Pages

Monday, September 20, 2010

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி



तस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः ।।51।।

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி:

தஸ்யாபி நிரோதே⁴ ஸர்வநிரோதா⁴ந்நிர்பீ³ஜ: ஸமாதி⁴: || 51|| 

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் சம்ஸ்காரத்தினுடையதும் அதன் பிரக்ஞையின் உடையுதுமான நிரோதம் (தடை) உண்டான போது, எல்லாம் தடை செய்யப்பட்டதால் தன்னிலை மாறுவதற்கு ஏதுமில்லாத அஸம்ப்ரக்ஞாத ஸமாதி உண்டாகிறது.

யோக சாஸ்திரம் கேட்டலும், பொருளை மனனம் செய்வதும், புருஷனை மட்டும் த்யானம் செய்யும் பழக்கமான தர்மமேக ஸமாதியை உண்டாக்கும். பின் பர வைராக்கியம் என்ற பிரக்ஞையின் தெளிவு ஏற்பட்டு தர்மமேக ஸமாதியில் ருசி உண்டாகும். புருஷனை மட்டும் த்யானிக்க அதன் சாக்ஷாத்காரம் ஏற்படுகிறது; நிர் பீஜ யோகம் சித்திக்கிறது. [அதாவது சித்தம் முளை விடுவதில்லை.] இதுவே பழக, வேலையில்லாமல் சித்தம் அதன் காரணமான பிரக்ருதியில் ஒடுங்கிவிடும். செய்ய வேண்டிய காரியம் ஏதும் இருந்தால்தானே சித்தம் அதன் காரணத்தை விட்டு கிளம்பிப்போகும்? இப்படிப்பட்ட நிலை அடைந்த பின் செய்ய ஏதுமில்லை. யோகி புருஷனின் ஸ்வரூப மாத்திரத்தில் நிலை பெற்று முக்தனாகிறான்.

ஸமாதி பாதம் முடிந்தது.

No comments: