Pages

Thursday, January 20, 2011

சித்தம் நிலை பெற உபாயம், சித்த புருஷர்களை காண:



कूर्मनाड्यां स्थैर्यम् ।।31।।

கூர்மநாட்³யாம்° ஸ்தை²ர்யம் || 31||

ஆமை போன்றது நெஞ்சுக்குழிக்கு (கண்டகூபத்துக்கு) கீழ் உள்ள நாடி. அதில் ஸம்யமம் செய்ய மனம் வெளியே சஞ்சரிக்காது. ஆமை உடலை உள்ளிழுத்துக்கொள்வது போல் மனம் உள்ளிழுக்கப்படும்.

  मूर्धज्योतिषि सिद्धदर्शनम् ।।32।।

மூர்த⁴ஜ்யோதிஷி ஸித்³த⁴த³ர்ஶநம் || 32||

மூர்த⁴ ஜ்யோதிஷி = உச்சந்தலையில் (பிரம்ம ரந்திரத்தில்) [ஸம்யமம் செய்ய]; ஸித்³த⁴ த³ர்ஶநம் = சித்த புருஷர்களின் தரிசனம் கிடைக்கிறது.

No comments: