Pages

Tuesday, September 7, 2010

சாக்ஷாத்காரத்தின் ரூபங்கள்



क्षीणवृत्तेभिजातस्येव मणेग्रहीतृग्रहणग्राह्येषु तत्स्थतदञ्जनता समापत्तिः ।।41।।

க்ஷீண வ்ரு«த்தேபி⁴ ஜாதஸ்யேவ மணே க்³ரஹீத்ரு« க்³ரஹண க்³ராஹ்யேஷு தத் ஸ்த²த த³ஞ்ஜநதா ஸமாபத்தி​: || 41||

க்ஷீணமடைந்த (நலிவுற்ற) ராஜஸ, தாமஸ வ்ருத்திகளை உடைய சித்தத்திற்கு இயற்கையில் சுத்தமான மணி போன்ற கிரகிப்பவன் – ஆத்மா- விடத்திலும், கிரகிக்கும் சாதனமான இந்திரியங்களிடத்திலும், கிரகிக்கப்படும் விஷயங்களிடத்திலும் சாக்ஷாத்காரம் உண்டாகிறது.

இதை ஸமாபத்தி என்றும் சொல்வர்.

பச்சை புல்வெளியில் லயித்த சித்தத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இருந்தபோது ஒரு மாடு அதன் மீது ஓடியதால் அவர் அலறினார். அவர் முதுகில் குளம்புகளின் சுவடுகள் உண்டானதாக கதை. இது புல்வெளியுடன் ஏற்பட்ட ஏகாக்ரத்தையால் உண்டானது. இது கிரகிக்கப்பட்ட விஷயத்தில் உண்டானதால் கிராஹ்ய ஸமாதி.
இது போல இந்திரியங்கள் (10) மனஸ், புத்தி, அகங்காரம் என 13 வித அஹம் தத்துவங்களுடன் ஏகாக்ரம் (ஒன்றுதல்) ஏற்படலாம். விஷயத்தை கிரகிக்கும் சாதனத்தில் ஸமாதி என்பதால் இதை கிரஹண ஸமாதி என்பர்.
இதையும் தாண்டியது ஆன்மா. இதில் ஏற்படும் ஸமாதி கிரஹீத்ரு ஸமாதி ஆகும்.
சாக்ஷாத்காரம் இப்படிப்பட்ட ரூபங்கள் உள்ளது.


No comments: