Pages

Friday, January 14, 2011

யானை பலம் பெறுதல், தூர திருஷ்டி:



बलेषु हस्तिबलादीनि ।।24।।

ப³லேஷு ஹஸ்திப³லாதீ³நி || 24||

ப³லேஷு = (யானை, கருடன், வாயு ஆகியோரின்) பலத்தில் ஸம்யமம் செய்ய; ஹஸ்தி ப³லாதீ³நி = அவற்றின் பலம் கிடைக்கும். இயற்கையிலேயே சித்தம் மிக்க பலம் வாய்ந்தது. ஸம்யமம் சேர்ந்தால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை.

  प्रवृत्त्यलोकन्यासात्सूक्ष्मव्यवहितविप्रकृष्टज्ञानम् ।।25।।

ப்ரவ்ரு«த்த்யலோகந்யாஸாத்ஸூக்ஷ்மவ்யவஹிதவிப்ரக்ரு«ஷ்டஜ்ஞாநம் || 25||

ப்ரவ்ரு«த்த்ய லோக ந்யாஸாத் = (பாதம் 1 சூத்திரம் 36) ஜ்யோதிஷ்மதீ ப்ரவ்ருத்தியில் ஜ்யோதிசில் ஸம்யமம் செய்யின்; ஸூக்ஷ்ம வ்யவஹித = ஸுக்ஷ்மமாக உள்ளவற்றில்; விப்ர க்ரு«ஷ்ட ஜ்ஞாநம் = அறிவு உண்டாகிறது.
வெகு நுண்ணிய பரமாணு, வெகு தூரத்தில் உள்ள மஹாமேரு, வெகு ஆழத்தில் உள்ள புதையல்கள் இவற்றின் தெளிந்த அறிவு உண்டாகிறது.

No comments: