Pages

Friday, December 25, 2009

மாகபுராணம் 6



தவளைக்கு நற்கதி:
அரசனும் சிஷ்யர்களும் கௌதமருடன் மாகஸ்நானம் செய்தனர். ஒரு நாள் முனிவர் புராணம் கூறிக்கொண்டு இருக்கும்போது அரசமரப் பொந்திலிருந்து ஒரு தவளை கத்திக்கொண்டே கீழே விழுந்து புரண்டது. ஒரு நிமிஷத்துக்குள் அது இறக்க அங்கிருந்து ஒரு திவ்ய ஸ்த்ரீ தோன்றி நின்றாள். எல்லோரும் ஆச்சரியமடைந்தனர். அவள் ஓர் ரிஷி ஸ்த்ரீ போல் மரவுரி உடுத்தி அச்சம், நாணம், அடக்கம் முதலிய நற்குணங்களுடன் உடல் நடுங்க எவரையும் பார்க்காமல் தனது பாதத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள். கௌதமர் அவளைப்பார்த்து ”அம்மா அஞ்சாதே! ஏன் பயப்படுகிறாய்? நீ யார்? ஏன் இந்த தவளை சரீரம் பெற்றாய்? தெரிந்தால் சொல்” என கேட்க முனி பத்னி கூறுகிறாள்.

மண்டூகத்தின் முற் பிறவி.
மஹர்ஷே! யான் முற்பிறவியில் ஞான சித்தி என்னும் முனிவரின் புத்ரீ. ப்ரக்ஞமுனி என்பவரின் தர்ம பத்னீ. காவேரீ தீரத்தில் வசித்து வந்தேன், மாக மாஸம் நேர்ந்த போது எனது பதி அதன் பெருமையை விளக்கி ப்ராதஸ்நானம் செய். வீட்டிற்கும் ஸ்வாமி ஸன்னதிக்கும் பசும்சாணத்தால் மெழுகி கோலம் போடு. நான் செய்யும் பூஜைக்கு பணிவிடை செய். சுசியாக பாகம் செய்து தூப தீபாதிகளையும் அளி. விஷ்ணோ, க்ருஷ்ணா, முகுந்தா என்று பகவன் நாமாவை கூறு. பகவானே மாக மாதமாய் இருப்பதால் அச்சமயம் அவரை அர்ச்சித்து அந்த தீர்த்தம் அருந்து, காம குரோதங்களை விட்டுவிட்டு பூஜை ஸ்நாநம் கதாஸ்ரவணம் செய்வோர் நற்கதி பெறுவர் என பலவாறு கூறினார்.
பதி கூறியது எனக்குப்பிடிக்கவில்லை. ”மாகமாவது ஸ்நானமாவது! குளிர் எடுக்கிறது! பிராணனே போகும் போல் பனி பல்லைக்கிட்டுகிறது. என்னால் எழுந்திருக்கவே முடியாது. ஸூர்யன் உதித்து வெயில் உறைத்த பின்தான் எழுந்திருப்பேன்” என்றேன். அவர் சாந்தரானாலும் கோபம் வந்து என்னை தவளையாகப்போ என்று சபித்தார். “தர்மமில்லா புத்திரனையும், பதியை எதிர்த்து அப்ரியமாக பேசும் மனைவியையும் பிராம்மணனை ஆதரிக்காத அரசனையும் சாபத்தால் தண்டிக்க வேன்டும் என சாஸ்திரம். அதனால் நீ தவளை ஆவாய்!” என்று சாபமளித்தார். நான் எவ்வளவு வேண்டியும் அவர் மனம் இரங்கவில்லை. ஆனால் கௌதமரை தர்சித்தபின் ஸ்வரூபத்தை அடைவாய் என்றார். அப்படியே நீரில் உள்ள தவளையாகக்கூட இல்லாமல் கரையில் வசிக்கும் தவளையாகி என் மலத்தையே நான் புஜித்துக்கொண்டிருந்தேன். உமது அருளால் சாபமகன்றது என்றாள்.
"அம்மா! குளிருக்கு பயந்த உன்னை நீரில் இல்லாத கேவலமான ஸ்தல தவளை ஆக்கினார். இங்கு நடக்கும் மாகஸ்நாந புரண ஸ்ராணாதிகளால் உனது பாபமகன்றது. பதியே விஷ்ணு! பதியே சிவன்! பதி சொல்லைத் தட்டலாகாது. பதி கூறிய தர்மத்தை விட்டு வேறு எதைச் செய்தாலும் ஸதி அதன் பலனை பெற மாட்டாள். நரகத்தையும் அனுபவிப்பாள். பதியில்லா ஸ்த்ரீ குருச்சொற்படி நடக்க வேண்டும். பதியின் பாத ஜலமே கங்காதி சர்வ தீர்த்தங்களாகும். க்ருஷ்ணவேணியில் மாக ஸ்நானம் செய்து ஸப்தமீ, தஸமீ, பௌர்ணமி, ப்ரதிபத் இந்த நாட்களிலாவது பூஜை, புராண ஸ்ராவணம் செய்தால் ஸகல பாபங்களுமகலும். இந்த நாட்களில் காலையில் பதினெட்டு அபூபம், பூரி இவைகளை புது முறத்தில் வைத்து தானம் செய்தோர் ராஜ போகத்தை பெறுவர் என்றார்.
முனி பத்னியும் அங்கு மாக ஸ்நாநம் புரண ஸ்ரவணம் செய்து வைகுண்டம் சென்றாள்.



No comments: