Pages

Monday, November 1, 2010

விவேக க்யாதி:



तस्य सप्तधा प्रान्तप्रान्तभूमिःप्रज्ञा ।।27।।

தஸ்ய ஸப்ததா⁴ ப்ராந்தபூ⁴மி​: ப்ரஜ்ஞா || 27||

தஸ்ய = விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு; ஸப்ததா⁴ = ஏழு விதமான; ப்ராந்தபூ⁴மி​: = இருப்புக்களை உடைய நிலைகள்; ப்ரஜ்ஞா= அறிவானது.
விவேக க்யாதியை அடைந்த யோகிக்கு அறிவானது ஏழு விதமான இருப்புக்களை உடைய நிலைகள் ஆக ஆகிறது.
சர்வ சாதாரணமாக பிரக்ஞையுடன் இருக்கிறோம் என்கிறோம். அதாவது அறிவு செயல்பட்டு கொண்டிருக்கிறது. வாசனையால் தடை செய்யப்படாத நிலைத்த விவேகக்யாதி உண்டானதும் ஆத்ம ஸ்வரூபத்தைத்தவிர வேறு தோற்றம் எதுமில்லாமல் அவித்யை விலகிவிட்ட யோகிக்கும் கூட இது செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதில் ஏழு விதம் இருக்கிறது.
இதில் காரியத்தை விடும் பிரக்ஞைகள் நான்கு. சித்தத்தை விடும் பிரக்ஞைகள் மூன்று.

காரியத்தை விடும் பிரக்ஞைகள்: அறிய வேண்டும் என்ற இச்சை (ஜிக்ஞாஸா), விலக்க வேண்டும் என்ற விருப்பம் (ஜிஹாஸா), புதிதாக ஒன்றை அடைய வேண்டும் என்ற விருப்பம் (ப்ரேப்ஸா), புதிதாக ஒன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம் (சிகீர்ஷா) .
யோகிக்கு உண்டாகும் அறிவு அறிய வேண்டும் என்ற இச்சையை போக்கிவிடும். புதிதாக எதையும் அவன் அறிய வேண்டியது இல்லை.
விலக்க வேண்டும் என்ற விருப்பம் நீங்கும். எல்லாவற்றையும் விலக்கிவிட்ட பின் விலக்க ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
கைவல்ய நிலை அடைந்தபின் வேண்டியன எல்லாம் அடையப்பட்டுவிட்டதால் அடைய வேண்டுவதும் வேறு ஒன்றுமில்லை என்பது புரிகிறது.
விவேக க்யாதியை சம்பாதித்து கொண்டுவிட்டதால் செய்வன எல்லாம் செய்தாகிவிட்டது; செய்ய வேண்டுவதாக புதிதாக ஒன்றுமில்லை. இது நான்காவது பிரக்ஞை.

காரியங்களை விட்டா போதுமா? மனசால செய்கிறவற்றையும் விட வேண்டும் இல்லையா?

சித்தத்தை விடும் பிரக்ஞைகள்: "என் புத்தி ஸத்வமானது; அது செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது" என சித்தத்தை விடுதல் முதலாவது.
மலை உச்சியிலிருந்து நழுவும் கற்பாறைகளுக்கு பிடிப்பு இல்லாமல் போவது போல புத்தி முதலிய குணங்களுக்கும் காரணத்தில் லயமாவதால் நாசமடைகின்றன. அவற்றால் பயன் ஏதும் இல்லை. ஆகையால் அவை மீண்டும் உத்பத்தி ஆக மாட்டா. இது இரண்டாம் ப்ரக்ஞை.
யோகி குணங்களை கடந்து சொரூபத்தில் மட்டில் இருக்கிறான். சித்துடன் ஒரே ரஸமாக ஆகிறான். இது சித்தத்தை விடும் மூன்றாம் ப்ரக்ஞை.
இந்த மூன்றாம் ப்ரக்ஞை உண்டாக சாதனங்கள் என்ன?.....


No comments: