Pages

Sunday, June 27, 2010

65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:



65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:



ரௌரவே()புண்ய நிலயே பத்3மார்பு33 நிவாஸினாம் |



அர்த்தி2நாம் உத3கம் த3த்தம் அக்ஷய்ய முபதிஷ்ட2து ||

பாபிகளுக்கு இருப்பிடமான ரௌரவ நரகத்தில் பல வருஷங்களாக ஜலத்தை யாசிக்கும் ஜீவர்களுக்கு இந்த ஜலம் அளவற்றதாக கிடைக்கட்டும். 
[உத்தர ஆபோசன மிகுதியை இலையை சுற்றி வலப்புறத்தில் விடுக.]



Saturday, June 26, 2010

64. இலையில் அன்னம் வைத்த உடன்...





64.  இலையில் அன்னம் வைத்த உடன்...

அன்னபூர்ணே ஸதா3பூர்ணே ங்கர ப்ராண வல்லபே3 |
ஜ்ஞான வைராக்3ய ஸித்4யர்த்த2ம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி ||

சிவனது ப்ராணன் போன்ற ஓ அன்ன பூர்ணி தேவிக்ஞானம்வைராக்யம் உண்டாகும்படி எனக்கும் பிக்ஷை அளி. (அன்னபூர்ணிதான் சிவனுக்கே பிக்ஷையிடுகிறாள்.)


Friday, June 25, 2010

63. சாப்பிட உட்கார்ந்து அன்னத்தை தரிசனம் செய்தவுடன்





63. சாப்பிட உட்கார்ந்து அன்னத்தை தரிசனம் செய்தவுடன்:


அஸ்மாகம் நித்யம் அஸ்து ஏதத் ||



நமக்கு என்றும் இந்த அன்னம் கிடைக்கட்டும் என்று கூறி அஞ்சலி செய்க.







Thursday, June 24, 2010

62. கர்மாவை பகவத் அர்ப்பணம் செய்ய:




62. கர்மாவை பகவத் அர்ப்பணம் செய்ய:

காயேந வாசா மநஸேந்த்3ரியைவா பு3த்4யாத்மனாவா ப்ரக்ரு2தே: ஸ்வபா4வாத்||

கரோமி யத்3 யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

உடல் வாக்கு மநம், இந்திரியம், புத்தி, ஜீவன், ப்ரக்ருதி இவைகளால் எதைச்செய்கிறேனோ அதை எல்லாம் ஸ்ரீ நாராயணனுக்கே அர்ப்பணம் செய்கிறேன்.

Saturday, June 19, 2010

61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது



61. பகவானிடம் ப்ரார்த்திக்க வேண்டியது:

அநாயாஸேன மரணம்2 விநா தை3ன்யேந ஜீவநம் |

தே3ஹி மே க்ரு2பயா ஸ2ம்போ4 த்வயி ப4க்திம் அசஞ்சலாம் ||

ஆயாசமில்லாத மரணம், ஏழ்மை இல்லாத பிழைப்பு, உம்மிடத்தில் மாறாத பக்தி இவற்றை கொடும் பிரபோ!


Wednesday, June 16, 2010

60. அபிஷேக தீர்த்தம் அருந்த



60. அபிஷேக தீர்த்தம் அருந்த.

அகால ம்ரு2த்யு ஹரணம்2 ஸர்வ வ்யாதி4 நிவாரணம் |

ஸமஸ்த பாப க்ஷயகரம் (சிவ/ விஷ்ணு/தே3வீ) பாதோ3த3கம்2 ஸு2ப4ம் ||

த3ர்ஸ2நாத் நிகி2ல கில்பி3ஷாபஹம்2 ஸ்பர்ஸ2நாத்3 அகி2ல காமத3ம் சுப4ம்|

ப்ராஸ2நாச்ச பரமார்த்த2 போ3த4கம் சந்த்ரசூட3 சரணோத3கம் ப4ஜே||

பார்த்தால் பாபத்தை அகற்றுவதும், தொட்டதால் இஷ்டத்தை தருவதும், சாப்பிடுவதால் வேதாந்தத்தை அறிவிப்பதுமான சந்த்ரசூடனது பாத தீர்த்தத்தை ஸேவிக்கிறேன். (சந்த்ரசூடன் சந்த்ரசேகரரான மஹாபெரியவாள் என்று கொள்ளலாம். பெரியவா பூஜை செய்பவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.)

- அவ்வாறே குரு பாத தீர்த்தம் அருந்த -

அஜ்ஞாந மூல நாஸா2ய ஜந்ம கர்ம நிவ்ரு2த்தயே | 
ஜ்ஞாந வைராக்ய ஸித்3த்4யர்த்த2ம்2 கு3ருபாதோ3த3கம்2 ஸு2ப4ம்||

Tuesday, June 15, 2010

59. சங்கில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்ற




59. ஸ2ங்க2 மத்3யே ஸ்தி2தம் தோயம் ப்4ராமிதம் ஸ2ங்கரோபரி |

அங்க3 லக்3நம் மனுஷ்யாணாம் ப்ரஹ்ம ஹத்யாயுதம்2 த3ஹேத் ||

சங்கின் இடையில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்றி அது அங்கத்தில் பட்டால் ஆயிரக்கணக்கான ப்ரம்மஹத்தி தோஷம் அகலும். பூஜை முடித்து சங்கத்தை இடது கையில் தாங்கி வலது கையால் மூடிக்கொண்டு ஸ்வாமியை 3 முறை பிரதக்ஷிணமாக சுற்றி ஜலத்தை அபிஷேக ஜலத்தில் சேர்த்து மிகுந்ததை தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

Monday, June 14, 2010

58. பூஜை மணி அடிக்க:



58. பூஜை மணி அடிக்க:

ஆக3மார்த்த2ந்து தே3வானாம் க3மநார்த்த2ந்து ரக்ஷஸாம் |

குரு க4ண்டாரவம் தத்ர தே3வதாஹ்வாந லாஞ்ச2னம். ||

ஓ! மணியே! தேவர்கள் வருவதற்காகவும், அஸுரர்கள் போவதற்காகவும் தேவதைகளை அழைக்க அடையாளமான சப்தத்தை செய்.


Saturday, June 12, 2010

57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:



57. பூஜை ஜலத்தை சுத்திகரிக்க:

கலஸ2ஸ்ய முகே2 விஷ்ணு: கண்டே2 ருத்3ர: ஸமாஸ்2ரித: |
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்4யே மாத்ரு2க3ணா: ஸ்ம்ரு2தா: ||

குக்ஷௌது ஸாக3ரா: ஸர்வே ஸப்த த்3வீபா வஸுந்த4ரா | 
ரு2க்3வேதோ3த2 யஜுர்வேத3: ஸாம வேதோ3ப்யத2ர்வண: ||

அங்கை3ஸ்2ச ஸஹிதா: ஸர்வே கலஸா2ம்பு3 ஸமாஸ்2ரிதா: | 
ஆயாந்து தே3வபூஜார்த்த2ம்2 து3ரிதக்ஷயகாரகா: ||

கங்கேச யமுநே சைவ கோ3தாவரி ஸரஸ்வதி |
நர்மதே ஸிந்து4 காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம்2 குரு ||

Friday, June 11, 2010

56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:



56. ஜபம் முதலானதுக்கு பூமியை சுத்தி செய்ய:

அபஸர்பந்து யேபூ4தா: யே பூ4தா பு4வி ஸம்ஸ்தி2தா: |

யே பூ4தா விக்4நகர்த்தார: தே க3ச்ச2ந்து ஶிவாஜ்ஞயா ||

பூமியில் இருந்து கொண்டு நற்கர்மாக்களுக்கு இடையூறு செய்யும் பூதங்கள் சிவனது ஆணையால் விலகட்டும். ஜபம் பூஜை முதலியவற்றை செய்ய ஆரம்பிக்கும் போது இதைக்கூற வேண்டும்.

Thursday, June 10, 2010

55. வேஷ்டி ஜலம் பிழிய:



55. வேஷ்டி ஜலம் பிழிய:

யேகே சாஸ்மத் குலே ஜாதா அபுத்ரா கோ3த்ரஜா ம்ரு2தா: |

தே க்ரு2ஹ்ணந்து மயா த3த்தம் வஸ்த்ர நிஷ்பீட3னோதகம் ||

நமது குலத்திலும் கோத்திரத்திலும் பிறந்து புத்ரன் இல்லாமல் இறந்தவர்கள், துணியின் ஜலத்தை எடுத்துக்கொள்ளட்டும். 
பூணூலை மாலையாக போட்டுக்கொண்டு மேல் வஸ்த்ரத்தை பிழிய வேண்டும். பிரேதத்திற்கு மூன்றாக மடித்து புதிய வஸ்த்ர உதகம். பித்ருக்களுக்கு இரட்டைப்படையாக மடித்து பழைய வஸ்த்ர உதகம்.



Wednesday, June 9, 2010

54. ஶிகா ஜலம் விட.



54. ஶிகா ஜலம் விட.

லதா வ்ருக்ஷேஷு கு3ல்மேஷு வர்த்தந்தே பிதரோ மம|
தேஷாம் ஆப்யாய நார்த்த2ந்து இத3மஸ்து ஶிகோ3தகம்.||

[கொடிகளிலும் மரங்களிலும் புதர்களிலும் உள்ள எனது பித்ருக்கள் சந்தோஷமடைய ஶிகா ஜலம் இது.]

Tuesday, June 8, 2010

52. கங்கா ஸ்மரணம்:




52. கங்கா ஸ்மரணம்:
கங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||
 
[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]

Monday, June 7, 2010

53. யக்ஷ்ம தர்ப்பணம்.



53. யக்ஷ்ம தர்ப்பணம்.

யன்மயா தூ3ஷிதம் தோயம் சாரீர மலஸஞ்சயை:|
தத்தோ3ஷ பரிஹாரார்த்த2ம் யக்ஷ்மாணம் தர்ப்ப யாம்யஹம்||

[என் உடல் மலத்தால் நான் ஜலத்தை அசுத்தமாக்கினேன். அந்த தோஷம் அகல யக்ஷ்ம தர்ப்பணம் செய்கிறேன்.]


Saturday, June 5, 2010

51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:



51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:

அதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோபம|
பை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||

[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]

Thursday, June 3, 2010

50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:



50. காஶி கிடைக்க – கங்கா ஸ்நாநம் பெற:

விஶ்வேஶம் மாத4வம் டுண்டும் தண்ட பாணிஞ்ச பை4ரவம் |

வந்தே காஶீம் குஹாம் கங்காம் ப4வாநீம் மணிகர்ணிகாம் ||

(- காஶி காண்டம்)

இதை நித்யம் ஜபிக்க காஶி போகும் பாக்கியம் கிட்டும்.

Wednesday, June 2, 2010

49. பித்ருக்கள் முக்தி பெற



49. பித்ருக்கள் முக்தி பெற

அயோத்4யா மதுரா மாயா காஸீ2 காஞ்சீ அவந்திகா |

பூரீத்3வாரவதீ க்ஞேயா: ஸப்தைதா: மோக்ஷ தாயகா: ||

-மாத்ஸ்யம்

சிராத்தத்தில் பிண்ட பூஜைக்கு பின் பித்ருக்கள் மோக்ஷமடைய இதை கூறுகிறார்கள்.


Tuesday, June 1, 2010

48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:



48. நாம் செய்த கர்மாவின் பலன் விருத்தியாக:

ப்ரும்ஹார்ப்பணம் ப்ரும்ஹ ஹவிர் ப்ரம்ஹாக்னௌ ப்ரம்ஹணாஹுதம்|

ப்ரும்ஹைவ தேன க3ந்தவ்யம் ப்ரும்ஹ கர்ம ஸமாதி4நா ||

ஹோமம் ப்ரும்ஹம். ஹோமம் செய்த பொருளும் ப்ரம்ஹமே. ப்ரும்ஹ அக்னியில் ப்ரும்ஹாவால் ஹோமம் செய்யப்பட்டது. ப்ரும்ஹா கர்மா இவ்விரண்டின் சேர்க்கையால் அடைய வேண்டியதும் ப்ரம்ஹமே.

இதுவும் சிராத்த ஹோமம் செய்யும் போது கூறப்படுகிறது. எந்த கர்மா செய்தாலும் இதைக்கூற பலன் விருத்தியாகும்.