Pages

Wednesday, March 17, 2010

விசார சங்கிரகம் -22



31.ஆன்மாவை பாவிப்ப தெப்படி?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் மல்லாத சுயஞ்ஜோதியாய் தன்மயமாய்த் தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்துவாகலான் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே பந்தமாக முடியும். மனதை ஆன்மாகார மாக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயமென்னும் குகையின் மத்தியில் கேவல ப்ரஹ்மமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருத்தலை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதினும் அறியாமை வேறுண்டோ?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் அல்லாத சுயம் ஜோதியாய், தன் மயமாய், தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்து. ஆதலால் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே கட்டுப்பாடு செய்வதாக முடியும். மனதை ஆன்மாகாரம் ஆக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயம் என்னும் குகையின் மத்தியில் ப்ரஹ்மம் மட்டுமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதை விட அறியாமை வேறுண்டோ? [பாவிப்பதை விட்டு இதை "பார்க்க" கற்றுக்கொள்ள வேண்டும்.]


No comments: