Pages

Thursday, February 10, 2011

மனோ வேகம்...



ततो मनोजवित्वं विकरणभावः प्रधानजयश्च ।।48।।
ததோ மநோஜவித்வம்° விகரணபா⁴வ​: ப்ரதா⁴நஜயஶ்ச || 48||

தத: = அதனால்; மநோ ஜவித்வம்° = (உடலுக்கு) மனதைப்போல உடலுக்கு அதி வேக கதியும்; விகரணபா⁴வ​: = (ஸ்தூல சரீரத்தின் உதவி இன்றியே இந்திரியங்களுக்கு) தேச கால சம்பந்தமுள்ள வஸ்துக்களில் வ்ருத்தி லாபமும், ப்ரதா⁴நஜயஶ்ச = (தன்னிச்சையை அனுசரித்து) ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் (உண்டாகிறது)

இந்திரியங்களில் ஸம்யமம் செய்து இந்திரிய ஜயம் பெற்றது போல மனதில் ஸம்யமம் செய்து சரீரத்துக்கு அதன் வேகத்தை பெறலாம். தூர தேசம்; இறந்த, எதிர்காலங்களில் இருக்கும் விஷயங்கள்; சூக்ஷ்மமான விஷயங்கள் இவற்றில் இந்திரியங்களின் விருத்தி லாபத்தை (ஒன்றைப்பற்றிய அறிவுதானே இது?) பெறலாம். தன்னிச்சையை அனுசரித்து ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் உண்டாகிறது. இந்த மூன்று சித்திகளும் மதுப்ரதீகா எனப்பெயர் பெறும்.

இது வரை ஸம்யமத்தால் உண்டாகிறதும், நேரடியாகவோ சிரத்தையை உண்டு பண்னுகிறதாகவோ விவேகக்யாதிக்கு சாதனமாக இருக்கிற ஞானம், க்ரியை இவை ரூபமான ஸித்திகள் சொல்லப்பட்டன.

No comments: