Pages

Tuesday, February 22, 2011

4- கைவல்ய பாதம்



चतुर्थः कैवल्यपादः         சதுர்த²​: கைவல்யபாத³​:

முதல் மூன்று பாதங்களால் ஸமாதி, ஸமாதியின் சாதனங்கள், ஸமாதியின் விபூதி ஆகியன சொல்லப்பட்டன. இனி ஸமாதியால் உண்டாகும் கைவல்ய நிலை குறித்து சொல்லப்படும்.

 जन्मौषधिमन्त्रतपःसमाधिजाः सिद्धयः ।।1।।
ஜந்மௌஷதி⁴மந்த்ரதப​:ஸமாதி⁴ஜா​: ஸித்³த⁴ய​: || 1||

ஜந்ம = பிறவியாலும்; ஔஷதி⁴ = மூலிகைகளாலும்; மந்த்ர = மந்திரங்களாலும்; தப​: = தபஸாலும்; ஸமாதி⁴ = ஸமாதியாலும்; ஜா​: உண்டானவை; ஸித்³த⁴ய = சித்திகள்.

பிறவியிலேயே சிலருக்கு சித்திகள் இருக்கலாம்!
 சில மூலிகைகளை உட்கொள்வதாலும், மருந்து தயார் செய்து உட்கொள்வதாலும் சில சித்திகள் அடையப்படும். இதனால் மூப்பு, நரை இல்லாமல் சிலர் இருப்பர்.
 காற்றில் பறத்தல் போன்ற சில சித்திகள் மந்திர ஜபங்களால் அடையப்படுகின்றன.
 விஸ்வாமித்திரருக்கு தபசால் சித்திகள் உண்டானது. நந்திகேஸ்வரர் மனுஷ உடலில் இருந்து கொண்டே தபஸால் ஈஶ்வர அனுக்ரஹம் ஏற்பட்டு மனித சரீரத்தை தேவ சரீரமாக மாற்றிக்கொண்டார். யோகிகள் ஸம்யமம் செய்து பெறும் சித்திகள் ஸமாதி சித்தி எனப்படும்.


Friday, February 18, 2011

சமாதி பாதம் நிறைவு.





सत्त्वपुरुषयोः शुद्धिसाम्ये कैवल्यम् ।।55।।
ஸத்த்வபுருஷயோ​: ஶுத்³தி⁴ஸாம்யே கைவல்யம் || 55||

ஸத்த்வ புருஷயோ​: = புத்தி தத்துவத்துக்கும் புருஷனுக்கும்; ஶுத்³தி⁴ ஸாம்யே = சுத்தி விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்டால்; கைவல்யம் = கைவல்யம் கிடைக்கிறது.
புத்தி தத்துவத்துக்கு தோஷங்கள் ரஜஸும் தமஸும். இவை இரண்டும் விலகி விவேக க்யாதியின் பலத்தால் எல்லா விருத்திகளும் நின்று போகும். பிரதி பிம்ப பலத்தால் கற்பிக்கப்பட்ட போகம் இல்லாது போகும். இதுவே புத்தி தத்துவத்தின் சுத்தி.
தோஷம் ஏதும் இல்லா புருஷனுக்கு பிரதி பிம்ப பலத்தால் கல்பிக்கப்பட்ட போகம் போகிறதே புருஷனுக்கு சுத்தி ஆகும். இப்படி சுத்தி ஏற்படுதலே கைவல்யம் என்ற மோக்ஷம் உண்டாகிறது. இது வரை உண்டாகாத துன்பம் இனியும் உண்டாகாது இருக்குமானால் அது கைவல்யம் எனப்படும். இது புத்தி சத்வத்தில் இருந்து முற்றும் வேறு பட்ட புருஷனை சாக்ஷாத்கரிப்பதால் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற சித்திகள் யோக சாத்திர சாதன அனுஷ்டானத்தில் ஒரு சிரத்தை உண்டாகவே சொல்லப்பட்டன.
--ஓம்--


Thursday, February 17, 2011

விவேகஜ க்ஞானத்தின் லக்ஷணம்:





तारकं सर्वविषयं सर्वथाविषयक्रमं चेति विवेकजं ज्ञानम् ।।54।।

தாரகம்° ஸர்வவிஷயம்° ஸர்வதா²விஷயக்ரமம்° சேதி விவேகஜம்° ஜ்ஞாநம் || 54||

தாரகம்° = சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றுவதாகவும்; ஸர்வவிஷயம்° = (ஸ்வரூபத்தால்) எல்லா விஷயங்களையும்; ஸர்வதா² விஷய அக்ரமம்° ச = (பிரகாரத்தால்) விஷயத்தின் வரிசை என்று இல்லாமல் ஒரே நேரத்திலும் (அறிதல்); இதி விவேகஜம்° ஜ்ஞாநம் = க்ஷணம், அதன் கிரமம் இவற்றில் ஸம்யமத்தால் உண்டான விவேகஜ ஞானத்தால் (உண்டாகிறது).
முக்காலங்களிலும் உள்ள எல்லா வஸ்துகளும் அறியப்படுவதால் அவற்றின் தோஷங்களை கவனிக்க முடிகிறது. இதனால் வைராக்கியமும் அதனால் மோக்ஷமும் கிடைக்கிறது. அதனால் இது தாரகம் எனப்படுகிறது.
சமைத்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது ஒவ்வொரு திண்பண்டமும் என குறிக்கிறது. மீதி இல்லாமல் என்று பொருள் இங்கு இல்லை. பாத்திரத்தில் இருந்த எல்லா திண்பண்டங்களும் சாப்பிடப்பட்டன என்று சொல்லும் போது எல்லா என்பது மீதி இல்லாமல் என்று பொருள் தருகிறது. முந்தயது பிரகாரத்தால் எல்லாம். பிந்தயது ஸ்வரூபத்தால் எல்லாம். இப்படி எல்லா விஷயங்களும் என்றும் ஒவ்வொரு விஷயத்தில் முழுமையாக என்றும் குறிப்பிட ஸர்வ விஷயம், ஸர்வதா விஷயம் என சொல்லப்பட்டது.
சரி, மேற்கூறிய சித்திகள் எல்லாம் அடையப்பட்டால்தான் கைவல்யம் கிடைக்குமா? அல்லது அவை அனைத்தும் இல்லாமல் கிடைக்குமா?


Wednesday, February 16, 2011

விவேகஜ ஞானத்தால்...



 जातिलक्षणदेशैरन्यतानवच्छेदात्तुल्ययोस्ततः प्रतिपत्तिः ।।53।।
ஜாதிலக்ஷணதே³ஶைரந்யதாநவச்சே²தா³த்துல்யயோஸ்தத​: ப்ரதிபத்தி​: || 53||

ஜாதி = பசு முதலிய ஜாதி; லக்ஷண = கருப்பு வெளுப்பு முதலிய லக்ஷணம்; தே³ஶைர் = முன் பின் முதலிய தேசம் (இவற்றால்) அந்யதா = வேறாக; நவச்சே²தா³த் = நிச்சயம் சம்பவிக்காதாகையால்; துல்யயோ = ஜாதி, லக்ஷணம், நேரம் ஆகியவற்றால் ஒத்திருக்கும் இரண்டு; தத​: = க்ஷண ஸம்யமத்தால் உண்டாகிற விவேகஜ ஞானத்தால்தான்; ப்ரதிபத்தி = பேத க்ஞானம் உண்டாகிறது.​
சுலபமாக புரிந்து கொள்ள :
பசுவும் கவயம் என்ற மிருகமும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். ஒரே இடத்திலும் இருக்கலாம். இவை வேறானவை என்று அவற்றின் ஜாதியால்தான் தெரியும்.
இரண்டு பசுக்கள் ஓரிடத்தில் இருக்க வெள்ளைப்பசு, கருப்பு பசு என்ற ரீதியில்தான் வேறுபடுத்தி பார்க்க முடியும்.
நெல்லி மரத்தில் உள்ள நெல்லிக்காய்கள் பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்கும். இந்த இடத்தில் முன் உள்ளது பின் உள்ளது என்றே அவற்றை வேறுபடுத்தி பார்க்க இயலும்.
இரண்டு இடங்களில் நெல்லிக்காய் வைத்து இருக்கிறது. பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது. யாரோ ஒருவர் நாம் பார்க்காத சமயம் முதல் இடத்தில் இருந்து நெல்லிக்காயை எடுத்து இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்ததை நீக்கிவிட்டால் பிறகு பார்க்கும் நாம் முதல் இடத்தில் இருந்த நெல்லிக்காய் காணவில்லை என்று நினைப்போம். ஆனால் நடந்தது வேறு என்று க்ஷணம் - கிரமத்தில் ஸம்யமம் செய்த யோகி இந்த க்ஷணத்தில் இந்த இடத்துக்கு சம்பந்தம் ஏற்பட்டது என அறிவதால் அவனுக்கு நடந்தது சரியாகத் தெரியும்.


Tuesday, February 15, 2011

விவேகஜ ஞானம் உண்டாக இன்னொரு உபாயம்:



  क्षणतत्क्रमयोः संयमाद्विवेकजं ज्ञानम् ।।52।।

க்ஷணதத்க்ரமயோ​: ஸம்°யமாத்³விவேகஜம்° ஜ்ஞாநம் || 52||

க்ஷணம் தத் க்ரமயோ​: = க்ஷணமும் அதன் கிரமுமான காலம்; ஸம்°யமாத்³ = இதில் ஸம்யமம் செய்ய; விவேகஜம்° = எல்லா வஸ்துக்களையும் பகுத்தறிவதை முன்னிட்ட; ஜ்ஞாநம் = ஞானம் (உண்டாகிறது)

க்ஷணம் என்பது ஒரு காலநிலை. ஆங்கிலத்தில் இன்ஸ்டன்ட் என்பது. அதில் முன்பாகம் பின்பாகம் என்றெல்லாம் இருக்க முடியாத அளவு நுண்ணியது. க்ஷணம் அடுத்த க்ஷணம் என்று தொடர்ந்து வரும் பிரவாகம் கிரமம். க்ஷணம் அடுத்த க்ஷணத்தில் மறைந்துவிடுகிறது. க்ஷணங்களின் சமுதாயம் நிமிஷம், மணி, வருஷம் போன்றவை. க்ஷணமும் உண்மையானதல்ல; ஆகவே அதன் சமுதாயமும் உண்மையானதல்ல. (நிரந்தரமல்ல என பொருள் கொள்க. எது நிரந்தரம் இல்லையோ அது உண்மையல்ல. தற்காலிகமே.) ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொரு வஸ்துவும் மாறிக்கொண்டே இருப்பதால், இந்த க்ஷணத்திலும் அதன் கிரமத்திலும் ஸம்யமம் செய்து சாக்ஷாத்கரித்தால் எல்லா வஸ்துக்களையும் அவற்றின் எல்லா விசேஷங்களும் உட்பட அறியப்படுகிறது. இதுவே ஸர்வக்ஞதை. இதனால் இவை எல்லாவற்றிலும் புருஷன் வேறுபட்டவன் என்ற ஞானமும் உண்டாகிறது.

Sunday, February 13, 2011

கைவல்லியத்துக்கு ஏற்படக்கூடிய தடைகள்:



स्थान्युपनिमन्त्रणे सङ्गस्मयाकरणं पुनरनिष्ट प्रसङ्गात्।51।।

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே ஸங்க³ஸ்மயாகரணம்° புநரநிஷ்ட ப்ரஸங்கா³த்| 51||

ஸ்தா²ந்யுபநிமந்த்ரணே = இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்; ஸங்க³= ஆசை; ஸ்மய அகரணம்°= கர்வம் ஆகியவற்றை செய்யாதிருத்தல்; புநர் = மீண்டும்; அநிஷ்ட = இஷ்டமில்லாத; ப்ரஸங்கா³த் = சம்சார பந்தம் ஏற்படும் என்ற பயத்தால்; (யோகத்துக்கு ஏற்படும் விக்கினங்களை போக்க இதுவே உபாயம்)

யோகிகள் நால்வகை:
பிரதம கல்பிகன்: இவர் ஸம்யமத்தில் மட்டும் விருத்தியை செய்து வருவார். சித்திகள் கிடையாது (பிரச்சினையே இல்லை!) தேவர்கள் இவரை 'கண்டு கொள்ள' மாட்டார்கள்.

மது பூமிகன்: ஸப்ரக்ஞாத ஸமாதியில் ருதம்பரா, பரஞான அவஸ்தையுடன் மதுமதீ என்ற சித்த பூமியை அடைந்து; பஞ்சபூதங்களையும், இந்திரியங்களையும் ஸாக்ஷாத்கரித்து அவற்றை ஜெயிக்க விரும்பி அவற்றால் மது ப்ரதீகா, விசோகா, ஸம்ஸ்கார சேஷா என்ற மூன்று வித பூமிகளை அடைய விரும்புகிறவன் மது பூமிகன்.

ப்ரக்ஞாத்ஜோதி: ருதம்பரா பிரக்ஞையையும் பூதேந்திரியங்கள் ஜெயத்தையும் அடைந்து தேவர்களும் நெருங்காதபடி விசோகா, ஸம்ஸ்கார சேஷா ஸித்தியையும் சாதிக்க விரும்பி, அதனதன் சாதனத்தில் ஸம்யமம் செய்வதில் முயற்சி செய்கிற யோகி இவர். இவருக்கு இந்திராதி யோகங்கள் கிடைக்காது (அதான் தேவர்கள் நெருங்க முடியாத படிக்குன்னு சொல்லியாச்சே!)

அதிக்ராந்த பாவனீயன்: விசோகா, ஸம்ஸ்கார சேஷா பூமிகளையும் அடைந்து கடைசி சரீரத்தில் உள்ள சித்தத்தின் லயம் என்ற பலனை மட்டும் அடைய காத்து இருப்பவர். இவர் செய்ய வேண்டியன எல்லாம் செய்து முடித்தவர். இவருக்கும் இந்திராதி யோகங்கள் கிடையா!

ஆராய்ந்தால் மது பூமிகன் மட்டுமே இந்திராதி யோகங்கள் பெறுவார். ('இந்திரன் முதலான ஸ்தானத்தில் இருப்பவரால் பிரார்த்திக்கப்படினும்' என்று சொன்னது இவருக்கு மட்டுமே பொருந்துகிறது.) போகங்களில் ஆசை வரின் கீழே விழுவர். கர்வத்தை அடக்காவிடில் செய்ய வேண்டியன எல்லாம் செய்து விட்டேன் என்று நினைப்புண்டாகி மேலே யோக பூமிகள் கிடைக்காமல் போகும். ஆகவே இந்த சூத்திரம் இவரைக்குறித்தே சொல்லப்பட்டது.

Saturday, February 12, 2011

விவேக க்யாதியின் முக்கியமான ஸித்தி:



तद्वैराग्यादपि दोषबीजक्षये कैवल्यम् ।।50।।

தத்³வைராக்³யாத³பி தோ³ஷபீ³ஜக்ஷயே கைவல்யம் || 50||

தத்³வைராக்³யாத³பி= அதன் (விசோகா எனும் ஸித்தி) மீதும் (அதன் காரணமான விவேக க்யாதி மீதும்) வைராக்கியம் ஏற்பட்டால் ; தோ³ஷ பீ³ஜ க்ஷயே = அவித்தைக்கு முதலான க்லேசங்களுக்கு காரணமான ப்ராந்தி சம்ஸ்காரம் விலகி; கைவல்யம் = கைவல்யம் என்னும் சுய சொரூப பிரதிஷ்டை உண்டாகிறது. இது பர வைராக்கிய ஸம்ஸ்கார சேஷா என்ற பூமி (நிலை).
த்வைதம் போய் அத்வைதம் வந்துவிட்டது! மற்ற பொருட்களை நியமனம் செய்வது என்ற நிலை த்வைதமாக இருந்தது. இந்த நிலை மீதும் பற்றின்மை - வைராக்கியம் வர (பர வைராக்கியம்) ப்ராந்தி ஸம்ஸ்காரம் என்னும் மாயை முற்றும் விலகுகிறது.

Friday, February 11, 2011

விவேக க்யாதியின் அவாந்தர ஸித்திகள்:



सत्त्वपुरुषान्यताख्यातिमात्रस्य सर्वभावाधिष्ठातृत्वं सर्वज्ञातृत्वं च ।।49।।

ஸத்த்வபுருஷாந்யதாக்²யாதிமாத்ரஸ்ய ஸர்வபா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° ஸர்வஜ்ஞாத்ரு«த்வம்° ச || 49||

ஸத்த்வ புருஷ = ப்ரக்ருதி, புருஷன் இவர்களின்; அந்யதா க்²யாதி மாத்ரஸ்ய = பேதத்தை குறித்த ஞான ஆவ்ருத்தியில் [அறிவுத்தேடலில்] மட்டும் (முயற்சியுள்ள யோகிக்கு); ஸர்வ பா⁴வாதி⁴ஷ்டா²த்ரு«த்வம்° = ஸர்வ பாவாதிஷ்டாத்ருதம் என்னும் எல்லா விதமான பொருட்களையும் நியமனம் செய்யும் ஆற்றலும் ; ஸர்வ ஜ்ஞாத்ரு«த்வம்° ச =எல்லா முக்காலங்களிலும் உள்ள வஸ்துகள் குறித்து ஞானமும் (உண்டாகின்றன)

ஸம்யமத்தால் சித்தத்தில் ரஜஸ், தமஸ் ஆகியவற்றை நீக்கிக்கொண்ட யோகி மேலான சித்த சுத்தியை அடைந்தவன். அதனால் வசீகார ஸம்க்ஞை என்ற பர வைராக்கியத்தை அடைந்தவன். இந்த யோகி ப்ரக்ருதி - புருஷ பேத ஞானத்தை மட்டில் பெருக்கிக்கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் யோகி ஈஶ்வரனைபோல சகல விதமான வஸ்துக்களையும் நியமனம் செய்யும் ஆற்றல் படைத்தவனாவான். முக்காலங்களிலும் உள்ள வஸ்துக்களின் விசேஷ ஞானத்தையும் பெறுகிறான். இந்த ஸித்திக்கு விசோகா என்று பெயர்.

Thursday, February 10, 2011

மனோ வேகம்...



ततो मनोजवित्वं विकरणभावः प्रधानजयश्च ।।48।।
ததோ மநோஜவித்வம்° விகரணபா⁴வ​: ப்ரதா⁴நஜயஶ்ச || 48||

தத: = அதனால்; மநோ ஜவித்வம்° = (உடலுக்கு) மனதைப்போல உடலுக்கு அதி வேக கதியும்; விகரணபா⁴வ​: = (ஸ்தூல சரீரத்தின் உதவி இன்றியே இந்திரியங்களுக்கு) தேச கால சம்பந்தமுள்ள வஸ்துக்களில் வ்ருத்தி லாபமும், ப்ரதா⁴நஜயஶ்ச = (தன்னிச்சையை அனுசரித்து) ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் (உண்டாகிறது)

இந்திரியங்களில் ஸம்யமம் செய்து இந்திரிய ஜயம் பெற்றது போல மனதில் ஸம்யமம் செய்து சரீரத்துக்கு அதன் வேகத்தை பெறலாம். தூர தேசம்; இறந்த, எதிர்காலங்களில் இருக்கும் விஷயங்கள்; சூக்ஷ்மமான விஷயங்கள் இவற்றில் இந்திரியங்களின் விருத்தி லாபத்தை (ஒன்றைப்பற்றிய அறிவுதானே இது?) பெறலாம். தன்னிச்சையை அனுசரித்து ப்ரக்ருதியில் மாறுதலை உண்டாக்கும் திறனும் உண்டாகிறது. இந்த மூன்று சித்திகளும் மதுப்ரதீகா எனப்பெயர் பெறும்.

இது வரை ஸம்யமத்தால் உண்டாகிறதும், நேரடியாகவோ சிரத்தையை உண்டு பண்னுகிறதாகவோ விவேகக்யாதிக்கு சாதனமாக இருக்கிற ஞானம், க்ரியை இவை ரூபமான ஸித்திகள் சொல்லப்பட்டன.

Friday, February 4, 2011

காய ஸம்பத்து, இந்திரிய ஜயத்துக்கான உபாயம்:



Patanjali yoga sutra
 रूपलावण्यबलवज्रसंहननत्वानि कायसंपत् ।।46।।

ரூபலாவண்யப³லவஜ்ரஸம்°ஹநநத்வாநி காயஸம்°பத் || 46||

ரூப = கண்ணுக்கு பிடித்த வடிவமும்; லாவண்ய = அழகும்; ப³ல வீர்யமும்; வஜ்ர ஸம்°ஹநநத்வாநி = வஜ்ரம் போல கெட்டியான அவயங்களின் சேர்க்கையுமே; காய ஸம்°பத் =காய சம்பத் என்ற சித்தி.

 ग्रहणस्वरूपास्मितान्वयार्थवत्त्वसंयमादिन्द्रिजयः ।।47।।

க்³ரஹணஸ்வரூபாஸ்மிதாந்வயார்த²வத்த்வஸம்°யமாதி³ந்த்³ரிஜய​: || 47||

க்³ரஹண = சப்தம் முதலானவற்றில் இந்திரியங்களுக்கு உண்டாகும் விருத்தி; ஸ்வரூப = 11 வித இந்திரியங்கள்; அஸ்மிதா = இந்திரியங்களின் காரணங்கள்; அந்வய = சத்வம் முதலிய குணங்கள்; அர்த²வத்த்வ = சுக துக்க ரூபமாக இருக்கும் புருஷார்த்தத்தில்; ஸம்°யமாத்³ =ஸம்யமம் செய்ய; இந்த்³ரிய ஜய​: = இந்திரியங்களின் ஜயம் உண்டாகிறது.
இந்திரியங்களின் சொரூபம் ஐந்து.
1. சாமான்ய,விசேஷ ரூபமான சப்தம் முதலியன. இதில் உண்டாகும் இந்திரிய விருத்தியே க்ரஹணம். அதாவது அந்தந்த விஷய வடிவங்களாகவே மாறுதல்.
2. மேற்கண்டதுடன் ஸத்வ ப்ரதானமான அஹங்காரத்திலிருந்து உண்டாகியிருத்தல் என்பதும் சேர்த்து அதன் சொரூபம்.
3. இந்திரியத்தின் மூலமான சாத்விக அகங்காரம் மூன்றாவதான அஸ்மிதையாகும்.
4. கார்யமான இந்திரியங்களில் இருக்கும் ஸத்வம் முதலான குணங்கள் அந்வயம்.
5. இந்திரியங்களில் இருக்கும் சுக துக்கங்கள் அர்த்தவத்வம்.

 இவற்றில் ஸம்யமம் செய்ய இந்திரிய ஜயம் உண்டாகிறது.

Thursday, February 3, 2011

பஞ்ச பூதங்கள் மீது யோகியின் வல்லமை:



Patanjali yoga sutra

ततोऽणिमादिप्रादुर्भावः कायसंपत्तद्धर्मानभिघातश्च ।।45।।

ததோ'ணிமாதி³ப்ராது³ர்பா⁴வ​: காயஸம்°பத்தத்³த⁴ர்மாநபி⁴கா⁴தஶ்ச || 45||

தத: = அதனால் (பூத ஜயத்தால்); அணிமாதி³= அணிமா முதலான; ப்ராது³ர் பா⁴வ​: =சித்திகள் கிடைப்பதும்; காய ஸம்°பத் = சரீர சம்பத்தும்; தத்³ த⁴ர்மாந் = அவற்றின் தர்மங்களால்; அபி⁴கா⁴தஶ்ச = பாதிக்கப்படாமையும்;(கிடைக்கின்றன).
அணிமா முதலான சித்திகள்:
அணிமா: அணு அளவான சரீரத்தில் இருத்தல்.
மஹிமா: ஒரு யோசனை, இரண்டு யோசனை, பர்வதம் போல் வியாபித்து இருத்தல்.
க4ரிமா: மிகவும் பளுவாக இருத்தல்.
லஹிமா: பஞ்சு போல் கனமில்லாதிருத்தல்.
ப்ராப்தி: இருந்த இடத்தில் இருந்து எதையும் அடையும் தன்மை. பூமியில் இருந்து கொண்டு சந்திரனை தொடுவது போல.
ப்ராகாம்யம்: கேள்வி ஞானம் உள்ளதிலோ நேரடியாக கண்டதிலோ தன் இச்சைக்கு தடை ஏற்படாமை. நீரில் முழுகுவது போல மண்ணில் மூழ்குவது.
ஈஶித்வம்: நம் உடலை நாம் விரும்புவது போல நகர்த்த அசைக்க முடிகிறதல்லவா? அது போல சகல பௌதிக விஷயங்களையும் தன் விருப்பப்படி அசைக்க முடிகிற தன்மை.
வஶித்வம்: பூத பௌதிக குணங்களை தன் இச்சைப்படி மாற்றுதல். விஷத்தையும் அமிர்தமாக பாவித்து கொடுக்க அது அமிர்தமாகும்.
இவையே எட்டு வித சித்திகள்.
இப்படி சத்திய சங்கல்ப சித்திகள் இருந்தாலும் ஈஶ்வர சங்கல்பத்துக்கு மாறாக செயல் பட முடியாது என்கிறார் நாகோஜி பட்டர். சந்திரனை சூரியனாக்க முடியாது; சூரியனை சந்திரனாக்க முடியாது. ஈஶ்வர சங்கல்பத்துக்கு விரோதமாக செயல் பட முனைந்தால் சித்திகளில் இருந்து நழுவி விடுவான்.
இந்த சித்திகளை பெற்றவர் பஞ்ச பூதங்களின் விரோத தர்மங்களால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். அக்னியால் எரிக்கப்படாமல், காற்றினால் அசைக்கப்படாமல், மறைப்பில்லாத ஆகாயத்திலும் மறைதல், கல்லுக்குள்ளும் நுழைதல், எவ்வளவு காலமும் நீரில் வசித்தல் ... இப்படி பலதையும் செய்ய இயலும்.

Wednesday, February 2, 2011

க்ராஹ்ய ஸம்யமத்தால் உண்டாகும் சித்தி:



Patanjali yoga sutra:

स्थूलस्वरूपसूक्ष्मान्वयार्थवत्त्वसंयामाद् भूतजयः ।।44।।

ஸ்தூ²லஸ்வரூபஸூக்ஷ்மாந்வயார்த²வத்த்வஸம்°யாமாத்³ பூ⁴தஜய​: || 44||

ஸ்தூ²ல ஸ்வரூப ஸூக்ஷ்ம அந்வய அர்த²வத்த்வம் = ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகிய பஞ்ச பூத சொரூபங்களில்; ஸம்°யாமாத்³ = ஸம்யமம் செய்ய; பூ⁴த ஜய​: பஞ்ச பூதங்களை ஜெயிக்க முடிகிறது.

ஸ்தூலம், ஸ்வரூபம், ஸூக்ஷ்மம், அந்வயம், அர்த²வத்த்வம் ஆகியன பஞ்ச பூதங்களின் ஐந்து சொரூபங்கள்.
விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடிய பகுக்க முடியாத விஷயம் ஸ்தூலமாகும். விசேஷங்கள் யாவை?
ஏழு ஸ்வரங்கள்; குளிர்ச்சி- சூடு போன்ற ஸ்பர்சங்கள்; கருப்பு, சிவப்பு முதலான நிறங்கள்; இனிப்பு, கசப்பு முதலான சுவைகள்; நல்ல வாசனை, 'நாற்றம்' முதலான வாசனைகள்; இவை அனைத்தும் பெயர், சொரூபம், காரியம் ஆகியவற்றால் ஒன்றில் இருந்து ஒன்று வேறுபட்டவை. ஆகையால் இவை விசேஷங்கள் எனப்படும். இவற்றில் ஐந்தும் நிலத்தில் உள்ளன. கந்தம் எனும் ரசத்தை தவிர்த்த அனைத்தும் ஜலத்தில் உள்ளன. கந்தம் ரசம் தவிர்த்த அனைத்தும் நெருப்பிலும், கந்தம் ரசம் ரூபம் தவிர்த்த அனைத்தும் வாயுவில் உள்ளன. ஆகாயத்தில் சப்தம் மட்டும் உள்ளது.
இப்படிப்பட்ட விசேஷங்களும் ஆகாரம் முதலிய தர்மங்களும் கூடியவை ஸ்தூலமாகும்.
இந்த பஞ்ச பூதங்களின் விசேஷங்களும் தர்மங்களும் விரிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன. அவை இங்கு நமக்கு தேவையில்லை.
பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகள் ஸூக்ஷ்மமாகும். இதன் பரிமாணம் (மாறிய வடிவமே) பரமாணு.
சத்வ ரஜஸ் தமஸ் குணங்கள் சேர்ந்த ப்ரக்ருதி என்பது பஞ்ச பூதங்களின் 'பிரிக்க முடியாத' அந்வய ரூபம். எல்லா காரியங்களிலும் இந்த குணங்கள் பிரிக்க முடியாமல் சேர்ந்திருப்பதால் இந்த பெயர்.
பஞ்ச பூதங்களில் சுக துக்க ரூபமான புருஷார்த்தம் அர்த்தவத்வம் ஆகும்.
பஞ்சபூதங்களின் இந்த ஐந்து வித ரூபங்களிலும் ஸம்யமம் செய்யும் யோகிக்கு பஞ்ச பூதங்கள் மீது ஆளுமை ஏற்படுகிறது. அவை அவன் சங்கல்பப்படி நடந்துகொள்கின்றன.

Tuesday, February 1, 2011

கூடு விட்டு கூடு பாய்தல்:



Patanjali yoga sutra

  
  बहिरकल्पिता वृत्तिर्महाविददेहा ततः प्रकाशावरणक्षयः ।।43।।

ப³ஹிரகல்பிதா வ்ரு«த்திர்மஹாவித³தே³ஹா தத​: ப்ரகாஶாவரணக்ஷய​: || 43||

ப³ஹிர் =சரீரத்துக்கு வெளியே ஏற்பட்ட; அகல்பிதா = மனத்தின் அகல்பிதை என்ற; வ்ரு«த்திர் =விருத்தி; மஹா வித³ தே³ஹா = மஹாவிததேஹா என்னும்; தத​: =சித்தியால்; ப்ரகாஶ ஆவரண = புத்தி சத்வத்தின் பிரகாசத்தை மறைக்கும் கிலேசம், கர்மம், ஆசயம் இவற்றின்; க்ஷய​: = தேய்தல் (அழிவு) (உண்டாகிறது).

தாரணை போது உடலின் வெளியே மனோ விருத்தி ஏற்படுதல் விதேஹ தாரணை ஆகும். இந்த நிலையில் மனதிற்கு உடலின் சம்பந்தம் ஏற்படுமானால் அது கல்பிதா எனப்படும். அதாவது சரீரத்தில் நான் என்ற எண்ணம் இருக்கும்போதுதான் இது ஏற்படும். அப்போதுதான் வெளி வஸ்துகளில் வ்ருத்தி ஏற்படட்டும் என்ற சங்கல்பமும் உண்டாகும்.

சரீரத்தில் நான் என்ற புத்தி விலகின போதும் கூட மனதிற்கு வெளியே வ்ருத்தி ஏற்படுகிறது. இது சரீர சம்பந்தம் இல்லாமலும் சங்கல்பம் இல்லாமலும் நடக்கும். இது அகல்பிதா அல்லது மஹாவிததேஹா எனப்படும். இந்த சித்தியடைந்த யோகிகள் பராகாசத்துக்குள் நுழைவர்.
மேலும் சத்வ புத்தி ப்ரகாச ஸ்வபாவம் உள்ளது. இதை தமஸும், ரஜஸும் ஆன கிலேசம், கர்மம், ஆசயம் ஆகியன மறைகின்றன. (பாதம் 1 சூத்திரம் 24). மஹாவிதேஹா கிடைத்தவருக்கு இது தேய்ந்து ஸர்வஜ்ஞானம் இருக்கும் தன்மை ஏற்படும்.