகிய பாபங்களை நீக்கிக்கொள்கிறோம்.

38. சரி அப்புறம்?
திருப்பியும் மார்ஜனம். இப்போது கூட சில மந்திரங்கள் உண்டு. 'ததிக்ராவ' என்ற தேவதையை மந்திரம் சொல்லி துதிக்கிறோம். இது நம் வாயை நாற்றம் இல்லாமல் வாசனையுடன் கூடியதாக்கும். ஆந்திரர் 'ஹிரண்ய வர்ணா' என்ற 4 மந்திரங்களை கூடுதலாக சொல்வர். அப்புறம் காயத்ரியால் அர்க்கியம் விடுவது.

39. அர்க்கியம் விட சரியான செய்முறை என்ன? உட்கார்ந்து கொண்டா நின்று கொண்டா?
காலையும் மாத்தியானிகத்திலும் நின்று கொண்டும் மாலையில் உட்கார்ந்து கொண்டும் அர்க்கியம் விட வேண்டும். நின்று கொண்டு செய்யும் போது கிழக்கே பார்த்துக்கொண்டு குதிகால்களை கொஞ்சம் உயர்த்தி மாட்டுக்கொம்பு உயரத்தில் கைகளால் நீரை விட்டு எறிய வேண்டும்.

40. என்ன! விட்டு எறியணுமா?
ஆமாம். வேதத்தில் 'ஆப ஊர்த்வம் விக்ஷிபந்தி' என்றே சொல்லி இருக்கிறது.

41. எந்த இடத்தில் இந்த ஜலத்தை விட்டு எறிவது?
நீர் நிலையில் செய்வதானால் நீரிலேயே விட்டு எறியலாம். இல்லை நிலத்தில் செய்வதானால் கூடுமான வரை சுத்தமான இடமாக பார்த்து செய்யலாம். தோட்டமோ இல்லை ஃப்லாட்டில் இருப்போர் மொட்டை மாடியிலோ செய்ய சரியாக இருக்கும்.

42. இது இரண்டுமே சரியாக அமையா விட்டால்?
வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் விட்டுக்கொண்டு பின்னால் ஏதேனும் செடி மரம் போன்றவற்றில் சேர்த்துவிடலாம். இப்படியே பழக்கமாகிவிட்டதால்தான் நின்றுக்கொண்டு வீசி எறியும் பழக்கம் விட்டுப்போனது.


Monday, May 16, 2011

புனிதம்




சிலர் பிறக்கும் போதே புனிதமாக பிறக்கிறார்கள்.
சிலர் புனிதத்தை அடைகிறார்கள்.
சிலர் மீது புனிதம் திணிக்கப்படுகின்றது.

ஒரு எண்ணைக்கிணறு தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. மிகப்பெரிய தீயாக இருந்ததால் அதன்கிட்டே கூட யாரும் போக முடியவில்லை. கம்பெனியின் தீ அணைப்பு படையால் அதற்கு 200 அடி கிட்டே கூட நெருங்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் உள்ளூர் தீயணைப்புப்படைக்கு தகவல் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு பழங்கால வண்டி தட்டுத்தடுமாறிக்கொண்டு பாதையில் ஓடி தீக்கு 50 அடி தூரத்தில் நின்றது. அதில் இருந்து குதித்தவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்துக்கொண்டு பின் தீ மீது தண்ணீர் அடித்து அதை அணைத்தார்கள். கம்பெனி ஆசாமிகளுக்கு ஒரே ஆச்சரியம். இவ்வளவு வீரமா?!
சில நாட்கள் கழித்து கம்பெனி ஒரு பாராட்டு விழா நடத்தியது. வீரர்களின் துணிச்சல், கடமை உணர்வு எல்லாம் வானளாவ புகழப்பட்டது. கடைசியில் ஒரு பெரும் தொகைக்கு காசோலை கொடுத்தார்கள்.
விழா முடிந்ததும் பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்: அந்த பணத்தை என்ன செய்யப்போகிறீர்கள்?
உள்ளூர் தலைவர் சொன்னார்: "முதலில் அந்த வண்டியின் பாழாப்போன ப்ரேக்கை பழுது பார்க்கணும்!”


சந்த்யாவந்தனம் -4



25. எந்த பக்கம் பார்த்து செய்ய வேண்டும்?
சூரியன் உள்ள திசையை பார்த்து செய்ய வேண்டும். காலையில் கிழக்கு பார்த்து. மாலையில் வடக்கில் துவக்க வேண்டும்; ஜபம், அர்க்கியம் ஆகியன மேற்கு பார்த்து செய்யவேண்டும். மத்தியானம் செய்யும் நேரத்தில் சூரியன் எங்கே இருக்கிறான் என பார்த்து செய்ய வேண்டும்.

26. எப்படி ஆரம்பிப்பது?
கை கால்கள் சுத்தி செய்து கொண்டு  அவரவர் குல ஆசாரப்படி நெற்றிக்கு இட்டுக்கொண்டு சுத்தமான நீரை பஞ்ச பாத்திர உத்தரணியில் எடுத்துக்கொண்டு சரியான திசையை நோக்கி அமர்ந்து ஆரம்பிக்க வேண்டும்.

27. கால்களை சம்மணமிட்டுக்கொண்டுதானே உட்கார வேண்டும்?
இல்லை. பல கர்மாக்களும் இரண்டு முழங்கால்களுக்கு இடையில் செய்ய வேண்டும். ஆசமனம், தர்ப்பணம் போன்றவை. ஆகவே குக்குடாசனம் - இரண்டு கால்களையும் தரையில் ஊன்றிக்கொண்டு உட்கார வேண்டும். கால்களை அகட்டி வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் முட்டிகளுக்கு நடுவில் கொண்டு வந்து ஆசமனம் முதலியவற்றை செய்ய வேண்டும். (தற்கால உதாரணத்துக்கு கிரிக்கெட்டில் விக்கட் கீப்பர் மாதிரி - ஆனால் பாதம் முழுதும் தரையில் படிய உட்கார வேண்டும்.)

28. ஆசமனம் என்பது கையில் தண்ணீர் நிறைய எடுத்து குடிப்பதுதானே?
இல்லை. வலது கையை குவித்துக் கொண்டு, அதில் மத்தியில் உள்ள இரண்டு ரேகைகளும் முழுகும்படி (உளுந்து மூழ்குமளவிற்கு என்றும் சொல்வதுண்டு) நீர் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் இவற்றை நீட்டி கையை குவித்துக்கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல், மணிக்கட்டை வாய் அருகில் படாமல் வைத்து கையை விரல்கள் மேலே போகும்படி உயர்த்தினால் நீர் வாய்க்குள் போய்விடும். இதுவே ஆசமனம் எனப்படும். இப்படி 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் இது எச்சில் என்பதால் கையால் நீரை தொட்டுக்கொள்ள வேண்டும்.

29. எந்த தண்ணீரானாலும் பரவாயில்லையா, ஆசமனம் செய்யலாமா?
அப்படி இல்லை. முடிந்த வரை சுத்தமான நீரே வேண்டும். வென்னீர், நுரை உள்ள நீர், உப்பு கலந்த நீர் ஆகியன கூடாது. குளித்தபின் கிணற்றில் எடுப்பதோ ஆற்றில் ஓடும் தண்ணீரில் எடுப்பதோ உசிதம். கடல் தண்ணீரில் எப்போதும் ஆசமனம் செய்யக்கூடாது. (ஆனால் தனுஷ்கோடியில் செய்யலாம் என்று அனுமதி இருப்பதாக அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.)

30. ஆற்றிலோ கிணறு, குளத்திலோ செய்வதானால்?
ஆற்றில் முழங்கால் மறையும் அளவு நீரில் நிற்க வேண்டும். இடது கையால் நீரை தொட்டுக்கொண்டு வலது கையால் நீர் எடுத்து ஆசமனம் செய்ய வேண்டும். உட்கார்ந்து, குக்குடாசனம் என்ற விதிகள் இங்கே பொருந்தாது. குளம் கிணறு எனில் வலது காலை பூமியில் வைத்துக்கொண்டு இடது காலை நீரில் விட்டுக்கொண்டு ஆசமனம்.

31. தண்ணீரை குடித்துவிட்டு ஏதேதோ விரல்களால முகத்தில எங்கெங்கோ தொடறாங்க. சுட்டு போட்டாலும் இது எனக்கு வராது.
:-)) எல்லாம் பழக்கம்தான். ஆரம்பத்தில மெதுவாகவே செய்யலாம். எழுதி வைத்துகொண்டு பார்த்தே செய்யலாம். நாளாகாக சுலபமாக பழகிவிடும்.
லிஸ்ட் இதோ:
ஜோடி ஜோடியாக மந்திரம் இருக்கு. முதலில் வலது பக்கம்; அப்புறம் இடது பக்கம்.
கேசவா, நாராயணா = கட்டைவிரலால் கன்னம்
மாதவா, கோவிந்தா =மோதிர விரலால் கண்கள்
விஷ்ணூ, மதுசூதனா = ஆள் காட்டி விரலால் மூக்கின் இரண்டு பக்கங்கள்
த்ரிவிக்ரமா, வாமனா = சுண்டு விரலால் காதுகள்
ஸ்ரீதரா, ஹ்ருஷீகேசா = நடுவிரலால் தோள்கள்
பத்மநாபா, தாமோதரா = எல்லா விரல்களாலும் மார்பிலும் உச்சந்தலையிலும்.

32. இன்னும் நிறைய செய்து பார்த்திருக்கேனே. வித்தியாசமாவும் பார்த்திருக்கேனே!
ஆமாம். ஆந்திரர்களுக்கு எப்போதுமே மந்திரங்களும், செய்கைகளும் அதிகம். அவர்கள் 24 நாமாக்கள் சொல்லி செய்கிறார்கள். சில குடும்பங்களில் வழக்கத்தில் சில மாறுதல்கள் இருக்கலாம். அவரவர் குல ஆசாரப்படியே செய்ய வேண்டும். அது என்ன என்று தெரியாத போது மேற்கூறியவாறு செய்யலாம்.

33. சரி அப்புறம்?
வினாயகரை வேண்டி குட்டிக்கொண்டு, ப்ராணாயாமம் செய்து, பின் சங்கல்பம். வலது தொடை மீது இடது கையை மேல் நோக்கி வைத்து அதை வலது கையால் மூடிக்கொண்டு சங்கல்பம்.
மந்திரங்கள் எதையும் இங்கே சொல்லவில்லை. அவற்றை குரு முகமாக நேரில் தெளிவாக கேட்டு செய்க.

Wednesday, May 11, 2011

தவளையின் ப்ரார்த்தனை....



ப்ரூனோ என்று ஒரு துறவி. ஓர் இரவு மழை பெய்து ஓய்ந்திருந்தது. அப்போது ப்ரூனோ ப்ரார்த்தனை செய்யும்போது தவளைகளின் சப்தம் காதை பிளந்தது. அவரால் ப்ரார்த்தனையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஜன்னல் அருகில் போனார். “எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்க! நான் கடவுள்கிட்டே ப்ரார்த்தனை செய்துகிட்டு இருக்கேன்" என்று கத்தினார்.
பெரிய துறவி ஆச்சா? எல்லா தவளைகளும், ஏன், எல்லா உயிரினங்களும் சப்தமிடுவதை நிறுத்திவிட்டன. நிசப்தம்!
துறவி மீண்டும் ப்ரார்த்தனையை ஆரம்பித்தார். ஆனால் உள்ளிருந்து ஒரு குரல் அவரை நிம்மதியாக இருக்க விடவில்லை. “உன் ப்ரார்த்தனையை விட தவளைகளின் சப்தம் இழிந்தது என்று நினைக்கிறாயா என்ன? ஏன் அப்படி? கடவுளுக்கு அதுதான் பிடித்து இருக்கிறதோ என்னமோ!”
"என் ப்ரார்த்தனையைவிட தவளை சப்தத்தில் மகிழ்ச்சி தரக்கூடியது என்ன இருக்கிறது?”
“கடவுள் அந்த சப்தத்தை ஏன் படைத்தார் என்று நினைக்கிறாய்?”

ஏன் என்று கண்டு பிடிக்க முடிவு செய்தார் ப்ரூனோ.
ஜன்னலைத்திறந்து “பாடுங்கள்” என்று கட்டளை இட்டார்.
தவளைகள் தம் கானத்தை ஆரம்பித்தன. கேட்க கேட்க அவை மோசமாக படவில்லை. உண்மையில் அவற்றை வெறுக்காமல் இருக்கும்போது அவை மோனத்துக்கு தடையாகவில்லை.
அத்துடன் ப்ரூனோவின் மனம் ப்ரபஞ்சத்துடன் ஒருங்கிசைந்தது. வாழ்கையில் முதன்முதலாக ப்ரார்த்தனையை சரியாக கண்டு கொண்டார்.

Monday, May 9, 2011

சந்த்யாவந்தனம் -3



17.ஜுரம் அடிக்கிறது, முடியவில்லை எனக்கோ சந்த்யா தவறக்கூடாது என்று ஆசை! என்ன செய்வது?
உங்களுக்கு பதில் யாரேனும் செய்து, சிறிது நீரை உங்கள் கையில் விட்டால நீங்கள் செய்தது போல் ஆகும்.

18. பஸ்ஸில் போய் கொண்டு இருக்கிறேன். சந்த்யா வேளை வந்துவிட்டது என்ன செய்வது?
வாய்ப்பு கிடைக்கும்போது அர்க்யம் சரியான நேரத்துக்கு விட்டுவிட்டு பின்னால் ஜபம் செய்து கொள்ளலாம். அவரவர் மனசுக்கு ஏற்ப இரண்டு வழிகள்.
ஆசமனம் முதல் அனைத்தும் மனசாலேயே செய்யலாம். சுலபமாக தோன்றினாலும் வெகு கடினம். பயணம் முடிந்த பிறகு செய்யலாம். காலம் தாண்டியதற்கு ப்ராயசித்த அர்க்கியம் இருக்கிறதல்லவா?

19. சந்த்யா என்கிறதுக்கு அர்த்தம் என்ன?
சந்தி நேரத்தில் செய்கிற கர்மா; நன்றாக த்யானம் செய்ய வேண்டிய கர்மா; ஜீவனையும் பரப்பிரம்மத்தையும் சேர்த்து வைக்கிற கர்மா - இப்படி பலவிதமாக பொருள் கொள்ளலாம்.
சந்தியா நேரத்தில் சந்த்யா என்ற தேவதையை வணங்கும் கர்மா என்று பொதுவாக அர்த்தம் செய்து கொள்ளலாம்.

20. எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சொல்லும் மந்திரங்களுக்கு பலன் உண்டா?
உண்டு. பொருள் தெரிந்து மந்திரம் சொல்லுவதே சிறந்தது என்றாலும் பொருள் தெரியாவிட்டாலும் பலன் உண்டு.

21. அது எப்படி?
பரிட்சை இருக்கிறது. சிக்கலான சப்ஜெக்ட். கேள்வி கேட்கிறார்கள். நமக்கு அவ்வளவு சரியா விளங்காவிட்டாலும் 'கடம்' அடித்து வைத்த விடையை சரியாக எழுதிவிட்டால் மதிப்பெண் போட்டுவிடுவார்கள். அது போல. பொருள் தெரியாவிட்டாலும் மந்திரம் ஜபம் செய்து வந்து கொண்டு, பின் அதன் பொருளை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

22. ம்ம்ம்ம்... நம்பிக்கை வரவில்லையே?
அடுப்பில் ஒரு வாணலி வைத்து இருக்கிறது. அது இதுவரை யாரோ தீயில் வைத்து இருந்ததால் சூடாக இருக்கிறது; தெரியாமல் அதை எடுக்கபோகிறோம். அது நம் கையை சுட்டுவிடுகிறது. எனக்கு இது சூடாக இருக்கிறது என்று தெரியாது. எப்படி என் கையை சுடலாம் என்று கேட்க முடியுமா? சுடும் என்று தெரியாமல் நெருப்பில் கையை வைத்தாலும் அது சுடும். அது போல சில கர்மாக்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்கை ஒன்றே ஆதாரமாக கொண்டு பலனைத்தரும்.

23. நான் இன்ன வேத கிளையை சார்ந்தவன். எனக்கு என்ன காயத்ரி?
காயத்ரியில் வேத பிரிவை ஒட்டிய வேறுபாடு இல்லை. எல்லோருக்கும் ஒரே காயத்ரிதான்.

24. அப்போது சந்தியாவந்தனமும் ஒன்றுதானா?
இல்லை. அது வேறுபடும். ஒரே வேதத்திலேயே இடம் (ஆந்திரம், தமிழ்நாடு) இனம் (வைஷ்ணவர், ஸ்மார்த்தர்), சூத்திரம் (ஆபஸ்தம்பர், போதாயனர்) பொருத்து வழக்கத்தில் வேறுபாடுகள் உள்ளன.

Saturday, May 7, 2011

சந்தியாவந்தனம் 2



9. சந்தியா வந்தனம் செய்தா பலன் இல்லைன்னு ரொம்ப விஷயம் தெரிஞ்ச ஒத்தர் சொன்னாராமே?
ம்ம்ம்ம் ..... தினசரி செய்ய வேண்டிய சில காரியங்களை ஆஹ்னிகம் ன்னு சொல்கிறாங்க. அந்த லிஸ்ட்லே சந்த்யாவும் இருக்கு. இதெல்லாம் செய்தா நாம இருக்கிறபடி இருப்போம். (அதாவது இயற்கையா நோய் நொடி இல்லாம.) செய்யாம இருந்தா கெடுதல் ஏற்படும். குளிக்காம இருந்தா நோய் வரும். அதுக்காக குளிக்கிறதுல ப்ரயோசனம் இல்லை என்கலாமா? அது போலத்தான் இவை எல்லாம். கெடுதல் வராம இருக்கிறதே ஒரு நல்ல பலன் இல்லையா? மேலும் சாஸ்திரம் ஸ்ம்ருதி, வேதம் சொன்னதை யோசித்து பார்க்கவும்.

10. இந்த சந்த்யாவந்தனம் பக்தியா. கர்மாவா?
இது பக்தி, கர்மா, யோகம், ஞானம் எல்லாமே சேர்ந்தது.
ஸவிதா என்கிற தேவதையை உபாசிக்கிறோம். இது பக்தி மார்க்கம்.
பெரும்பாலான படிகள் செயல் ஆகும். கர்ம மார்க்கம்.
ஜபத்துக்கு முன் செய்யும் ப்ராணாயாமம் யோகமாகும்.
இந்த சூரியன் போல நானும் ப்ரஹ்மம் என்ற த்யானம் ஞான மார்க்கமாகும்.

11. நீங்க இதை யோகம்ன்னு சொல்கிறது ஆச்சரியமாக இருக்கு!
ஏன்? அஷ்டாங்க யோக மார்க்கத்தில் படிகளை யோசித்து பாருங்க.
யமம், நியமம்: உள் சுத்தி, வெளி சுத்தி
ஆசனம்
ப்ராணாயாமம்
ப்ரத்யாஹாரம்
தாரணை
த்யானம்
ஸமாதி
உள் சுத்தி எப்போதும் இருக்க வேண்டியது. இந்த சந்த்யா காலத்திலேயாவது கெட்ட விஷயங்களை நினைக்கமல் இருக்க வேண்டும் என்று நினைத்து உறுதி கொள்கிறோம்.
வெளி சுத்திக்காக குளிக்கிறோம். ஸ்நானம் இல்லாமல் கர்மா பயனில்லாது போகும்.
நின்று கொண்டோ சுகமாக உட்கார்ந்து கொண்டோ ஜபம் செய்கிறோம்.
ப்ராணாயாமம் செய்து மனதை நிலை நிறுத்துகிறோம்.
ஜபம் தவிர வேறு விஷயத்தில் மனம் போகக்கூடாது என்று சங்கல்பம் செய்து கொள்கிறோம். அவ்வாறே இந்திரியங்களை அடக்கி அலையும் மனதை இழுத்து கட்டிப்போடுகிறோம். (ப்ரத்யாஹாரம்)
மனதின் அசைவுகளை காயத்ரியை சுற்றியே சுழல விடுகிறோம். காயத்ரியை த்யானிக்கிறோம்.
என்றோ ஒரு நாள் ஸமாதி கைகூடினாலும் கூடலாம்!

12. ம்ம்ம்ம்.. என்னை மாதிரி ஆசாமிங்க செய்யணும்; ஆனா ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவங்க இதை செய்ய வேண்டாம் இல்லையா?
அப்படி இல்லை. எல்லோரும் செய்வர். புராணங்கள் இதிஹாஸங்களை ஆராய்ந்து பார்த்தால் பல முனிவர்கள், தேவர்கள் செய்தனர் என்கிறார்கள். ப்ரும்மா, விஷ்ணு, சிவன் செய்கிறார்கள்; அவதாரங்களான க்ருஷ்ணன், ராமன் செய்கிறார்கள்; ரிஷிகளான வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஆங்கீரசர், ப்ருகு, கௌதமர், பாரத்வாஜர் செய்கிறார்கள். தர்ம சாஸ்திரம் எழுதிய மனு, யாக்ஞவல்கியர், பராசரர் போன்றோர்; சூத்திரக்காரர்களாகிய ஆபஸ்தம்பர், போதாயனர், ஆஸ்வாலாயனர் எல்லோரும் செய்தனர்.
ராமாயணத்தில் பல இடங்களில் வால்மீகி சந்த்யையை புகழ்கிறார். மஹா பாரதத்தில் இது சொல்லப்படுகிறது. இரவும் போர் என்று தீர்மானித்த போது மாலையில் போரை நிறுத்திவிட்டு போர் களத்திலேயே ஆயுதபாணியாக சந்த்யையை செய்ததாக எழுதி இருக்கிறது. காளிதாசன் பல இடங்களில் இதை சொல்லுகிறான். பரம சிவன் செய்த சந்த்யா குறித்து குமார சம்பவம் பேசுகிறது.

13. சரி, சரி, தீட்டு எதுவும் இல்லை என்றால் சந்த்யா செய்ய வேண்டும் இல்லையா?
அப்படி இல்லை.
ஆ!
அதாவது தீட்டு இருந்தால் கூட விடாமல் செய்ய வேன்டிய கர்மா இது. ப்ரேத சம்ஸ்காரம் செய்ய வேண்டிய சமயத்தில் சந்த்யா காலம் வந்தால், சம்ஸ்காரத்தை நிறுத்தி, சந்த்யாவந்தனம் முடித்தே பித்ரு கார்யத்தை செய்ய வேண்டும் .

14. சந்த்யா வந்தனம் செய்ய வேண்டிய நேரம் எது?
காலை சூர்ய உதயத்துக்கு முன்னும், நடுப்பகலில் தலைக்கு மேல் சூரியன் இருக்கும்போதும், மாலை சூர்ய அஸ்தமனத்துக்கு முன்னும் செய்ய வேண்டும்.

15. அப்போ வெளியே கிளம்பணும்ன்னா சாயந்திரம் நாலு மணிக்கு செய்யலாமா?
இல்லை, குறித்த வேளைக்கு ஒரு மணி நேரம் முன் செய்யலாம். அதற்கு முன் செய்வது இல்லை.

16.ஏதோ பிரச்சினை; ஒரு வேளை செய்ய முடியாமல் போய் விட்டது. என்ன செய்வது?
விட்டுபோனதை அடுத்த சந்த்யா நேரத்துக்கு முன் செய்தே, அடுத்த வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்.

Friday, May 6, 2011

பதஞ்சலி யோக சாஸ்திர பதிவுகள் பிடிஎஃப் :



பதஞ்சலி யோக சாஸ்திர பதிவுகள் பிடிஎஃப் கோப்புகளாக இணைக்கப்பட்டுள்ளன. வலது பலகத்தில் காணவும்!

அன்பு




வியாபாரி ஒருவன் வறுமையில் இருந்தான்.  நான்கு பெண் குழந்தைகள் வேறு. செல்வம் சேர வேண்டும் என்று லக்ஷ்மியை வேண்டிக்கொண்டு இருந்தான். எத்தனையோ பூஜைகள், சடங்குகளைச்செய்தும் அவன் வேண்டிய செல்வம் கிடைக்கவில்லை. குறைந்த பொருள் வசதியிலேயே எப்படியோ முயன்று பெண்களை திருமணம் செய்து கொடுத்தான். மனைவியும் போய் சேர்ந்தாள். தனித்து விடப்பட்டான். பாசங்கள் நீங்கின. மனம் தவம் குறித்து திரும்பியது. குருவைத்தேடி அலைந்து கண்டு பிடித்து உபதேசம் பெற்றான். மன ஒருமைப்பாட்டை முயன்று கடைப்பிடித்து ஆன்மீக முன்னேற்றம் அடைந்தான்.

ஒரு நாள் ஜபம் செய்து கொண்டு இருக்கும்போது லக்ஷ்மி அவன் எதிரே தோன்றினாள்.

"குழந்தாய்! என்ன வரம் வேண்டும்? கேள், தருகிறேன்!"

வியாபாரி சிரித்தான். "ஒரே விஷயம்தான் தெரிய வேண்டும். வேறு ஒன்றுமில்லை."
"கேள்!"
"எவ்வளவு பூஜைகள் செய்து உன்னை வருந்தி வருந்தி அழைத்தேன்? நீயோ வரவே இல்லை. வைராக்கியம் வந்துவிட்ட இப்போது எனக்கு வேண்டியது ஏதுமில்லை. நீ தரக்கூடியது ஏதுமில்லை! இது என்ன விசித்திரம்?"
"குழந்தாய், நீ நிறைய பூஜைகள் செய்தது உண்மையே. அதில் எனக்கு பரம திருப்தியே! உன் மீது உண்டான அன்பினால்தான் அப்போது உன் முன் வரவில்லை!"

Thursday, May 5, 2011

சந்தியா வந்தனம்




சந்தியா வந்தனம்:

1. யார் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
ப்ரம்ஹோபதேசம் ஆன அதாவது பூணூல் போட்டுக்கொண்ட- அனைவரும் செய்ய வேண்டும்.
2. அப்போ ப்ராஹ்மணர்கள்தானே செய்ய வேண்டும்?
ம்ம்ம். அப்படி இல்லை. அந்தணர், க்ஷத்திரியர், வைச்யர் ஆகிய மூன்று வர்ணத்தவருக்குமே பூணூல் போட்டுக்கொள்ள அதிகாரம் உண்டு. ஆனால் தற்காலத்தில் அந்தணர் மட்டுமே போட்டுக்கொள்கிறார்கள்.
3. ஏன் சந்த்யா வந்தனம் செய்ய வேண்டும்?
பல் தேய்த்தால் பெரிதாக நன்மை ஒன்றும் தெரியாவிட்டாலும் பல் தேய்க்கவில்லையானால் வாய், பல், ஈறு, கெட்டு துர்நாற்றம் வருகிறது; நோய் வருகிறது. அது போல் சந்த்யாவந்தனம் செய்யாவிட்டால் தீமை ஏற்படுகிறது; நோய் நொடி ஏற்படுகிறது. அதை தடுக்க சந்த்யாவந்தனம் செய்ய வேண்டும்.
4. வேறு காரணம் உண்டா?
சந்த்யாவந்தனம் செய்யும் வரை ப்ராம்ஹணத்துவம் நிலைக்கும்; விட்டு விட்டால் நிலைக்காது. சந்த்யா உபாசனை இல்லாமல் மற்ற தெய்வ காரியங்கள் பித்ரு காரியங்கள் என்ன செய்தாலும் பலன் கிடைக்காது.
5. அதென்னது? நீங்களா சொல்லறீங்களா?
சாஸ்திரமே சொல்லுகிறது:
விப்ரோ வ்ருக்ஷ: தஸ்ய மூலம் ஹி சந்த்யா |
மூலே சின்னே நைவ புஷ்பம் பலம் வா ||
விப்ரன் எனப்படும் ப்ராஹ்மணன் மரம் போன்றவன். அவனது வேர் சந்த்யை. வேரை வெட்டிவிட்டால் பூவோ, பழமோ கிடைக்காது. சந்தையை விட்ட ப்ராஹ்மணன் செய்யும் காரியங்களுக்கு பலன் இராது.
6. சரி சரி, இன்னும் ஏதாவது?
மனு ஸ்ம்ருதியில்:
ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயு ரவாப்னுயு |
ப்ரஞாம் யச: ச கீர்த்திஞ்ச ப்ரஹ்ம வர்சஸ மேவச ||
நீண்ட காலம் சந்த்யாவந்தனம் செய்த மஹரிஷிகள் நீண்ட ஆயுளை அடைந்தனர். அறிவு, நற்பெயர், புகழ், ப்ரஹ்ம வர்சஸ் இவற்றையும் பெற்றனர்.
7. வேதம் என்ன சொல்லுகிறது?
வேதம் சந்த்யை பற்றி 'ஸகலம் பத்ரமச்னுதே' என்கிறது. அதாவது எல்லாவித நன்மையையும் பெறுகிறான்.
8. மோக்ஷத்தையே கொடுக்கும்ன்னு யாரோ சொல்லிகிட்டு இருந்தாங்க. அது கொஞ்சம் 'டூ மச்' தானே?
டூ மச் இல்லை. சந்த்யாவந்தனத்தில் வரும் 'அஸாவாதியோ ப்ரஹ்மா; ப்ரஹ்மைவ ஸத்யம்; ப்ரஹ்மைவாஹமஸ்மி' என்ற த்யானம் மோக்ஷ சாதனமாகும். (இந்த சூரியன் ப்ரஹ்மம்; ப்ரஹ்மமே சத்தியம்; நான் ப்ரஹ்மமாகவே இருக்கிறேன்)

Wednesday, May 4, 2011

குட்டிக்கதைகள்



இது குட்டிக்கதைகளுக்கு சீசன் போல இருக்கு. ஏற்கெனெவே ரொம்ப ஹெவியான யோக சாஸ்திரம் முடிந்த பிறகு எல்லாருக்கும் ரிலாக்ஸ்டா குட்டிக்கதைகள் போடணும்ன்னு தீர்மானம். கூடவே சந்தியா வந்தனம், காயத்ரி பற்றி எல்லாம் எழுத வேண்டிய ஒரு சூழ்நிலை. இரண்டும் மாறி மாறி வெளியாகும்.
---------

ஒரு முதிய துறவி தனியாக சாலை வழியே சென்று கொண்டு இருந்தார். காட்டுவழியாக வெகு தூரம் சென்று ஒரு பெரும் நதியை படகில் கடந்து அடுத்த ஊர் செல்ல வேண்டும்.

வழியில் ஒரு இளம் துறவி வந்து சேர்ந்தார்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்றார் இளம் துறவி.
"அடுத்த ஊருக்கு..."
"ஓ, காட்டு வழியாக செல்ல வேண்டும். நானும் கூட வரலாமா? பேச்சுத்துணையாக இருக்கும்!"
" தாராளமாக...."

வழி நெடுக தர்ம விசாரம் - குறிப்பாக சந்நியாஸ நிலையின் கட்டுப்பாடுகளை- பேசிக்கொண்டு நடந்தனர். இளம் துறவி பல விஷயங்களை விவாதித்தார்.
கடைசியில் சந்நியாசி பணம் வைத்துக்கொள்ளலாமா கூடாதா என்று விசாரம் நடந்தது. கூடாது என்பது பெரியவரின் கொள்கை. அவசரத்துக்காக சிறிதளவு வைத்துக்கொண்டால் தப்பில்லை என்பது இளையவரின் வாதம்.
"சந்நியாசி பணத்தை கையால் தொடுவது கூட பிரச்சினை உண்டு பண்ணலாம்; பணம் வைத்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான்" என்றார் பெரியவர்.

இந்த நேரத்தில் காட்டு வழியின் எல்லை வந்துவிட்டது. இருட்டும் நேரமும் ஆகிவிட்டது.
ஆற்றை கடக்க இலவச படகு சேவையின் கடைசி படகு போய்விட்டது.
இரவு நேரம் வந்தால் மிருகங்களின் நடமாட்டமும் அவற்றால் தொந்திரவும் இருக்கும் என்பதால் நதியை அவசியம் கடக்க வேண்டிய சூழ்நிலை என்று இளம் துறவி கருதினார். அங்கும் இங்கும் தேடி ஒரு படகோட்டியை கண்டு பிடித்தார். பணம் தருவதாக சொன்னதும் அவனும் ஆற்றை கடக்க படகு ஓட்ட சம்மதித்தான்.

ஆற்றை கடந்தபின் இளம் துறவி தன்னிடமிருந்த சிறு பண முடிப்பை திறந்து அவனுக்கு பணம் கொடுத்தார்.
பின்னர் ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தனர், இளம் துறவி சொன்னார். "பார்த்தீர்களா? நான் சொன்ன படியே ஆயிற்று. என்னிடம் கொஞ்சம் பணம் இருந்ததால்தானே இப்போது நாம் ஆற்றை கடக்க முடிந்தது? நான் கூட வரவில்லையானால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?"

பெரியவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "அப்பா, நான் தனியாகத்தானே புறப்பட்டேன்? வழியில் நீயாக வந்து சேர்ந்து கொண்டாய். பணம் இல்லாத சந்நியாசிக்கு பணம் வைத்து இருப்பவர் வந்து உதவ வேண்டும் என்பது இறைவன் விருப்பம் போலிருக்கிறது!"

இளம் துறவி வாயடைத்துப்போனார்.

Monday, May 2, 2011

நாந்தீ ஶ்ராத்தம்.




இன்னொரு வலைப்பூவில் பின்னூட்டம் போட விஷயம் பெரிதாக இருக்கிறது என்பதால் இங்கே பதிவு:

சுப கர்மாக்கள் செய்யும் போது எல்லா தேவர்கள் ஆசியுடன் செய்கிறோம். குல தெய்வ வழிபாடு உண்டு. அதே போல பிருக்களின் ஆசிர்வாதங்களுடனும் செய்ய வேண்டும். இதுவே சுமங்கலி ப்ராத்தனை என்றும் நாந்தீ என்றும் அறிப்படுகிறது. இது சூத்திரங்களில் விதிக்கப்படவையே ஆகும். அதனால் அச்சானியமாக இருப்பதாக நினைத்து விட்டுவிடக்கூடாது. இதை சூத்திரங்களில் 'ப்ரம்மணான் போஜயித்வா, ஆஶிஷோ வாசயித்வா' என்ற வாக்கியங்களும் உணர்த்துகின்றன.

பித்ருக்களில் பலவகை உண்டு.அதில் நாந்தீமுகர் என்பவரே சுப காலங்களில் ஆராதிக்கத்தக்கவர். சுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை என்பதைப்போலவே இவையும் செய்யப்பட வேண்டும். ஶ்ரத்தை உள்ளோர் இன்னும் அன்ன ரூபமாகவே - அதாவது ஹவிஸ் வைத்து நாம் வழக்கமாக செய்யும் ஶ்ராத்தம் என்பதை அறிவது போலவே செய்ய வேன்டும். வித்தியாசங்கள் உண்டு. உபவீதத்தை இடமாக போட்டுக் கொள்வதில்லை. எள்ளைத்தொடுவதில்லை. பதிலாக மங்கள அக்ஷதை பயனாகும். வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூப பித்ரு-பிதாமஹ-ப்ரபிதாமஹ என்பதற்குப்பதிலாக - நாந்தீமுக என கூறப்படும்.

பித்ருக்கள் பலவகையாக இருப்பதுபோலவே விஶ்வேதேவர்களும். இங்கே சுப காரியங்களுக்கு உள்ளோர் ஸத்ய வஸு என பெயருடையோர்.

இன்னொரு வித்தியாசம் இங்கு ஸ்த்ரீக்களே முதலில் வரிக்கப்படுவர். அவர்களுக்கே முதலில் பூஜை. அதே போல வழக்கமாக கீழே ஆரம்பித்து மேலே அன்னை-பாட்டி-கொள்ளுபாட்டி என்று போகாமல்; அப்பா, தாத்தா, கொள்ளுத்தாத்தா என்று போகாமல் மேலிருந்து கீழே வரிசையாக வரும்.
ஹோமத்திலும் இதே போல் நாந்தீமுக என்ற அடைமொழியுடன் ஹோமம்.

உத்தமமானது விதிவத்தாக ப்ராம்ஹணர்களை வரித்து வருட ஶ்ராத்தம் போல செய்வது.

மத்திமம் ஆம ஶ்ராத்தம் என வாழை இலையில் அரிசி வாழைக்காய், தக்ஷிணை, வஸ்த்ரம் வைத்து கொடுப்பது.
இதுவும் இல்லாவிட்டால் நிறைய தக்ஷிணை கொடுத்து ஆசீர்வாதம் செய்யச் சொல்ல வேண்டும். சாப்பாடு போட வேண்டிய இடத்தில் காப்பிக்குக்கூட வராத பணத்தை கொடுத்து நாந்தீ செய்ததாக எண்ணக்கூடாது.