Pages

Monday, February 22, 2010

நியாஸம் -தொடர்ச்சி




கொஞ்சம் புரியலைன்னா இப்ப இதையே ஒரு உதாரணத்தோட பார்க்கலாம்.
உதாரணம் சொல்ல கொஞ்சம் தயக்கம்தான். இருந்தாலும் இது முக்கியம் என்பதால் சொல்லுவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன். மந்திரங்கள் குரு மூலமாகவே உபதேசம் பெற வேணும். அப்படி உபதேசம் பெறும்போது சூக்ஷுமமான ஒரு விஷயமும் பரிமாறிக்கப்படும். . அது இன்னும் சக்தி உடையதா இருக்கும். அதனால் மந்திரம் இங்கே சொல்லப்படாது.
சக்தி பஞ்சாக்ஷரீ ஐ எடுத்துக்கலாம்.
இப்படி ஆரம்பிப்போம்.

அஸ்ய ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்த்ரஸ்ய
வாமதேவ ரிஷி:
அனுஷ்டுப் ச2ந்த:
சாம்ப3சதா3ஸி2வோ தே3வதா
--
ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ மஹா மந்திரத்துக்கு வாமதேவ ரிஷி: இந்த ரிஷிதான் இந்த மந்திரத்தை கண்டு உலகிற்கு கொடுத்தார். இந்த மந்திரம் பங்தி ச்சந்தஸில் அமைந்துள்ளது. இந்த மந்திரத்துக்கு தேவதை சாம்பசதாஸி2வன்.
ரிஷி புத்தி சம்பந்தப்பட்டதால் அதை சொல்லும்போது தலையை தொடுகிறோம். ச்சந்தஸ் என்பது ஒலியுடன் சம்பந்தப்பட்டதால் வாயை தொட வேண்டும். தேவதையை ஹ்ருதயத்தில் ஸ்தாபிப்பதால் அங்கே தொட வேண்டும்.
-
ஹ்ராம் பீஜம். ஹ்ரீம் சக்தி: ஹ்ரூம் கீலகம்.
சாம்ப சதாசிவ ப்ரஸாத சித்த்யர்த்தே ஜபே வினியோக:
பீஜம் வலது தோள்; சக்தி இடது தோள்; கீலகம் நடு மார்பு/ தொப்புள்; இந்த இடங்களில் தொட வேண்டும். வினியோகஹ என்னும் போது உள்ளங்கைகளை பக்கத்து பக்கத்தில் நீட்டி வைத்து இருந்து மந்திரம் சொல்லி விரல் நுனிகள் ஹ்ருதயத்தை நோக்கி சுழற்றி திருப்ப வேண்டும். (சில சம்பிரதாய வித்தியாசங்கள் உண்டு)
ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம:
ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம:
ஹ்ரூம் மத்யமாப்யாம் நம:
ஹ்ரைம் அனாமிகாப்யாம் நம:
ஹ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

இவற்றைச் சொல்லி கட்டை விரலில் ஆரம்பித்து சின்ன விரல் வரை - விரல் கையில் சேருமிடத்தில் இருந்து நுனி வரை தடவிக்கொடுக்க வேண்டும். எப்படி என்பதை முன்னேயே பார்த்தோம்.
ஹ்ர: கலதல கரப்ருஷ்டாப்யாம் நம:
இதைச்சொல்லி கைகளை உள்ளும் புறமும் மற்ற கையால் துடைக்க வேண்டும்.

ஹ்ராம் ஹ்ருதயாய நம:
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா.
ஹ்ரூம் ஸி2காயை வஷட்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.
--
ஹ்ராம் ஹ்ருதயாய நம: - ஐந்து விரல்களாலும் ஹ்ருதய ஸ்தானத்தை தொட வேண்டும்.
ஹ்ரீம் ஸி2ரஸே ஸ்வாஹா. - வலது கை நடு விரல் மோதிர விரலால் தலை உச்சியையும்;
ஹ்ரூம் ஸி2காயை வஷட். - கட்டை விரலால் சிகையையும் தொட வேண்டும்.
ஹ்ரைம் கவசாய ஹூம்.. . -கைகளை மறித்து தோள்களை தொட்டு கவசம் செய்ய வேண்டும்.
ஹ்ரௌம் நேத்ர த்ரயாய வௌஷட் .- நடு விரலால் புருவ மத்தியையும் பக்கத்து விரல்களால கண்களையும் தொட வேண்டும்.
ஹ்ர: அஸ்த்ராய ப2ட்.- சுட்டு விரலை மட்டும் நீட்டி தலையை வலமாக சுற்றி இடது உள்ளங்கையை இரு முறை மெல்லத் தட்ட வேண்டும்.

பூ4ர் பு4வஸுவரோம் இதி திக்பந்த: :
தலையைச்சுற்றி வலமாக சொடுக்கி திக் பந்தம் செய்ய வேண்டும்.

இதுவே ஜபம் முடிந்த பின் செய்யும்போது பூ4ர் பு4வஸுவரோம் இதி விமோக: என்றாகும். சுற்றுவதும் இடமாக ஆகும். கட்டை அவிழ்த்து விடுகிறோம் இல்லையா?

அடுத்து த்யான ஸ்லோகம்:
மூலே கல்பத்3ருமஸ்ய த்3ருத கனகநி4பம் சாரு பத்3மாஸனஸ்த2ம்
வாமாங்காரூட3 கௌ3ரி நிபி3ட குசப4ராபோ4க3 கா3டோப கூ3ட3ம்
நானாலங்கார காந்தம் வர பரசு2 ம்ருகாபீ4தி ஹஸ்தம் த்ரிநேத்ரம்
வந்தே3 பாலேந்து3 மௌலிம் க3ஜ வத3ன கு3ஹாஸ்லிஷ்2ட பார்ஸ்2வம் மஹேஷம்
--
பொருள்: கற்பக விருக்ஷத்தின் அடியில் பொன் போன்ற மேனியுடன் பத்மாஸனத்தில் வீற்றிருப்பவரும், இடது புறம் மடியில் அமர்ந்திருக்கும் கௌரியின் மார்பை இறுகத்தழுவி இருப்பவரும், பலவிதமான அலங்காரங்களுடன் பிரகாசிப்பவரும், வரம், பரசு, மான், அபயம் ஆகியவற்றை கைகளில் தரிப்பவரும், முக்கண்ணரும், சிரசில் இளம் பிறைச் சந்திரனை அணிந்தவரும் கணபதியும் குஹனும் இரு புறமும் சேர்ந்திருக்கப்பெற்றவரும் ஆகிய மஹேஸ்வரனை வந்தனம் செய்கிறேன்.

லம் ப்ருத்வியாத்மனே க3ந்தா3ந் தா4ரயாமி
ஹம் ஆகாசாத்மனே புஷ்பைஹி பூஜையாமி
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்3ராபயாமி
ரம் அக்ன்யாத்மனே தீபம் த3ர்ஸ2யாமி
வம் அம்ருதாத்மனே மஹா நைவேத்யம் நிவேத3யாமி
ஸம் ஸர்வாத்மனே ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி.

இதுக்கு அப்புறம் ஜபம். முடிஞ்சு திருப்பியும் அங்க ந்யாஸம் (வித்தியாசம் சொல்லி இருக்கேன்), த்யானம், பஞ்ச பூஜை.
முடிஞ்சது. ஆசமனம் செய்து விட்டு இந்த உலக வியவகாரங்களுக்கு திரும்பலாம்.

உலக வியவகாரங்கள்ன்னதும் ஒரு கதை ஞாபகம் வருது.
ராம க்ருஷ்ணரை ஒத்தர் கேட்டாராம். என் ஸ்வாமி? கங்கையிலே குளிச்சா எல்லா பாவமும் போயிடும் இல்லையா? ஆனா இங்கேயே வசிக்கிறவங்க அப்படி ஒண்ணும் வித்தியாசமா இருக்கிறதா தெரியலையே?
பரம ஹம்ஸர் வேடிக்கையா பதில் சொன்னார்.
உண்மைதான்பா! கங்கைகிட்டே போகும்போதே காத்திலே கங்கை தண்ணி துளிகள் சேர்ந்து வந்து பாவம்கள் குளிக்க போறவரைவிட்டு கிளம்பிடும். எங்கே போகும்? அக்கம் பக்கம் இருக்கிற செடி கொடிகள் மரங்களிலே தங்கும். ஆசாமி கங்கைலே ஜம்முன்னு குளிச்சுட்டு வருவார். அது வரை நல்லா இருக்கும். கரைக்கு வந்து துணி உடுத்திகிட்டு வீட்டுக்கு திரும்பும்போது மிட்டாய் கடையை பார்த்தவுடனே நாக்கிலே ஜலம் ஊறும். அவரை விட்டு போய் கரையிலே காத்துகிட்டு இருக்கிற பாபங்கள் அப்பாடான்னு திருப்பியும் அவங்க மேலே வந்து உக்காந்துடும்!

இது மாதிரி ஆகிவிடக்கூடாது!

2 comments:

எல் கே said...

siru sandegam arambigukum poluthu nysam seyya vendum. seythu irukiren. aanal mudikum poluthu ithu varai seythathu illai.(naan vaaram oru murai ruthram paarayanam seyven)

திவாண்ணா said...

வாங்க எல்கே! ஆமாம் முடிக்கும்போது அங்க நியாஸம் செய்ய வேண்டும். கர நியாஸம் செய்வதில்லை. நீங்கள் ருத்ரம் சமகம்(?) பாராயணம் செய்வது குறித்து மகிழ்ச்சி!