Pages

Friday, April 23, 2010

27. சீக்கிரம் விவாஹம் ஆக:


இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.
-----------------
27. சீக்கிரம் விவாஹம் ஆக:

ஜநகஸ்ய வச:விச்ருத்வா பாணீன் பாணிபி4: அஸ்ப்ருசன். |

சத்வாரஸ்தே சதஸ்ரூணாம் வஸிஷ்ட2ஸ்ய மதேஸ்தி2தா ||

ஜனகருடைய வார்த்தையை கேட்டு வஸிஷ்டர் உத்திரவு படி ராமன் முதலிய நான்கு பேரும் ஸீதை முதலிய நாலு பேருடைய கைகளைப்பிடித்தார்கள்.

இதைக்கன்யைகளோ அவர்களுடைய மாதா பிதாக்களோ நித்யம் காலையின் ராம பூஜை செய்து 108 முறை ஜபித்தால் சீக்கிரமாக விவாஹம் கைகூடும். சக்தி உள்ளவர் குரு மூலம் உபதேசம் பெற்று ராமாயணம் பால காண்டம் 73 ஆம் சர்க்கம் பூராவாக பாராயணம் செய்தால் உடனே பலன் உண்டாகும்.

No comments: