Pages

Saturday, January 9, 2010

மாகபுராணம் 13




13. மாக புராணம் பேய் பிறவி அகற்றிற்று.

ஆவலுடன் கேட்கும் ஜன்ஹுவுக்கு க்ருத்ஸமஸ்தர் கூறுகிறார். மாகஸ்நாநமும் புராணமும் பேய் பிறவியையும் அகற்றி திவ்ய சரீரமுமளிக்கும். பம்பா தீரத்தில் ஓர் வைச்யன் அபரிமிதமான செல்வமுள்ளவனாக இருந்தான். பம்பா நகரம் என ஒரு சிறந்த பட்டணத்தை அமைத்து ஸகல அரசர்களும் மெச்சும்படி போக பாக்கியங்களை அனுபவித்து வந்தான். பொருளுக்குத் தாநம், போகம், நாச2ம் என்று மூன்று வகை செலவு ஏற்பட்டது. வைச்யன் போகத்தையே கருதி தான தர்மத்தில் சிறிதும் பொருளை ஈடுபடுத்தவில்லை. ஆதலால் லக்ஷ்மி அவனை விட்டகல, மூதேவி அவனைத் தழுவினாள். பரம ஏழையானான். ஏழ்மையால் பற்பல பாபங்களை செய்தான். ஆயுள் முடிய, உடல் இடியால் அழிய, ஆவி கிளம்பிற்று. பாபிகளுக்கேற்ற பேய் உடல் பெற்றான். பல உயிர்களை மாய்த்தான். பம்பா தீரத்திலே ஆலமரத்திலே அமர்ந்திருந்தான்.

வஸிஷ்ட முனிவர் தன் சிஷ்யர்களுடன் பம்பையில் மாக ஸ்நாநம் செய்து மாகபுராணம் கூறிவந்தார். "மாக மாசத்தில் ஸூர்யோதய காலத்தில் ஸ்நாநம் செய்தால் முன் செய்த ஸஞ்சித பாபமும், ஆகாமி எனும் புதிய பாபமுமகலும். சிறிய பாபங்களும் பெரிய பாபங்களுமகலும். மாகஸ்நாநம் மறவாமல் செய்ய வேண்டும்" என மாகபுராணத்தை விஸ்தாரமாக கூறினார். அங்கு ஆலமரத்திலிருந்து வைச்ய பேய் பயங்கர உருவுடன் விழுந்தது. அதிலிருந்து ஒரு திவ்ய புருஷன் தோன்றி தனது சரிதத்தைத் கூறி வஸிஷ்டரை பணிந்து வைகுண்டஞ் சென்றது.
வஸிஷ்டர் அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து கூறினார்: "அந்த பேய் விழுந்தவுடன் தர்ப்பத்தின் நுனியால் நீரை தோய்த்து ஸ்நாநம் செய்வித்தேன். சிறிது நேரம் புராணம் கேட்டது. அதனால் அந்த பாக்கியத்தை பாருங்கள்! ஒரு நிமிஷம் கதாஸ்2ரவணம் செய்ததும் சிறிது ஸ்நாநம் செய்வித்ததுமே இந்த பாப சரீரத்தைப் போக்கி திவ்ய சரீரத்தை தந்ததென்றால் முப்பது நாளும் முறைப்படி ஸ்நாநம் செய்வோர் பெருமை, அவர் பெறும் பாக்கியம் பற்றி கூறவும் வேண்டுமோ? பகவத் கதையை விட்டு வீண் கதை பேசுவோர் முகத்திலும் ஸத்கதை கேளாதவர் முகத்தில் விழித்தாலும் பாபம். பக்தியுடன் கதை கேட்போரும், பக்தியுடன் கதை சொல்பவரும், பக்தியுடன் ஒரு சுலோகமாவது கேட்பவரும், வலைப்பூவில் எழுதுபவரும், படிப்பவரும் பகவத் ஸ்வரூபத்தை அடைவர்.”

2 comments:

KABEERANBAN :கபீரன்பன் said...

//வஸிஷ்டர் அதைக்கண்டு ஆச்சர்யமடைந்து கூறினார்:.....

..... வலைப்பூவில் எழுதுபவரும் பகவத் ஸ்வரூபத்தை அடைவர்.//

:))) ’வலைப்பூவில் படிப்பவரும்’ என்று எங்கள் மேலும் இரக்கப்பட்டு சிபாரிசு பண்ணுங்களேன்.

திவாண்ணா said...

:-)))
செஞ்சாச்சு!