Pages

Monday, October 4, 2010

க்லேசத்தை போக்க:



ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ।।10।।

க்லேசத்தை போக்க:
தே ப்ரதி ப்ரஸவஹேயா​: ஸூக்ஷ்மா​: || 10||

அந்த ஸூக்ஷ்மமான க்லேசங்கள் தனது காரணத்தில் லயம் செய்வித்தால் போக்கத்தக்கவை.

சித்தத்தை அஸ்மிதையில் லயம் செய்ய ஸூக்ஷ்ம நிலையிலுள்ள க்லேசங்கள் விலகிவிடும். பலனைத் தரக்கூடிய க்லேசங்கள் கிரியாயோக அனுஷ்டானத்தாலும் மைத்ரீ போன்ற சித்த பரிகர்மத்தாலும் விலகும் என்று முன்னமேயே சொல்லிவிட்டார்.

இப்போது மீண்டும் ஏன் இந்த பேச்சு வந்தது?

மண்ணெண்னையை ஊற்றி வைத்த பாத்திரத்தில் அதை உடனே காலி செய்தாலும் அதன் வாசனை விடாது. அதை நெருப்பில் இட்டால்தான் வாசனையும் போகும். அது போல க்லேசங்கள் ஸ்தூலமாக இருந்து அவற்றை நீக்கிக்கொண்டாலும் அவை இன்னும் ஸூக்ஷ்மமாக இருக்கும். அவையும் விலக சித்தத்தை அதன் காரணமான அஸ்மிதையில் லயப்படுத்த வேண்டும்.
அஸ்மிதை அவித்தைதான். ஆனாலும் அதில் ஒரே அவித்தை புருஷனுக்கும் புருஷ நிழலுக்கும் உள்ள வேற்றுமையை அறியாமையே. இந்த நிலையில் இந்திரியங்கள் முதலானவை கட்டுப்பட்டாகிவிட்டது. ஆகவே சித்தம் இந்த நிலைக்கு செல்ல சூக்ஷ்ம க்லேசங்கள் விலகிவிடும்.

1 comment:

R.DEVARAJAN said...

ரொம்பச் சுருக்கமான விளக்கம்; பிடிபடவில்லை. நேரமிருக்கும்போது கொஞ்சம் விரிவா சொல்லணும்


தேவ்