Pages

Thursday, December 17, 2009

மாகபுராணம்-4




4. தசமியில் லக்ஷ்மீ நாராயண பூஜை
மாக சுக்ல தசமியன்று ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணனை நதி தீரத்தில் அர்ச்சிக்க வேண்டும். கோமயத்தால் சுத்தம் செய்த இடத்தில் அஷ்டதள பத்மமமைத்து மேலே மண்டபாதி அலங்காரம் செய்ய வேண்டும். வஸ்த்ரத்துடன் கூடிய கலசத்தின் மீது சா2ளக்ராமத்தை வைத்து துளசியாலும் புஷ்பங்களாலும் ஆராதிக்க வேண்டும். பாயஸான்னம், பழம், அபூபம், தூப தீப, நீராஞ்சனம், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் முதலியவற்றைக் கொண்டு நன்கு லக்ஷ்மீநாராயணனை அர்ச்சிக்க வேண்டும்.பன்னிரண்டு நாமாக்களைக் கூறி பன்னிரண்டு உபசாரங்களைப் புரிய வேண்டும்.

1.வைகுண்ட நாதாய ஸ்நாநம் ஸமர்ப்பயாமி
2.இஷ்டார்த்ததாயினே வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
3.ஜநார்த்தநாய உபவீதம் ஸமர்ப்பயாமி
4.கோவர்தனாய கந்தம் ஸமர்ப்பயாமி
5.பத்மாலயாபத்ரே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
6.ஆதித்ய வர்ச்சஸே தூபம் ஸமர்ப்பயாமி
7.ஸுரேச்2வராய தீபம் ஸமர்ப்பயாமி
8.கேச2வாய நைவேத்யம் ஸமர்ப்பயாமி
9.ஸுமுகாய தாம்பூலம் ஸமர்ப்பயாமி
10.விஷ்ணவே ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
11.ந்ருஸிம்ஹாய லக்ஷ்மீநாராயணாய நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
12.ராமசந்த்ராய ஜபம் ஸமர்ப்பயாமி

தாமிர பாத்திரத்திலுள்ள தீர்த்தத்தால் கீழ் வரும் மந்திரத்தைக் கூறி அர்க்யம் அளிக்க வேண்டும்.
ஸர்வ தேவ நிவாஸாய லக்ஷ்மீ நாராயணாய ச!
இதமர்க்யம் மயாதத்தம் ஸ்வீகுருஷ்வ ரமாபதே!!
பிரார்த்தனை
யன் மயா சரிதம் தேவ த்வாமுத்திச்2 ய மமப்ரபோ!
தத்ஸர்வம் ஸப2லம் க்ருத்வா ரக்ஷமாம் பக்த வத்ஸல !!

பிறகு தண்டுலம் (அரிசி), உப்பு, வெல்லம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். மாக புராணம் ச்2ரவணம் செய்து அல்லது படித்து மாக ஸ்நான விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதனால் மேருமலைக்கு சமமான பாபங்களும் அகலும்.


No comments: