Pages

Tuesday, March 22, 2011

புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் ...



सदा ज्ञाताश्चित्तवृत्तयस्तत्प्रभयोः पुरुषस्यापरिणामित्वात् ।।18।।
ஸதா³ ஜ்ஞாதாஶ்சித்தவ்ரு«த்தயஸ்தத்ப்ரப⁴யோ​: புருஷஸ்யாபரிணாமித்வாத் || 18||

ஸதா³ ஜ்ஞாதா: எப்பொழுதும் அறியப்பட்டவை (ஆகின்றன) ; சித்த வ்ரு«த்தய: = சித்தத்தின் விருத்திகள்; தத் ப்ரப⁴யோ​: புருஷஸ்ய =புருஷனின்; அபரிணாமித்வாத் = பரிணாமமற்றிருத்தல் என்பதால்;

சித்தத்துக்கு வெளி வஸ்து ஒன்றுடன் இந்திரியங்கள் மூலம் ஒரு ஸம்பந்தம் ஏற்பட்டதும் அது அந்தந்த விஷய வடிவாக ஒரு மாறுதலை (பரிணாமத்தை) அடைகிறது. இப்படி மாறுதல் இல்லையானால் அந்த வஸ்து அறியப்பட மாட்டாது. ஆகவேதான் சித்த விஷயமான சப்தம் முதலிய சில அறியப்படாமல் இருக்கிறது. வேலையில் மிக மும்முரமாக இருந்த ஒருவரிடம் இப்போது இடி இடித்ததே தெரியாதா என்றால், அப்படியே எனக்கு சப்தம் ஒன்றும் கேட்கவில்லையே என்கிறார்.
ஆனால் புருஷன் விஷயத்தில் இப்படி இல்லை. புருஷனுக்கோ பரிணாமம் - மாறுதல் என்ற ஒன்றே இல்லை. அவனுக்கு எல்லாமும் எப்போதும் அறியப்பட்டதுதான். அறியப்படாதது என்று ஒன்றுமே அவனுக்கு இல்லை.
இப்படியாக புருஷனுக்கும் சித்தத்திற்கும் பேதம் நன்கு இருக்கிறது.



1 comment:

Geetha Sambasivam said...

புருஷனுக்கும், சித்தத்திற்கும் பேதம் இருக்கிறது, சரி, ஆனால் இடி இடித்தது கேட்காமல் போனாலும் இடி இடிச்சிருக்கும் தானே?? அதைக் கேட்கலை என்றால் சித்தம் ஒருமுனைப்போடு இருந்தது என்று அர்த்தமா? முன்னாடி படிச்சப்போ புரிஞ்சாப்போல் இருந்தது. :((((