Pages

Wednesday, December 9, 2009

ஸ்ரீ மாக புராணம் 1



ஓம்
ஸ்ரீ மாக புராணம்

மாகமாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவௌ
ப்ரும்மக்னம் வா ஸுராபம் வா கம்பதந்தம்புனீமஹே

மாகமாஸத்தில் ஜல தேவதை கூறுகிறது: சிறிது சூரியன் உதயமாகும்பொழுது ஜலத்தில் ஸ்னானம் செய்கிற மனிதன் ப்ரும்ம ஹத்தி, சுராபானம் முதலியன செய்தவனாயினும் அவனைச் சுத்தம் செய்கிறேன்.

வைதீக தர்ம வர்த்தனீ என்ற இதழை பல ஆண்டுகள் வெளியிட்டு பல அரிய விஷயங்களை தந்தவர் ஸ்ரீ ஸோமதேவ ச2ர்மா. அதிலிருந்து கிடைக்கும் தொகுப்பில் இருந்து சில விஷயங்களை வெளியிட உத்தேசம். மூலத்தில் இருப்பதையே அப்படியே எழுதுவதால் சில இடங்களில் இந்த காலத்துக்கு சரிப்படாமல் நெருடலாம். இதை தவிர்க்க முடியவில்லை.
மாக மாதம் ஜனவரியில்தான் ஆரம்பிக்கிறது. இருந்தாலும் நேரம்ம் கிடைப்பது அரிதாகையால் இப்போதிலிருந்தே வெளியிடுகிறேன். முப்பது அத்தியாயங்களையும் மாக மாதம் முடியு முன் வெளியிட முடிந்தால் நலம். பகவான் எண்ணம் எப்படியோ பார்க்கலாம்.
மாகமாஸ ஸ்நானம் துலா ஸ்நானம், கார்த்திகை ஸ்நானம், வைசாக ஸ்நானம் இவைகள் மூன்றைப் போல சிறந்தது. ஸகல பாபங்களையும் போக்க வல்லது. இது ஸ்காந்தத்தில் முப்பது அத்தியாயம் கொண்டது.

1.பார்வதி தேவிக்கு பரமசிவன் உபதேசித்தது.

மகா தேவன் கூறூகிறார்: ஸகல பாபங்களையும் போக்கடிக்கக்கூடிய மாக ஸ்நானத்தை பிரயாக க்ஷேத்திரத்தில் செய்வது மிகச்சிறந்தது. எந்த தீர்த்தமாயினும் முதல் ஸ்நானம் செய்வதால் பாபம் அகலும். இரண்டாவது ஸ்நானத்தால் வைகுண்டம் கிடைக்கும். மூன்றாவது ஸ்நானம் செய்தவுடன் இதற்கு என்ன பலன் தருவது, நான் கடனாளி ஆவேனே என பகவான் நினைக்கிறார். மாக மாஸத்தில் ஸூர்யன் உதயமான பொழுது கிராமத்திற்கு வெளியிலுள்ள மகாநதியிலோ, ஓடையிலோ, ஏரியிலோ, குளத்திலோ, நடபாவியிலோ ஸ்நானம் செய்பவன் பாபங்களைவிட்டு ஜனன மரணமில்லா முக்தி பெறூவான், பசுவின் முழங்கால் நனையும் அளவு ஆழமுள்ள நீரிலாவது ஸ்நானம் செய்ய வேண்டும். இதன் மஹிமையை உணர்ந்து கொண்டு செய்தாலும் உணராவிட்டாலும் அஸ்வமேத பலனைத் தரும்.

ஸ்நானம் விஷ்ணு பூஜை, புராண ஸ்ரவணம், தாநம் இவை ஒவ்வொன்றும் மிகப்பாவனமானது. இவைகளில் ஒன்றேனும் செய்யாதவர் பாபம் எப்படி அகலும்? நற்கதி எப்படி உண்டாகும்? பல பிறவிகளில் நீசனாகப்பிறப்பர். மாக ஸ்நானம் செய்யாதவர்களை பார்ப்பதும் பாபம். ஒரு முறை மாக ஸ்நானம் செய்தாலும் நூறு கங்கா ஸ்நானம் செய்த பலனுண்டாகும். பஞ்ச மஹ பாதகம், மித்ர த்ரோஹம், குரு/ மாத்ரு/ பித்ரு த்ரோஹம், நன்றி கொன்ற தோஷம், கோள் சொல்லுவது, தர்ம விக்நம் செய்வது, அபாத்திரத்தில் செலவு செய்வது, கிராம உத்யோகம், ஆலய உத்யோகம், தனம் பெற்று வேதம் கற்பிப்பது, க்ரூரமான கர்மா செய்தல் இத்தகைய பாபத்தையும் மற்றவைகளையும் போக்கடிக்கிறேன் என்று மாக தீர்த்தம் உத்கோஷிக்கிறது. டம்பத்திற்காகவோ, பிறர் தூண்டுதலாலோ, பிறர் சேற்க்கையாலோ, இன்னொருவருக்காகவோ ஸ்நானம் செய்தாலும் பாபமகலும். மாஸங்களில் உத்தமம் மாகம், தேவரில் விஷ்ணு, மரங்களில் அரசு, தேஜஸில் ஸூர்யன், சாஸ்த்திரங்களில் வேதம், வர்ணங்களில் வேதியன், மலைகளில் மேரு உத்தமமானது.
தன்னால் செய்ய முடியாவிடினும் தனக்காக ஒருவரை தக்ஷிணை தந்து ஸ்நானம் செய்யச்சொன்னாலும் மகா புண்னியமுண்டு. குளிரில் மாக ஸ்நானம் செய்வோருக்கு தீர்த்தங்கரையில் குளிர்காய தீ எரிய வைத்தால் அவனுக்கும் மாக ஸ்நான பலனுண்டாகும். மாக ஸ்நானம் செய்பருக்கு வஸ்த்ரம் அல்லது கம்பள தானம் செய்தாலும் ஸ்னான பலனுண்டு. மாக ஸ்நானம் செய்ய வருபவரை தடுத்தால் கோ ஹத்தி செய்த பாபம் வரும். தான் செய்ய முடியாவிடினும் மற்றவரை செய் என்று கூறினாலும் ஸ்நான பலனுண்டு. ஸ்நானம் செய்ய சக்தி இல்லாதவன் முப்பது நாளும் மாக புராண ச்2ரவணம் அல்லது படனம் செய்தாலும் ஸ்நான பலனைப் பெறலாம்.


7 comments:

திவாண்ணா said...

கவியக்கா, இப்ப சரிதானே?

Kavinaya said...

கூப்பிட்டீங்களா தி.வா.ஜி.?

என்ன சரி? என்ன தப்பு? ஒண்ணுமே புரியலே உலகத்திலே... :)

திவாண்ணா said...

:-))
ஆன்மீகம்பார் டம்மீஸ் ன்னு சொல்லிட்டு இப்படி பண்ணலாமான்னு கேட்டீங்க இல்லையா? அதான்.

yrskbalu said...

what about விசார சங்கிரகம் ? thats all?

திவாண்ணா said...

அன்பின் பாலு, இரண்டுமே மாறி மாறி வரும்.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லதுண்ணா...முன்னமே எழுதுவதால் எனக்கு செளகர்யம்... :)

மெளலி (மதுரையம்பதி) said...

மாகத்தின் சிறப்பு நினைவுக்கு வருது...'மாக க்ருஷ்ண சதுர்தஸ்யாம்'