Pages

Tuesday, September 14, 2010

ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள்....



ता एव सबीजः समाधिः ।।46।।

தா ஏவ ஸபீ³ஜ​: ஸமாதி⁴​: || 46||

முன் சொன்ன அனைத்தும் பந்தத்திற்கு சாதனமான க்ராஹ்யத்தை (பற்றை) உடைய ஸமாதி ஆகும்.
அதாவது அது ஸமாதி ஆனாலும் ஒரு விஷயத்தை பற்றி நிற்கிறது.
ஸவிதர்க்கமும் நிர்விதர்க்கமும் பருப்பொருளை பற்றி நிற்கிறது. ஸவிசாரமும் நிர்விசாரமும் ஸூக்ஷ்ம பொருளை பற்றி இருக்கின்றன. இவை நான்காலும் மோக்ஷம் கிடைக்காது. இவை நான்கும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள் எனப்படும்.

41 – 45 சூத்திரங்களில் ஸமாதி வகைகள் விளக்கப்பட்டன. க்ரஹீத்ரு, க்ரஹணம். க்ராஹ்யம் – அதாவது பற்றுவோன், பற்று, பற்றப்பட்டது இவற்றை கொண்டு பிரிக்கப்பட்டது.

க்ராஹ்யத்தில் பற்றப்பட்டது ஸ்தூலமா இல்லை ஸூக்ஷ்மமா என்பதை வைத்து பிரிக்கப்பட்டது. ஸ்தூலத்தில் ஸவிதர்க்கம், நிர்விதர்க்கம் என இரண்டு வகை ஆயிற்று. ஸூக்ஷ்ம ஸமாதியில் ஸவிசாரம், நிர்விசாரம் என இரண்டு வகை ஆயிற்று. பற்றுதல், பற்றுவோன் என்பனவற்றை விஷயமாக கொண்டு சவிகல்பம், நிர்விகல்பம் என இரண்டு வகை ஆயிற்று.
மேலும் க்ரஹணத்தை மட்டும் கொண்ட ஸமாதியில் ஆனந்தத்துடன் – ஸானந்தம்; ஆநந்தம் மட்டும் (கேவல ஆநந்தம்) என இரண்டு வகை ஆயிற்று.

மூன்றாவதாக க்ரஹீத்ரு ஸமாதியில் அஸ்மிதை உடன் கூடியது, ஸாஸ்மிதை. அஸ்மிதை மட்டுமே கேவல அஸ்மிதை என இரண்டு வகை ஆயிற்று. சப்தம் ஆனது அர்த்தம், ஞானம் இவற்றுடன் கூடிய போது ஸவிகல்பம் என்றும், சப்தம் அர்த்தத்தை விட்டு ஞானத்துடன் மட்டும் கூடிய போது நிர்விகல்பம் என்றும் ஆயிற்று.

From samadi

No comments: