Pages

Friday, November 12, 2010

இடையூறுகள் மேலும்...




वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहपूर्वका मृदुमध्याधिमात्रा   दुःखाज्ञानन्तफला इति प्रतिपक्षभावनम् ।।34।।
விதர்கா ஹிம்°ஸாத³ய​: க்ரு«தகாரிதாநுமோதி³தா லோப⁴க்ரோத⁴மோஹபூர்வகா ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா து³​:கா²ஜ்ஞாநந்தப²லா இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் || 34||

விதர்கா = இடையூறுகள்; ஹிம்°ஸாத³ய​: = ஹிம்சை முதலானவை; க்ரு«த = தன்னால் செய்யப்பட்டவை; காரித = பிறரால் செய்யப்பட்டவை; அனு மோதி³தா = ஒருவனுக்கு நிகழ்ந்த ஹிம்சையை நல்ல வேளையாக நடந்தது என மகிழ்ச்சியுடன் எண்ணுவதுமாகும்; லோப⁴ க்ரோத⁴ மோஹ பூர்வகா= லோபம், க்ரோதம், மோஹம் இவற்றை காரணமாகக் கொண்டவை; ம்ரு«து³மத்⁴யாதி⁴மாத்ரா = மெதுவாகவும், நடு நிலையாகவும், அதிகமானதாவும்; து:க அஜ்ஞாநந்த பலா = (நரகம் முதலான) துக்கத்தையும், அக்ஞானத்தையும், முடிவில்லாத பிராந்தி, சந்தேகம் முதலியவற்றை பயனாக கொண்டவையாகவும் ஆகின்றன; இதி ப்ரதிபக்ஷபா⁴வநம் = இப்படியாக விதர்க்க விரோதியை எண்ண வேண்டும்.

விதர்க்கங்கள் மும்மூன்று விதங்கள். இவை ஒவ்வொன்றும் மும்மூன்று விதங்கள். ஆக இவை 81 வகைகள்.
ஒருவன் தானே ஹிம்சை செய்யலாம். தூண்டிவிட்டு பிறரால் செய்யலாம். இல்லை தெய்வாதீனமாக நடந்த ஹிம்சை ஒன்றை எண்ணி "நல்லா வேணும்" என்று சந்தோஷப்படுவதாக இருக்கலாம். (க்ருதம், காரிதம், அனுமோதிதம் என்ற ஹிம்சைகள். )

இப்படி செய்கிற ஹிம்சைகள் மனம், சொல், உடலால் இருக்கலாம்.

இப்படி தானே செய்கிற ஹிம்சைக்கு தூண்டுதல் ஆசையாக இருக்கலாம் (அதன் பெயர் லோபம்). தனக்கு தீங்கிழைத்தவன் மீதுள்ள கோபத்தால் செய்வது குரோதம். ஹிம்சை செய்வதால் தனக்கோ மற்றவர்களுக்கோ லாபம் ஏற்படும் என நினைத்து செய்தல் மோஹம். இப்படி லோபம், குரோதம், மோஹம் என்று மூன்று காரணங்கள் இருக்கலாம். இது போன்றவை வேகாரிதம் ஆகும். இப்படி இதே போல பிறர் மூலம் தூண்டிவிட்டு செய்வது, நடந்ததை எண்ணி மகிழ்வது இவற்றிலும் மும்மூன்றாக மொத்தம் 9 விதம்.

இவை தீவிரத்தை பொறுத்து மிதம், மத்தியமம், அதி மாத்ரம் என மூன்றாகும். இவை ஒவ்வொன்றும் மீண்டும் மெதுவில் மெது, மெதுவில் மத்தியமம் என்பது போல மும்மூன்று விதமாகும். ஆக மொத்தம் 81. இப்படியாக ஹிம்சைகள் வரும்போது அவற்றை விரோதியாக பாவித்து பிரதி பக்ஷ பாவனம் செய்ய வேண்டும்.

இப்படியான ஹிம்சையை செய்ய நரகம் முதலான துக்கமும், பசு போன்ற பிறவி எடுத்து அக்ஞானமும், அல்லது இதே பிறவியில் அறிவு மயக்கம், சம்சயம் முதலானவையும் உண்டாகும் என எண்ணுபவனுக்கு இந்த தடைகள் விலகி விடுகின்றன. இவ்விதமாகவே அஸத்யம், ஸ்தேயம், அப்பிருமச்சரியம், பரிக்கிரஹம், அசௌசம், அஸந்தோஷம், அதபஸ், அஸ்வாத்யாயம், ஈச்வர பிரணிதானம் செய்யாமை ஆகியனவும் தனித்தனியாக 81 வித தடைகளாக ஆகும். இப்படி நேரும் போதெல்லாம் அவற்றின் விளைவை -துக்கம் அக்ஞானம், முடிவற்ற துன்பம் ஆகியனவற்றை -எண்ணிப்பார்ப்பவன் இந்த தடைகளில் இருந்து தப்பிக்க ப்ரதிபக்ஷ பாவனம் செய்கிறான்.

இப்படி தடைகளை தாண்டி இடையூறு ஏதுமின்றி யோகாங்க அனுஷ்டான சாதனை செய்வோருக்கு ஸித்திகள் ஏற்படுகின்றன.

3 comments:

Unknown said...

அருமையான விளக்கம்

திவாண்ணா said...

வாங்க ஜெய்சங்கர், நன்றி. ரொம்ப நாளாச்சு பாத்து, நலமா?

Geetha Sambasivam said...

இடையூறுகள் மேலும் மேலும் வருகின்றன. :D எல்லாமும் தீரட்டும். மத்ததையும் படிச்சுட்டு வரேன். :))))))))