Pages

Wednesday, January 6, 2010

மாக புராணம் 11



11.தேவர் ஓணானை கொண்டு பரீக்ஷித்தது.
பகவான்: "ஆதலால் தேவேந்திரனுக்கு மாக ஸ்நாநம் செய்வித்து கழுதை முகத்தை அகற்றுங்கள். மேலும் அதன் பெருமையை கேளுங்கள். ப்ரயாக க்ஷேத்திரத்தில் மாகஸ்நாநம் செய்வது மிக உத்தமம். கங்கையும் யமுனையும் கூடுமிடத்திலே சரஸ்வதி அந்தர்வாஹினியாகச் செல்கிறாள். மாகமாஸம் அச்வத்தம், விஷ்ணு, வேதம், பிராம்ஹணன், ராமமந்திரம், லக்ஷ்மீ, கங்கா, மேரு ஆகியவை அந்தந்த இனத்திற்குள் மிக உயர்ந்தது. பிரயாகை, கங்கா, நர்மதா, பச்சிம வாஹினியான காவேரீ, தாம்ரபரணி, கோகர்ணம், பிரபாஸம் முதலிய இருபத்து நான்கு கோடி புண்ணிய தீர்த்தங்களில் பத்தாண்டுகள் ஸ்நாநம் செய்தவருக்கு எவ்வளவு புண்ணியம் வருமோ அவ்வளவு புண்ணியத்தை ஒரு மாஸம் செய்யும் மாகஸ்நாநம் அளிக்கும். மாகமாஸத்தில் தீர்த்தங்கரையில் என்னை ஸாளக்ராமத்தில் சி2லையில் சிறந்த கந்த புஷ்பங்களால் பூஜிப்பவர் எனது லோகத்தை அடைந்து மறுபடி பிறக்க மாட்டார்.

நெல்லி மரத்தின் கீழே துளஸீ, மிருத்திகை, அல்லது கோமயத்தை உடலில் பூசிக்கொண்டு மாகஸ்நாநம் செய்வரது எல்லா பாபங்களும் உடனே நசிக்கும். மாக ஸ்நாநம் செய்யாதவர் யமயாதனையை அனுபவிப்பர். பெண்களுக்கு மாக ஸ்நாநம் ஒரு வரப்பிரசாதம். இரு முறை பூஜிக்கும் விதவையின் பாபமும் அகலும். பக்தியுடன் மாகஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்வது விசே2ஷ புண்ணியத்தை தரும்.

காயத்ரிக்கு சமமான மந்திரம் இல்லை. ஸர்வ பாபங்களையும் போக்கி ஸர்வ லோகங்களையும் அளிக்க வல்லது காயத்ரீ. எனக்கும் பிரும்மாவுக்கும் சிவனுக்கும் ஸகல தேவர்களுக்கும் முக்கியமாக ஸூர்யனுக்கும் இருப்பிடம் காயத்ரீ. மாகமாஸம் முப்பது நாளும் ஸ்நாநம் செய்து காயத்ரீ ஜபம் செய்பவர் எல்லா யக்ஞங்களையும் செய்த பலன் பெறுவர். பிரும்ம யக்ஞம் செய்பவர் பிரம்ம லோகம் செல்வர். மாகஸ்நாநம், ஸத்கதா ச்2ரவணம், தீப தானம் இவை பிரும்ம ஞானம் தருபவை. துளஸீமாலை தரித்து துளசீ தளத்தால் ஸாளக்ராம பூஜை செய்வோர்க்கு யம பயமில்லை.

புராணம் சொல்பவர் வேதங்கற்று ஆசாரமுள்ளவராக இருத்தல் வேண்டும். கம்பீரமான வாக்கு, அழகான ஸ்ரீராகம், சா2ஸ்த்ரார்த்தம் இவைகளில்லாத புராணம் கேட்கத்தக்கதல்ல. அந்த குணம் நிறைந்தவர் கூறும் மாகபுராணத்தை பக்தியோடு ஒரு மாதம் கேட்பவர் எனது ஸாரூப்ய முக்தியை பெறுவர். ஸாளக்ராம தீர்த்தம் அருந்துவோர்க்கு ஸர்வ பாபங்களும் அகன்று ஹரி பக்தி உண்டாகும். பத்மாத்ரி குஹையில் உள்ள இந்திரனை அழைத்து வந்து துங்கபத்ரா நதியில் மாக ஸ்நாநம் செய்வியுங்கள். முன் போல திவ்ய முகத்துடன் வருவான்!” என்று கூறி விஷ்ணு மறைந்தார்.

தேவர்கள் பகவானை பணிந்து திரும்பிய போது அவர்களைப் பார்த்து இடி போல் பயங்கரமான ஒரு சப்தம் செய்தது ஒரு ப்ராணி. அவ்விடத்தில் தேடிச்செல்ல மலை போல் விகார ரூபத்துடன் ஒரு ஓணான் அங்கு பள்ளத்தில் இருந்தது. அது அஸுரனோ என அஞ்சினர். ஆயினும் அதை பலமான கொடிகளைக் கொண்டு கட்டி மேலே இழுக்க முயற்சித்தனர். அது அசையாததைக் கண்டு "இது ஓர் பாப ஜன்மா போல இருக்கிறது. எல்லா பாபமும் மாகஸ்நாநத்தால் அகலுமென அச்சுதன் கூறினாரே! இதற்கு மாகஸ்நாநம் செய்வித்து அந்த பாபம் அகலுகிறதா எனப்பரீக்ஷிப்போம்" என நினைத்தனர். தற்செயலாக மறு நாளே மாகமாஸம் பிறந்தது. அன்று அவர்களும் விதிப்படி மாகஸநாநம்செய்து அந்த ஜலத்தைக் கொண்டு வந்து அதற்கு (ஓணானுக்கு) ஸ்நாநம் செய்வித்தனர். உடனே அது அந்த கோர உடலைவிட்டு திவ்ய ஸ்த்ரீயாக தோன்றிற்று. அதைக்கண்டு அனைவரும் ஆச்சரிய மடைந்தனர்.



No comments: