Pages

Tuesday, November 2, 2010

ப்ரக்ஞைக்கான சாதனங்கள்:



योगाङ्गनुष्ठानादशुद्धिक्षये ज्ञानदीप्तिराविवेकख्यातेः ।।28।।

யோகா³ங்க³நுஷ்டா²நாத³ஶுத்³தி⁴க்ஷயே ஜ்ஞாநதீ³ப்திராவிவேகக்²யாதே​: || 28||

யோகா³ங்க³= யோக அங்கமான (யமம் முதலான எட்டையும்); அநுஷ்டா²நாத்³ = பழகுவதால்; அ³ஶுத்³தி⁴ = (அவித்யா, அஸ்மிதா, ராகம், த்வேஷம், அபிநிவேஷம், புண்ணியம், பாபம் ஆகிய) அசுத்திகளின்; க்ஷயே = தேய்தல்; ஆவிவேக க்²யாதே​: = விவேக க்யாதி உண்டாகும் வரையுள்ள ; ஜ்ஞாந தீ³ப்தி = ஸம்ய ஞானத்தின் ஒளியானது (உண்டாகிறது.)
யமம், நியமம் முதலான சாதனங்களை எவ்வளவுக்கெவ்வளவு அநுஷ்டிக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவித்யை முதலான அசுத்திகள் தேய்கின்றன. இதனால் ஞானத்தின் பிரகாசமும் அவ்வளவு அதிகமாகிறது. விவேகக்யாதி உண்டாகும் வரை இது பெருகிக்கொண்டே போகிறது. (சத்வம் முதலான குணங்கள் புருஷன் இவற்றின் ஸ்வரூபத்தை இன்னதென்று அறிதலே விவேகக்யாதி)
கோடரி மரத்தை சிதைப்பது போல தர்ம அனுஷ்டானம் அஞ்ஞானத்தை சிதைக்கிறது.
வேறு காரணமின்றி தர்மமே சுகம் உண்டாக காரணமாம்.
---
அடுத்து வருவதை படிக்க வேண்டும் புரிந்து கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை.

PG: இப்படிப்பட்ட தர்ம வ்ருத்திக்கு காரணங்களை பட்டியலிடலாம்: உத்பத்தி; ஸ்திதி; அபிவ்யக்தி; விகாரம்; ப்ரத்யயம்; ஆப்தி; வியோகம்; அன்யத்வம்; த்ருதி.
உத்பத்தி காரணம்: விக்ஞானத்தில் இன்னது என்று பகுத்து அறிய முடியாத நிலையை போக்கி நிகழ் கால இருப்பை உண்டு பண்ணுவதால் மனதே விஞ்ஞானத்தின் உத்பத்திக்கு காரணம்.
ஸ்திதி காரணம்: உடம்பின் ஸ்திதிக்கு ஆகாரம் காரணமாகும். அதே போல மனதின் ஸ்திதிக்கு புருஷார்த்தம் காரணம். அஹம் தத்துவத்தில் இருந்து மனது வந்தது. எந்த புருஷார்த்தத்தையும் கருதாத வரை மனது நிலையாக இருக்கும். அர்த்த காமத்தை கருதும் போது அது நிலையில் இருந்து நழுவிவிடும். நிலையாக இருப்பது மனசுக்கு இன்றியமையாதது.
அபிவ்யக்தி காரணம்: தானாகவோ இந்திரியங்கள் மூலமோ கருப்பு வெளுப்பு போல ரூபங்களின் பேதத்தை கண்டு கொள்வது அபிவ்யக்தி ஆகும். அரிசி முதலாவை அன்னமாக விகாரமடைய அக்னி காரணமானது போல் சப்தம் முதலானவை மனதின் விகாரத்துக்கு காரணமாகும்.
விகார காரணம்: கண்டு என்ற முனிவருடைய தவத்தை கலைக்க ப்ரம்லோசா என்ற அப்சரஸ் அனுப்பப்பட்டாள். அவள் அவருக்கு சமீபத்தில் வல்லகீ என்ற தன் வீணையில் இசை எழுப்ப முனிவரின் மனது இந்திரியங்களின் வழியே சென்று விகாரமடைந்தது.
ப்ரத்யய காரணம்: புகையை காணும்போது அக்னி உள்ளதென தெரிகிறது. அக்னியின் ஞானத்துக்கு புகை பற்றிய அறிவு காரணமாகிறது. இதுவே ப்ரத்யய காரணம்.
ஆப்தி காரணம்: கிடைப்பது. ப்ர சேர்த்து ப்ராப்தி என்பர். யோகாங்கங்களை அனுஷ்டிப்பது விவேகக்யாதி கிடைப்பதற்கு (ப்ராப்திக்கு) காரணம். அதுவே அசுத்திக்களை போக்குவதால் அசுத்திகளின் வியோகத்துக்கும் கூட (அழிதல்) காரணம் ஆகும்.
அன்யத்வம்: வேறாக ஆக்குதல். ஒரு தங்க நகையை தட்டான் அழித்து வேறு நகையாக்கும்போது அது அன்யத்வம் ஆகும்.
த்ருதி காரணம்: இந்திரியங்கள் நிலைத்து நிற்க சரீரம் காரணமாகிறது.
இந்த 9 வித காரணங்களில் யோகானுஷ்டானம் அசுத்தி வியோகத்திற்கும் ஞான ப்ராப்திக்கும் காரணமாகிறது.
--
இங்கே யோகாங்கங்கள் என்று ஆரம்பித்தாரே அவை என்னென்ன?

No comments: