Pages

Tuesday, October 12, 2010

ஹேயம்:



हेयं दुःखमनागतम् ।।16।।
ஹேயம்° து³​:க²மநாக³தம் || 16||

அனாகதம் துக்கம் ஹேயம்.
வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
துக்கம் எது என்று பார்த்தோம். அதை உண்டாக்குவது எது, வரப்போகிற துக்கத்துக்கு காரணம் என்ன? அதை நீக்குவது எபப்டி என்றும் பார்க்கப்போகிறோம்.
துக்கத்தில் மூன்று வகை. முன்பே பார்த்தது போல கடந்தது அதீதம். நிகழ்வது வர்த்தமானம். வரப்போகிறது அனாகதம்.
அனுபவிக்கப்பட்ட துக்கம் முடிந்து போனது; அது பிரச்சினை இல்லை. நிகழ்வது அதற்கான நீக்கும் உபாயம் அறிந்து நீக்கினால் போய்விடும்; அறிவதற்கு முன்னே கூட நடந்து முடிந்துவிடலாம். எனவே வரப்போகும் துக்கத்தை நீக்குவதைப்பற்றிதான் சாதகன் யோசிக்க வேண்டும்; அதுவே முக்கியம். வரப்போகின்ற துக்கமானது ஸம்ஸாரம் எனப்படும்.
இந்த ஸம்ஸாரத்துக்கு காரணம் என்ன?

No comments: