Pages

Monday, January 4, 2010

விசார சங்கிரஹம் 10



15. கரணேந்திரியாதிகள் அறியுந் தர்மத்தை யுடையனவாக விருந்தும் அவை திருசிய பதார்த்தங்களெனப்படுவதேன்?

திருஷ்யம் அல்லது அறிபடுபொருள் - திருக்கு அல்லது அறிபொருள்
கடம்                                             -  பார்ப்பவன்
தேக கடாதிகள்                              -  கண்
கண்                                              - கண்ணிந்திரியம்
கண்ணிந்திரியம்                             -  மனம்
மனம்                                           - ஜீவன்
ஜீவன்                                          - அறிவு

மேற்கண்டபடி அறிவாகிய நாமே எல்லா பதார்த்தங்களையும் அறிவதால் நாமே திரிக்கெனப்படுவோம். கடாந்தமாயுள்ள பதார்த்தங்கள் யாவும் நம்மால் அறியப்படுவதால் திருசியங்களாம். மேற்காட்டியுள்ள அறிவறியாமை யடுக்குகளிற் கூறப்படும் திருக்கு திரிசியங்களிலும் ஒன்று மற்றொன்றுக்குத் திருக்காக விருப்பினும் அது வேறொன்றுக்கு திருசியமாகலான் அவை யாவும் உண்மையில் திருக்காகா. நாம் எல்லாவற்றையும் அறிவதால் திருக்கென்றும் ஒன்றாலும் அறியப்படாததால் திருசியமன்று என்று சொல்லப்பட்டாலும் திருசியங்களை பற்றியே நாம் திருக்கென்று வழங்கப்படுகிறோமே யன்றி உண்மையில் திருசியமென்பது நமக்கன்னிய மின்மையால் நாம் அவ்விரண்டுக்கும் அதீதமான பொருளாவோம். ஏனையவ எல்லாம் திருக்கு திருசியங்களுக்கு உட்பட்டனவே.

கண், தோல் முதலியவனைத்தும் அறிகிறவையா இருக்கிறப்ப ஏன் அதை எல்லாமே அறியப்படும் பொருளா சொல்கிறாங்க?

அவை எல்லாமே ஒண்ணை அறிஞ்சாலும் அதை அறிய இன்னும் ஒண்ணு வேண்டியிருக்கு.
பட்டியலை பாத்தா ஒண்ணு மத்ததை பாத்தாலும் அதை ஒண்ணு பார்க்குது. ஒத்தன் ஒரு குடத்தை பார்க்கிறதா வெச்சுப்போம். குடத்தை கண் பாக்குது. ம்ம்ம்ம்... ஆனா அதால மட்டுமே "பாக்க" முடியாது. நம் சித்தாந்தங்கள்படி கண் என்கிற உறுப்புக்கு ஒரு சக்தி பாயணும். அப்பத்தான் அது பார்க்கும். (இந்த சக்தியை இந்திரியம் என்கிறாங்க.) அப்படின்னாலும் மனசு அதில ஈடுபடணும். மனசு எங்கோ இருக்க நடந்து போகிறோம். எதிரே ஒத்தர் மேலே முட்டிக்கிறோம், இல்லையா? இந்த மனசு என்ன செய்யுதுன்னு ஜீவாத்மா பாக்கும். இந்த ஜீவனையோ சித் ஆன அறிவு பாக்கும். ஆக கடைசிலே எல்லாத்தையும் பாக்கிறதா இருக்கிறது இந்த பேரறிவுதான். இந்த நிலையிலே பார்க்கிறதும், பார்க்கப்படுவதும் நாமே - அறிவே. அதனால இந்த சமாசாரத்தில நாம அகப்பட மாட்டோம். மத்த எல்லாமே பார்க்கிறதுன்னாலும் எல்லாமே பார்க்கப்படுவதும்தான்.


2 comments:

yrskbalu said...

பார்கிறதும் பார்க்கப்படுவதும் நாமே - அறிவே.

golden words.

any obsectles,or dissapointments comes in our life- if remember this word that time, no worries will be continue.

dukka nivarana mantra.

Geetha Sambasivam said...

உங்க விளக்கத்தைப் படிச்சதும்தான் அப்பாடானு இருக்கு! அது வரைக்கும் :(