Pages

Thursday, February 18, 2010

ஜபம்




சரி உட்கார்ந்தாச்சு! இப்ப என்னப்பா?

ஜபம் செய்ய ஆரம்பிக்கு முன்னே சிலது மனசில வைச்சுகறது நல்லது.
நம்ம பிரச்சினைகள் எப்பவுமே நம்மோட இருக்கத்தான் இருக்கும். கொஞ்சம் காணாம போனதா நினைச்சாலும் திருப்பியும் வரத்தான் வரும். இப்ப கொசு விரட்டி போட்டு துரத்திட்டாலும் நாளை மாலை அது எல்லாமே திருப்பி வரது உறுதி!
அது போல பிரச்சினைகள் திருப்பி திருப்பி வந்துண்டேதான் இருக்கும்.
 
அதனால் இப்ப என்ன ஆச்சு? உறுதியா மனசில சொல்லிக்கணும். "பிரச்சினைகளே! நீங்க எல்லாரும் எங்கேயும் போக மாட்டீங்கன்னு தெரியும்; வந்து உங்ககிட்டே வம்பு வெச்சுக்கிறேன். இப்ப கொஞ்சம் எல்லாரும் தள்ளி நில்லுங்க. கொஞ்ச நேரம் பகவானோட இருந்துட்டு வரேன்.”
இப்படி சொல்லி எல்லத்தையும் பக்கமா தள்ளிவிட்டு அடுத்து...

வெளியிலுள்ள விஷயங்களில மனசை போகவிடாம ஒரு முகப்படுத்தணும். இவ்வளோ நாள் ஓடி ஓடி பழக்கப்பட்ட [தட்டச்சுப்பிழை "பாழாக்கப்பட்ட" ன்னு இருந்தது. திருத்தினேன். இப்ப அப்பபடியே இருந்திருக்கலாம்ன்னு தோணுது!] மனசு அவ்வளோ சுலபமா ஒருவழிப்படுமா? அதுக்கு என்ன செய்யறது? இதற்கு புருவ மத்திய நாட்டம், நாசிகாக்ர திருஷ்டி – அதாங்க மூக்கு நுனியை பாக்கிறது இதெல்லாம் உதவும். அதாவது கண்களை மூடிக்கொண்டு புருவங்களின் மத்தியோ அல்லது மூக்கின் நுனியையோ பார்க்கிறது போல "பார்வையை¨ திருப்புங்க!

வழக்கிலே மிகவும் உபயோகமானது இந்த நேரத்திலே பிராணாயாமம் செய்வது. அது பெரிய டாபிக் என்கிறதால இப்ப ஒண்ணும் எழுதலை. மேலும் சரியான நேர இடைவெளி கொடுத்து பண்னலைன்னா பிரச்சினைகள் வரும். அதனால நல்லா இதை பழகினவங்ககிட்டே தெரிஞ்சுக்கணும்.

இதை பழகலைன்னா பரவாயில்லை. பழகும் வரை நல்லா ஆழ்ந்த மூச்சு எடுத்து விடலாம். மூணு தரம் செய்தா போதும்.
ரெய்கி கத்துத்தரப்ப இப்படி கத்துத்தராங்க. இப்படி செய்யும் போது மூளையோட மின் அலைகள் ஆல்பா ஆக மாறுவதா விஞ்ஞானம் சொல்லுது. இது மன ஒருமைப்பாட்டுக்கு உதவும்.

ஒருமையான மனதை எங்கேயாவது வைக்கணுமே? அதுவே த்யானம்.
எந்த தேவதையை குறிச்சு ஜபம் செய்யப்போறோமோ அந்த தேவதையை சுத்தியே - தலை, முகம், கை கால் எல்லாம் இப்படி இப்படி இருக்கும்ன்னு - நினைக்கறதே த்யானம். பல ஜபங்களுக்கும் த்யான ஸ்லோகம் உண்டு. அதை தெரிஞ்சு கொண்டு அதை சொல்லும்போது கற்பனை செய்து பார்க்கலாம்.
அதுக்கு அப்புறம் ஜபம் துவக்க வேண்டியதுதான்.

பலருக்கும் ஜபம் செய்யும் போது பக்கத்திலே தள்ளிவிட்ட எண்ணங்கள் திருப்பி திருப்பி வந்து தொல்லைதரும். இது நாளடைவிலேதான் சரியாகணும். அதனால எப்போதெல்லாம் நம் மனசு வெளியே போயிடுச்சுன்னு தெரியுதோ அப்பல்லாம் திருப்பி அதை ஜபத்திலே கொண்டு வந்து விடணும். என்னடா இப்படி திருப்பி திருப்பி ஜபம் கெட்டு போய்கிட்டு இருக்கேன்னு வருத்தப்படறதுல பிரயோசனம் இல்லை. இப்படி அலை பாயறதுதான் மனசோட இயல்பு. சிதறுகிற எண்ணங்களை குறைச்சு பின்னே ஒரே விஷயத்துல அதை திருப்பி விடுகிறதுதான் ஜபம்.

தாந்திரிகத்துல த்யானத்துக்கு முன்னே நியாசம் உண்டு. அது என்னன்னா...