Pages

Wednesday, January 27, 2010

மாக புராணம் 29




30.குரு பரம்பரை:

க்ருத்ஸமதர்: புண்யகரமான வைஸா2கம் துலா கார்த்திகம் இவைகளிலும் மிகச்சிறந்தது மாகமாதம். மாகஸ்நாநம் யக்ஞசாரம், தபஸ்ஸாரம், கர்மஸாரம், தர்ம ஸாரமுமானது. ஸி2வன், விஷ்ணு, இந்த்ரன், ரவி முதலிய ஸகல தேவர்களுக்கும் ப்ரீதிகரமானது. எல்லா தர்மங்களையும் விட்டுவிட்டாலும் மாகஸ்நாநம் மாகபுராண ஸ்2ரவணம் செய்ய வேண்டும். இதைக்கேட்டாலே ஸகல பாபங்களும் அகன்று விடும். ஸகல ஸம்பத்துமுண்டாகும். இதை ஸி2வன் உமாதேவிக்குக் கூறினார். தேவி நாரதருக்கும், நாரதர் வியாஸருக்கும். வியாஸர் ஸூதருக்கும், ஸூதர் நைமிசாரண்ய வாஸிகளுக்கும் கூறினார் என க்ருத்ஸமதர் ஜனஹ மஹர்ஷிக்குக் கூறினார்.

ஸ்காந்த புராணத்தில் மாக மஹாத்மியம் முற்றிற்று.

ஸ்நாந ஸங்கல்பம்.

காலலம்பி ஆசமனம் செய்து,
ஸு2க்லாம்பரதரம் ஸ2ஸி2வரணம்சதுர்புஜம்|
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸா2ந்தயே||

ஸு2பே ஸோ2பனே முஹூர்த்தே ஆத்ய ப்ரும்மண: த்விதீய பாரார்த்தே ஸ்2வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே கலௌயுகே. பிரதமேபாதே, ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே. பரதக்கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்2வே ஸ2காப்தே அஸ்மின் வர்த்தமானே வியவகாரிகே, ப்ரபவாதி ச2ஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.....நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஸீ2ஸீர ருதௌ மாக மாஸே...பக்ஷே.....திதௌ.. நக்ஷத்ர யுக்தாயாம் ஏவங்குண விஸே2ஷண விஸி2ஷ்டாயாமஸ்யாம் …. ஸு2பதிதௌ இஹஜன்மனி ஜன்மாந்தரே சக்ருத் க்ருதானாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய அபநோதநார்த்தம் ….புண்ய க்ஷேத்ரே ஹரிஹர ஸந்திதௌ/ அச்வத்த ஸன்னிதௌ/ ப்ராம்மண ஸந்நிதௌ மாகஸ்நாநமஹம் கரிஷ்யே.

மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ
ப்ரும்மக்னம் வா ஸுராபம் வா கம்பதந்தம் புனீமஹே
துக்க தாரித்ர்ய நாஸா2ய ஸ்ரீ விஷ்ணோஸ் தோஷணாய ப்ராதஸ்நானம் கரோம்யத்ய மாகே பாப விநாஸ2நம்.

ப்ரார்த்தனை:

மகர ஸ்தே ரவௌ மாகே3 கோவிந்தாச்யுத மாத4வ|
ஸ்நாநேந அநேந மே தேவ யதோக்த பல2தோ பவ||

அர்க்ய மந்த்ரம்
ஸவித்ரே ப்ரவித்ரே ச பரந்தாம ஜலே மம|
த்வத் தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாது ஸஹஸ்ரதா||

ஸவித்ரே நம: இதமர்க்யம்.

30 நாளும் தேங்காய், பழம், தாம்பூலம், வஸ்த்ரம், கம்பளம்; ஸ2க்திக்கேற்றபடி இவைகளிலொன்று நித்யம் தாநம் செய்யவும்.

ஸு2பமஸ்து.


No comments: