Pages

Tuesday, February 1, 2011

கூடு விட்டு கூடு பாய்தல்:



Patanjali yoga sutra

  
  बहिरकल्पिता वृत्तिर्महाविददेहा ततः प्रकाशावरणक्षयः ।।43।।

ப³ஹிரகல்பிதா வ்ரு«த்திர்மஹாவித³தே³ஹா தத​: ப்ரகாஶாவரணக்ஷய​: || 43||

ப³ஹிர் =சரீரத்துக்கு வெளியே ஏற்பட்ட; அகல்பிதா = மனத்தின் அகல்பிதை என்ற; வ்ரு«த்திர் =விருத்தி; மஹா வித³ தே³ஹா = மஹாவிததேஹா என்னும்; தத​: =சித்தியால்; ப்ரகாஶ ஆவரண = புத்தி சத்வத்தின் பிரகாசத்தை மறைக்கும் கிலேசம், கர்மம், ஆசயம் இவற்றின்; க்ஷய​: = தேய்தல் (அழிவு) (உண்டாகிறது).

தாரணை போது உடலின் வெளியே மனோ விருத்தி ஏற்படுதல் விதேஹ தாரணை ஆகும். இந்த நிலையில் மனதிற்கு உடலின் சம்பந்தம் ஏற்படுமானால் அது கல்பிதா எனப்படும். அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம் இருக்கும்போதுதான் இது ஏற்படும். அப்போதுதான் வெளி வஸ்துகளில் வ்ருத்தி ஏற்படட்டும் என்ற சங்கல்பமும் உண்டாகும்.

சரீரத்தில் நான் என்ற புத்தி விலகின போதும் கூட மனதிற்கு வெளியே வ்ருத்தி ஏற்படுகிறது. இது சரீர சம்பந்தம் இல்லாமலும் சங்கல்பம் இல்லாமலும் நடக்கும். இது அகல்பிதா அல்லது மஹாவிததேஹா எனப்படும். இந்த சித்தியடைந்த யோகிகள் பராகாசத்துக்குள் நுழைவர்.
மேலும் சத்வ புத்தி ப்ரகாச ஸ்வபாவம் உள்ளது. இதை தமஸும், ரஜஸும் ஆன கிலேசம், கர்மம், ஆசயம் ஆகியன மறைகின்றன. (பாதம் 1 சூத்திரம் 24). மஹாவிதேஹா கிடைத்தவருக்கு இது தேய்ந்து ஸர்வஜ்ஞானம் இருக்கும் தன்மை ஏற்படும்.

No comments: