Pages

Friday, November 6, 2009

ஸ்ரீ காயத்ரி ஜப யக்ஞ அனுபவங்கள்.-5



ஒரே பிரச்சினை.

"என்ன பிரச்சினை?”
"வீட்டிலே ஜெ பாட்டுக்கு எப்ப பாத்தாலும் ஏதோ தியானத்திலே இருக்கான்.
எந்த வேலையை தேடவும் முனையலை. வாழ்க்கையிலே பிடிப்பே இல்லாத மாதிரி
இருக்கான்.”
ஏதோ பெரிய சமாசாரம் இது ன்னு தோன்றியது.
"அவரோட தினசரி வேலையை அவரே பாத்துக்கிறாரா?”
"பாத்துக்கிறார்.”
"அவரை அவர் போக்கிலேயே விட்டுங்க. மாத்த முயற்சி செய்ய வேணாம். தேவையானால் நான் வந்து உங்க அப்பா அம்மாகிட்டே பேசறேன்.”
வந்த தம்பி நான் வீட்டுக்கு வந்து ஜெ ஐ மாத்த முயற்சி செய்வேன்ன்னு நினைச்சார் போல இருக்கு. சரின்னு அரை குறை மனசோட கிளம்பி போனார். தொடர்பு
கொள்ளவே இல்லை.
அடுத்த வருடம் யக்ஞத்தில் ஜெ வெறும் பார்வையாளராக மட்டும் வந்து போனார்.
சிரித்துக்கொண்டே ஜபம் எல்லாம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். சில மாதங்களுக்குப்பின் ஜெ வுடன் அவர் தம்பி வந்து சேர்ந்தார்.
"என்ன விஷயம்?”
"இவர் பிரச்சினை அதிகமா இருக்கு.”
“????”
"சரி! இவன் ஆன்மீகத்திலேதான் போவான் போல இருக்குன்னு **** ஆசிரமத்திலே
கொண்டுவிட்டோம்.”
"ம்ம்ம்..”
"மூணு மாசத்துக்குள்ளே அவங்க போன் பண்ணி அழைச்சுண்டு போக சொல்லிட்டாங்க.”
"ஏன்!!!!!”
"இவர் பாட்டுக்கு உலாவ போயிடுவார். எங்கே போவார்ன்னு யாருக்கும் தெரியாது.
ஆளை காணோமேன்னு போய் தேடி அழைச்சுண்டு வரணும். ஆசிரம வளாகத்திலெ எங்கே வேணுமானால் இருப்பார். அங்கே எடுக்கிற வகுப்புகளிலேயும் கலந்துக்கிறதில்லை. ஒண்ணும் சரிப்பட்டு வரலை.
திடீர்ண்ணு பாத்தா கண்ணிலேந்ந்து கண்ணீர் வர மௌனமாக இருப்பார். ஆதனால்
அவர்கள் அழைத்து போக சொல்லிவிட்டார்கள். இப்ப என்ன செய்யறது?”
ஜெ வை "என்ன சமாசாரம்?"ன்னு கேட்டேன். அவர் சிரித்துகொண்டே எனக்கு ஒரு
பிரச்சினையும் இல்லை. இவர்கள்தான் கவலைப்படுக்கிறார்கள். என்னால் இவர்களுக்குத்தான் தொல்லை என்றார்.

"இதோ பாருங்கள்! இவரை என்ன செய்வது என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. நாளை **** போய் என் வழிகாட்டியை சந்திக்க இருக்கிறேன். அவரிடன் கேட்டு வருகிறேன். திங்கள் அன்று வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினேன்.

ஞாயிறு தாத்தாவை (யார் என்று தெரிகிறதல்லவா? என் வழி காட்டி) பார்க்கபோனேன். மற்ற விஷயங்கள் பேசிவிட்டு இவரை பற்றி சொன்னேன். அவர் "டேய்! அவர் என்ன ஸ்டேஜிலே இருக்கார் தெரியுமா? துரியத்திலே இருக்கார். அவருக்கு இப்போ மாத்ரு பாவத்துடன் ஒரு வழிகாட்டுதல் தேவை. **** ஐ போய் பாக்கச்சொல்" என்றார்.

கடலூர் திரும்பினேன். இரண்டு பேருமே மீண்டும் வந்தார்கள். சேதியை சொன்னேன்.
ஜெ சிரித்துக்கொண்டே "நான் **** இல் இருந்த போது சக பயணி ஒருவர் அவரிடம்
போகும்படித்தான் என்னிடம் சொன்னார்" என்றார். "சரி! அவரை சந்தியுங்கள்”
என்றேன்.
ஜெ கதை இத்துடன் முடிகிறது.
நீங்கள் கொஞ்சம் ஏமாந்து போவீர்கள் என்றூ தெரியும். இருந்தாலும் வேறு
வழியில்லை. அந்த குடும்பம் எங்கள் ஊரைவிட்டு போய்விட்டார்கள். பிறகு என்ன
ஆயிற்று என்று தெரியவில்லை.


No comments: