Pages

Thursday, March 10, 2011

வாசனைகள் அநாதி....



तासामनादित्वमाशिषो नित्यत्वात् ।।10।।
தாஸாமநாதி³த்வமாஶிஷோ நித்யத்வாத் || 10||

தாஸாம் = அவற்றுக்கு (முந்தைய ஜன்ம வாசனைகளுக்கு) ; அநாதி³த்வம் =ஆதி இல்லாமல் இருப்பது என்பது; ஆஶிஷோ = எப்பொழுதும் உயிருடன் இருக்க வேண்டும்; மரணத்தை அடையக்கூடாது என்ற ப்ரார்த்தனை; நித்யத்வாத் = எல்லா ப்ராணிகளுக்கும் இருப்பதால்; (அங்கீகரிக்கத்தக்கது)

எல்லா ப்ராணிகளும் உயிருடனேயே இருக்க விரும்புகின்றன. மரணத்தை யாரும் வரவேற்பதில்லை. சிறு குழந்தையும் நழுவும் நிலை ஏற்பட்டால் கைக்கு கிடத்ததை கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. இந்த பயம் முன் பிறவி இல்லாமல் ஏற்படுவதல்ல. அந்த முன் பிறவியில் இருந்திருக்க வேண்டிய மரண பயம் அதற்கு முன் ஒரு பிறவி இருந்திருக்க வேண்டுமென காட்டுகிறது. இப்படியே முன் ஜன்மம், அதற்கு முன் ஜன்மம் என்று போவதால் வாசனைகள் ஆதி இல்லாதவை -அநாதி- என்று ஏற்படுகிறது.


2 comments:

Geetha Sambasivam said...

அப்பாடா, இது நல்லாப் புரிஞ்சது. :)

திவாண்ணா said...

:-))